நாடு முழுவதும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரம்

படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கவச வாகனங்களைப் பயன்படுத்தி ரோந்து செல்லும் படையினர் இன்று (11) காலை கொழும்பில் ரோந்துப் பணியை ஆரம்பித்துள்ளதுடன், விஷேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கொழும்பு, புறக்கோட்டை, மிரிஹான, கிருலப்பனை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிந்தது.