இலங்கையிலிருந்து வெளியேறும் மக்கள்: இந்திய கடலோரத்தில் கண்காணிப்பு தீவிரம்

இந்திய கடலோரத்தில் கண்காணிப்பு

இந்திய கடலோரத்தில் கண்காணிப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் படகு வழியாக இந்தியாவில் தஞ்சமடையக் கூடும் என இந்திய பாதுகாப்பு முகமைகள் எச்சரித்துள்ளன.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கேராளவின் விழிஞம் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் துறைமுகத்துக்கு திரும்பும் மீன்பிடி படகுகளை கடலோர காவல்படையினர் கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.