காலிமுகத்திடல் போராட்டம்: ‘அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்’-  காவல்துறை அதிகாரி

காலிமுகத்திடல் போராட்டம்

காலிமுகத்திடல் போராட்டம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து, கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுடன் இணைந்த குறித்த காவல்துறை அதிகாரி,   “இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.

நாளை என்னை வேலையிலிருந்து நீக்க போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன். என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”, என்றார்.

Tamil News