இந்தோனீசியா நில நடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலி

A view of a damaged classroom following an earthquake in Cianjur, West Java province, Indonesia on Nov 21, 2022.

இந்தோனீசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும்  700 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் 300 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 என்றவாறு நிலநடுக்கம் பதிவானது. இது இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் அது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.