சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை : 8 பேருக்கு எதிராக நடவடிக்கை

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரையும் தங்கூசி வலையைப் பயன்படுத்திய ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடற்கரையோரமாக இருந்த தங்கூசி வலையும் கைப்பற்றப்பட்டது.

குறித்த எட்டுப்பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.