1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 இல் உலகநாடுகளில் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கம் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளது.
காணாமல்போதல் கடத்தல் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அரசாங்க அதிகாரிகளால் எவரும் காணாமலாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.கடந்த வருடம் காணாமல்போனவர்கள் அல்லது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என காணாமல்போனவர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.
யுத்தகால துஸ்பிரயோகங்கள் விடயத்தில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலும்இபொறுப்புக்கூறல் இன்மையும் இன்னமும் பிரச்சினைக்குரிய விடயங்களாக காணப்படுகின்றன.
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற காணாமல்போதலிற்கு தீர்வு காணப்படவில்லை.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் விசாரணைகள் அரசாஙங்கம் மற்றும் காணாமல்போனோர் அலுவலகத்திடமிருந்து பதில்கள் இன்மை போன்றவற்றில் போதிய முன்னேற்றம் இன்மையால் விரக்தியடைந்துள்ளனர்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணை உள்ள போதிலும்இபாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கான நிதி உதவி தகுதியை மதிப்பிடுதல்போன்ற விடயங்களிலேயே கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அணுகுமுறை குடும்பங்கள் மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டிய சுமையை சுமத்தியுள்ளது இது பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் மனக்காயங்களிற்கு உட்படுத்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
2008- 2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டது மற்றும் காணாமலாக்கப்பட்டது தொடர்பான நேவி 11 சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.இதில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கராணகொடவும் தொடர்புபட்டுள்ளார்.