Home Blog Page 3132

ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) – பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில், ‘இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கண்காட்சியில் இலங்கை உருவானது முதல் தமிழ் கலாசாரத்தின் தொன்மை வரையும், உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரையும் பல்வேறு அம்சங்களை விளக்கும் ஓவியங்கள், மாதிரி பொருட்கள், ஆவணப்படங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.7f2a4109 200b 47ad a470 aa3ecc13acc5 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.

இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ‘தமிழ் தகவல் நடுவம்’ஏற்பாடு செய்திருந்தது.

இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கையில், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருப்பதாகக் கூறினர்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்பிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், கலை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் தாம் விளக்கியிருப்பதாகவும் அவர்களை தெரிவித்தனர்.

அத்துடன் தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக அந்த அமைப்பை சேர்ந்த மற்றொருவர் கூறினார்.1504bc41 44a9 4943 8071 b22eda830a16 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.

மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின.

போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது என்று தெரிவித்தார் வேறொரு உறுப்பினர் .c3baea50 a0de 40e8 b630 680aee63343c ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.

இந்த கண்காட்சியில், உள்நாட்டுப் போர் குறித்த முக்கிய ஆவணங்கள், அறிக்கைகள், நூல்கள், விடுதலைப் புலிகளின் திருமணங்களில் கட்டப்பட்ட புலிப்பல் தாங்கிய தாலி ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின், 1983இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, பிரிட்டனுக்கு புகலிடம் தேடி வந்த இலங்கை தமிழர்களுடனான தனது நினைவுகளை பகிர்ந்ததுடன், அழிவுக்குள்ளான தமிழர்களின் அடையாளத்தை இந்த கண்காட்சியின் மூலம் உயிர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் அடுத்த சந்ததியினர் தங்களது பெற்றோர் கடந்து வந்த கொடுமைகளை முறையாக, முழுமையாக அறியும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

லண்டனில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை, பிரிட்டனின் தேசிய அருங்காட்சியகத்திலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் நிரந்தர கண்காட்சியாக வைப்பதே தங்களது இலக்கு என்று கூறும் தமிழ் தகவல் நடுவத்தினர், அடுத்ததாக கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இதே கண்காட்சியை நடத்துவதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.107109640 defacto ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.5ef4d3e5 71cb 4f94 acd3 32d51a7a229e ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார். 6b4b074b 5489 4a37 a3bb e8fbb864f919 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார். 44e4aec0 58a9 42e8 b2b3 ff6f9bc28bcc ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார். 096cdbfe 4271 49f1 bac6 4195b4fe96cb ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.a96c0799 f7b9 4cd8 85e9 d99d154f41d4 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.096cdbfe 4271 49f1 bac6 4195b4fe96cb ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.31915b64 7162 486e a502 a83c7e65e7c8 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.88cbadf1 14dc 4092 8f97 01da7dd6f59e ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.34 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.2 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.69cdd67a beca 4ab3 a62c a150247cdacb ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.f3403156 e07c 435d 9b29 30ab81b8e915 1 ஈழத் தமிழர் வாழ்வியலை கண் முன் நிறுத்திய கண்காட்சி(ஒளிப்படத் தொகுப்பு) - பிரிட்டனின் எதிர்க்கட்சி தலைவர்  திறந்துவைத்தார்.

வீதியோரத்தில் கூட போராட முடியாத அவலம் – கனகரஞ்சனி

வீதியில் கூட நாம் போராட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டோம். முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்களை கொடுத்து பத்தாண்டுகளாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் கூறுமாறு கோருகின்றோம் என வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் கிளிநொச்சி இணைப்பாளர் கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது உரிமைகளை வழங்குமாறு கோரி நின்ற எம்மீது தொடுக்கப்பட்ட போர் எங்களின் உறவுகளையும், உடமைகளையும், இல்லாதொழித்தது.

இதனை விட போரின் ஈற்றில் எமது உறவுகளை நாம் எமது கைகளாலேயே ஒப்படைத்தோம். சரணடைவதை நேரில் கண்டோம். அனைத்துக்கும் சாட்சிகள் உள்ளன. ஆனால் இன்று வரையில் அந்த உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை எம்மால் அறிய முடியாதுள்ளது.

நாம் தேடாத இடங்கள் இல்லை. பார்க்காத நபர்கள் இல்லை. ஆனால் எம்மை அவ்வப்போது சமாதானப்படுத்தும் கதைகள் கூறப்பட்டதோடு ஆணைக்குழுக்களும் நிறுவப்பட்டு கால இழுத்தடிப்புத்தான் செய்யப்பட்டது. தற்போது வரையில் எமது உறவுகளை காணாது கண்ணீருடன் காத்திருக்கின்றோம்.

எமது வாக்குகளைப் பெற்று எமக்கு தீர்வளிப்பதாக கூறிய தலைமைகளும் ஜெனீவாவிற்குச் சென்று எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்க எமது அனுமதியைப் பெறாது அரசாங்கத்திற்கு சாதகமாக தலை அசைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.

தலைமைகளை நம்பி ஏமாந்து விட்டோம். எமக்கான கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கு நாமே போராட்டங்களை தொடராக முன்னெடுத்தோம்.

ஆனால் நாட்டின் நிலைமை அதனையும் முடக்கும் சிந்தனையாளர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதாகவே இருக்கின்றது. வீதியில் கூட நாம் போராட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டோம். முள்ளிவாய்க்காலில் எமது சொந்தங்களை கொடுத்து பத்தாண்டுகளாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் கூறுமாறு கோருகின்றோம்.

இதனை சர்வதேசம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எமது நியாயமான கோரிக்கைக்கு தலைசாய்க்க வேண்டும். சர்வதேசம் இனியாவது எமக்கான நியாயத்தினை நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அமெரிக்கா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயார் – ஈரான்

அமெரிக்கா தம்மீது எவ்வகையான போரை தொடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்துள்ளார்.

பக்தாத்தில் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வளைகுடா நாடுகளுடன் ஒத்துழைத்துப் போகவே ஈரான் விரும்புகிறது. ஆக்கிரமிப்பு போர்களுக்கு எதிராக அந்நாடுகளுடன் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.

இராணுவ போரோ, பொருளாதாரப் போரோ எதுவாக இருந்தாலும் அதை ஈரான் எதிர்கொள்ளும். வளைகுடாப் போரில் எண்ணெய்க் கிணறுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. அதன்பின்னரே இரு நாடுகளுக்குமிடையில் மோதல் நிலை நீடித்து வருகிறது.

ஈரான் மீது பொருளாதாரத்  தடைகளை விதித்தாலும் ஈராக்கிற்கு ஆதரவாகவே அமெரிக்கா செயற்படுகின்றது.

கன்னியா வெந்நீரூற்றை காப்பது தமிழர் கடமை

கன்னியா வெந்நீருற்று ஈழத்தில், சைவத் தமிழரின் பாரம்பரிய சொத்து. அந்த புனிதப் பிரதேசத்தைப் பாதுகாப்பது ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் கடமையும் உரிமையும் ஆகும் என சைவப் பேரவையைச் சேர்ந்த பிருந்தாபன் பொன்ராசா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மூன்று தசாப்த காலம் முப்படையுடன் போராடிய தமிழர் இனம் இன்று கையறு நிலையில் நிற்பதைப் பயன்படுத்தி பௌத்த – சிங்கள தேசம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை தொல்லியல் சின்னங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பதும் பின்னர் அதை பௌத்த பிரதேசம் ஆக்குவதும் தொடர் கதையாகி வருகின்றது.

தமிழரின் தொன்மை வழிபாட்டிடம் கதிர்காமம் ஏற்கனவே பறிபோய்விட்டது. திருக்கோணேஸ்வரத்தைச் சுற்றிலும் படை முகாம். அதுவும் விரைவில் சிங்களப் பிரதேசம் ஆக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, வெடுக்குநாறிமலையை கையகப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாய் பிரதேசமும் பௌத்த சிங்களப் பூமி ஆக மாற்றப்பட்டு வருகின்றது. அங்கு ஏற்கனவே பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கன்னியாய் வெந்நீருற்றுப் பிரதேசம் பௌத்த – சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தை அப்புறப்படுத்திவிட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கு பௌத்த பிக்குகள் துடியாய்த் துடிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பைத் தட்டிக் கேட்பதற்கு அப்பிரதேசத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

குறித்த விடயத்தில் திருகோணமலை தென்கயிலை ஆதீனம் அதிக அக்கறை எடுத்துச் செயற்பட்டு வருகின்றது. கன்னியாய் பிரதேசம் பறிபோய்விடக்கூடாது என்பதில் தென் கயிலை ஆதீனமும் அங்குள்ள சைவத் தமிழர்களும் அதிக கவனத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளாரின் வழிகாட்டலில், அவரின் தலைமையில் சென்ற அணியொன்று அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இவ்விடயத்தை மனோ கணேசன் கையாள்வது குறித்து திருகோணமலையைச் சேர்ந்த மக்களும் ஏனைய இடங்களைச் சேர்ந்த சைவத் தமிழ் மக்களும் மனோ கணேசனுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது ஆக்கிரமிப்பிற்கு உள்ளான காணியின் சொந்தக்காரியான, திருகோணமலை மடத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தா கோகுலராணி என்பவர், அதற்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளார் என அறிவித்துள்ளார்.

தமக்கு சட்டத்தரணிகளின் உதவி தேவை என அவர் அறிவித்திருந்த நிலையில், அவர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அமரர் கந்தையா நீலகண்டனின் மகன் சட்டத்தரணி பிரணவன் ஆஜராக முன்வந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொல்கொத்தா ஏயார் ஏஷியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா கொல்கொத்தா விமான நிலையத்திலுள்ள எயார் ஏஷியா விமானத்தில்  (ஐ 5 – 585) வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விமானத்தினை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிவித்தல் பெங்களுர் விமான நிலையத்திற்கே வந்தது. இந்த அறிவித்தல் கொல்கொத்தாவிற்கு அனுப்பப்பட்டது. இதேவேளை இந்த விமானத்தில் 179 பயணிகள் ஏறி, விமானம் கொல்கொத்தா நோக்கி புறப்பட்டு விட்டது.

கொல்கொத்தாவில் விமானம் தனியாக நிறுத்தப்பட்டதும், விமானத்தை சுற்றிவளைத்த CSIF  பாதுகாப்பு வீரர்கள் விமானத்தை சுற்றிவளைத்து, அதிலிருந்த 179 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.

CSIF வீரர்கள் விமானத்திற்குள் ஏறி கடுமையான சோதனையை மேற்கொண்டனர். சோதனை முடிவுகள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

 

 

தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற்பாடுகளும் அவசியம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ

நேர்காணல் இறுதி பகுதி……

சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்புக்கும்  போர்க்குற்றங்களுக்கும் .நாவின் ஊடாக நீதியைப் பெற்று கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா

தாயகத்திலே எமக்கான நீதி கிடைக்க முடியாதென்ற நிலையில் ஐ.நாவினூடாக எமக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை அநீதிக்குள்ளான ஒரு பேரினம் தன்னாலான முயற்சிகளை நிச்சயம் காத்திரமான முறையில் மேற்கொண்டே ஆக வேண்டும். திட்டமிட்ட முறையில் எமது வளங்களை ஒழுங்குபடுத்தி இடைவிடாத முயற்சியை தமிழர் தரப்பு ஒரே நிலைப்பாட்டோடு மேற் கொண்டால் கால ஓட்டத்தில் எதுவுமே சாத்தியமானதுதான். அதற்கு தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற் பாடுகளுமே பிரதானமாக இருக்க வேண்டும். சுயநிர்ணய உரிமைகோரி போராடும் இனங்களின் தேசத்தினை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமெனில் ஐ.நா பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பெருமான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழர் இனவழிப்பை ஐக்கிய நாடுகள் சபையிலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ நிருபிப்பதற்கு என்ன வகையான  பொறிமுறைகள் இருக்கின்றன?

நாம் முதலில் தமிழினப் படுகொலை தொடர்பில் நெதர்லாந்து நாட்டின் கெக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும்  சர்வதேச கூட்டணிகளுடன் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் ஜெனீவாவில் உள்ள ஐ.நா சபை பொறிமுறைகள் மட்டுமல்லாது வியன்னா மற்றும் நியூயோர்க் ஆகிய இடங்களிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் பிராந்திய நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றுடனும் ஏனைய பிராந்திய அமைப்புக்களுடனும் இணைந்து செயலாற்ற வேண்டும். இறுதியாக தமிழினப் படுகொலைக்கு தீர்வு காணும் முகமாக ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றங்களுடனும் இணைந்து வேலைசெய்ய வேண்டிய தேவையுள்ளது. தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தரப்பினரும், சாட்சியாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடருக்கும் வருகைதர வேண்டும். அத்துடன் தமிழர் அமைப்புக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். அத்தோடு ப்ரஸ்செல்ஸ் மற்றும் யெனீவாவில் வசிக்கின்ற இளம் சமுதாயத்தினர் ஆகக்குறைந்தது 25 பேராவது எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

தற்போது தாயகத்திலே தீவிரமடைந்துள்ள கட்டமைப்புசார் இன வழிப்பை தடுப்பதற்கு .நா மன்றத்தின் மூலமாக எத்தகைய நடவடிக்கைகள் மேற் கொள்ளலாம்?

நாங்கள் ஒவ்வொரு ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரின் போதும் பக்கவறை நிகழ்வுகளின் ஊடாகவும் எழுத்து மற்றும் வாய்மூல அறிக்கைகள் ஊடாகவும் சர்வதேசத்திற்கு தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு தொடர்பாக தெரியப்படுத்தி வருகின்றோம். அத்துடன் ஐ.நா.சபை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கும் மனித உரிமைகள் ஆணையா ளருக்கும் அனைத்து நாடுகளுக்குமான கால மீளாய்வு பொறிமுறைக்கும் (UPR Process) ஒப்பந்த அடிப்படையிலான நாடுகளு க்கும் தாயகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள்  சபையின் செயற்பாடுகள் ஒரு வருடத்தில் 250 நாட்கள்  இடம்பெறுகின்றன. ஆனால் நாம் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் மாத்திரமே அங்கு செல்கின்றோம். மற்றும் ஐ.நா. சபையின் பிரிவுகளான ஐ.நா. பொதுச்சபை,  ஐ.நா பாதுகாப்பு சபை, ஐ.நா  பெண்கள் அமைப்பு, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக குழு (ECOSOC) யுனெஸ்கோ, யுனிசெப் மற்றும் ஒலிம்பிக் குழு ஆகிய அனைத்து பொறி முறைகளையும் நாம் உரிய வகையில் பயன்படுத்தி செயற்பாடுகளை முன் னெடுக்க வேண்டும்.

இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ செய்யத்தவறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பொதுமக்களின் பாதுகாப்பிற்கான கடப்பாடு என்பது  ஐ.நா பாதுகாப்புச் சபையில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஒரு சர்வதேச பாதுகாப்பு மற்றும் மனித உரிமைக்கான விழுமியம் ஆகும். இவ் விழுமியம் ஆனது சர்வதே அமைப்புக்க ளூடாக ஏற்கனவே இடம்பெற்ற இனவழிப்புக்கள் மற்றும் எதிர்காலத்தில் இனவழிப்பு ஒன்று இடம்பெறாமல் தடுப்பதற்காகவும், போர்க்குற்றம், இனச்சுத்தி கரிப்பு மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுப்ப தற்கே ஏற்படுத்தப்பட்டதாகும்.

இவ் விழுமியத்தின் முதல் தீர்மானமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற பின்னரே ஐ.நா. பொதுச்சபையில் செப்டெம்பர் 14 2009 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தீர்மானம் ஆனது (A/RES/63/308) கௌதமாலா நாட்டின் பிரதிகள் மற்றும் 67 உறுப்பு நாடுகளின் இணை அனுசர ணையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது பாதிக்கப்பட்ட தரப்பாகிய நாம் ஐ.நா பொதுச்சபையுடன் இணைந்து வேலை செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கயை எடுப்பதுடன் சரியான வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்தின் ஊடாக நகர்த்திச் செல்ல வேண்டும். விசேடமாக இத் தீர்மானத்தை அறிமுகப்படுத்திய கௌதமாலா நாட்டுடனும் அதனுடன் இணைந்த செயற்பட்ட உறுப்பு நாடுகளுடனும் ஆழமாக வேலை செய்ய வேண்டும்.

இலங்கை அரசு .நாவின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளவேண்டும்.

தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தீர்மானம் மற்றும் கனடா நாடளுமன்றத் தீர்மானங்கள் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச நாடுகளின் பிராந்திய மற்றும் தேசிய நாடாளுமன்றங்களுடன் இணைந்து தமிழ் உரிமை ஆர்வலர்கள் பணியாற்றல் வேண்டும். இதனூடாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலுள்ள நாடுகளிற்கு ஓர் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வலுவான முன் முயற்சியெடுக்க அழுத்தம் கொடுக்க முடியும். ஐ.நா முகவர் மட்டத்தில் அதன் தீர்மானங்களையும் செயற்பாடு களையும் ஆதரிக்கக் கூடிய நாடுகளைக்கொண்ட ஓர் குழுவை நாம் உருவாக்க வேண்டும்.

இவ் ஆதரவைப் பெற்றுக்கொள்ள அந் நாடுகளுடனிணைந்து வேலை செய்வதுடன், அதன் பாராளுமன்றங்களில் தமிழினவழிப்பை அங்கீகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றல் வேண்டும் அவ் வகையில் நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான செயற்பாட்டு வரைபு எம்மிடம் இருத்தல் அவசியம். தமிழீழத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்த பாரிய பிரச்சாரம்:

 உயர் பாதுகாப்பு மண்டலம் மற்றும் பொது மக்கள் மீதான அதன் விளைவு

 சிறுவர்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பின்  விளைவு

 பெண்கள் மீது இராணுவ ஆக்கிரமிப்ப்பின் விளைவுகள்

 தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவு

30/1, 34/1 மற்றும் 40/1 தீர்மானங்களை செயல்படுத்தாமை தொடர்பான அறிக்கைகள்

தமிழர்கள் ஏன் OMP அங்கீகரிக்கவில்லை என்பது குறித்த அறிக்கை

PTA மற்றும் CTA பற்றிய அறிக்கைகள்

இதில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களின் வகிபாகம் மற்றும் நகர்வுகளை எவ்வாறு பார்கின்றீர்கள்?

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் தமிழ் அரசியல் வாதிகளின் எந்தவொரு வகிபாகமும் இருக்கவில்லை. மாறாக மேற்படிதீர்மானங்கள் நிறை வேற்றப்பட்ட பின்னர் மேற்கத்தைய நாடுகளின் ஊடகப் பேச்சாளார்களாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதன் மூலம் தமிழீழத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பினை மறுத்து நிற்கின்றனர்.

 

 

 

வடக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு எச்சரிக்கை விடுத்த சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடந்த பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக கடையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாளைய தினம் ஆளுனர் தலைமையில்  நடைபெற உள்ளது.

இந்நியமனம் வழங்குவதற்காக தெரிவுசெய்யபட்வர்களில் பெரும்பாலானவர்கள் ஒருநாள் கூட சுகாதார தொண்டராக கடமையாற்றாதவர்களுக்கும் ஜந்து வருடங்களில் ஓய்வூதியத்திற்கு செல்வபவர்களுக்கும் மற்றும் அரசியல்வாதிகளின் நேரடி
சிபரிசிலும் இந் நியமனப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நியமனம்
வழங்கப்படவுள்ளது.

இதனால் உண்மையாக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மிக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஊழியர்களும் கணவனை இழந்த பெண்களும் இந் நியமனத்தில் இருந்து புறக்கணிக்கபட்டுள்ளனர்.

நியமனம் வழங்கும் பெயர்பட்டியலில் தகமை இல்லாதவர்களை முன்னிலைப்படுத்தியும் தகமையுள்ளவர்களை பெயர்பட்டியலின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளதோடு ஆட்சேர்ப்பு செய்வதிலும் பல முரன்பாடான நிலமை காணப்படுகின்றது என பாதிக்கப்பட்ட சுகாதாரதொண்டர்கள் தெரிவிக்கின்றனர் உதாரணமாக தரம்-9 கற்றிருப்பவர்களுக்கே இந் நியமனம் வழங்கப்படுவதற்கான அடிப்படை தகமை உள்ளது என தெரிவித்து  கா.பொ.த சாதாரண தரம் சித்தியெய்தியவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்படமுடியாது என பல தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர் ஆனால் அதே நேரத்தில் க.பொ.த.உயர்தரம் தேர்சிபெற்றவர்களையும் இவ் நியமனத்திற்குள் உள்வாங்கியுள்ளனர் இச்செயற்பாடானது ஆட்சேர்பு செய்வதில் உள்ள முரன்பாட்டை தெளிவாகாட்டுகின்றது.

நாளைய தினம் நியமனம் பெறவுள்ள சுகாதார தொண்டர்களின் நியமனப் பெயர் பட்டியலை மீளாய்வு செய்து குறுக்கு வழியிலும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி நியமனம் பெறவுள்ளவர்களையும் பணத்தை கொடுத்து நியமனத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்களையும் பெயர்பட்டியலில் இருந்து நீக்கி உண்மையாக அரப்பணிப்புடன் பணியாற்றியவர்களிற்கு இவ் நியமனத்தை வழங்குவதற்கு வடமாகாண ஆளுனர் சுரேன்ராகவன் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கபட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் எனவும் தவறும்
பட்சத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களை இலக்காக கொண்டு தவறானவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்படுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிர்வரும் தேர்தல்களில் உரிய பதிலை வழங்கவேண்டி வரும் என பாதிக்கபட்ட சுகாதார தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக செயற்படுகிறது – அமைச்சர் மனோ கணேசன்

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்று சர்ச்சை நிலைவியை அடுத்து இந்த விவகாரம் குறித்து இந்து கலாச்சார அமைச்சராக உள்ள அமைச்சர் மனேகணேசன் தலைமையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘இந்த நாட்டின் தொல்லிய திணைக்களம் ஒரு இனவாதத் திணைக்களமாக செயற்படுகிறது’ என தெரிவித்தார்.

தென்கைலை ஆதீனம் முன்னிலை வகிக்க இந்து கலாச்சார அமைச்சர் தலைமையில் கன்னியா வெந்நீருற்று சைவத்தமிழ் மரபுரிமைகளை பாதுகாக்கும் கலந்தாய்வில் குருமார்கள் , பணிப்பாளர், அறங்காவலர், சட்டத்தரணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், அமைப்பு சார் பிரதிநிதிகள் கலந்து மிகக் காத்திரமான அரசியல், சட்ட , நிர்வாக திணைக்கள ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.FB IMG 1558873550463 தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக செயற்படுகிறது - அமைச்சர் மனோ கணேசன்

இந்நிலையில் தகவிலினை பெற்ற அமைச்சர் மனோகணேசன் எதிர்வரும் வாரம் திருகோணமலைக்கு சென்று இதுகுறித்து கலந்துரையாடலை நடத்தவுள்ளேன் இதன் மூலம் தமிழ் இந்து மக்களுக்கு எதிரான இந்த அநீதியை நிவர்த்தி செய்யவேண்டிய கடப்படாகும். இதன்மூலமே நாட்டில் உண்மையான தேசிய ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்ப முடியும். எல்லா மதங்களையும், எல்லா இனங்களையும் எல்லா மொழிகளையும் பிரதிநிதித்துப்படுத்தும் வரலாற்றினை எடுத்துக்காட்ட வேண்டும் எவ்வளவு கஸ்டமான காரியங்களானாலும் கூட இவற்றை செய்ய எனது அமைச்சு அமைச்சர் என்ற ரீதியில் நான் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

திருகோணமலையில் தற்போது இடம்பெற்றுவரும் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்களத்தால் திருமலை மாவட்ட தமிழ் மக்களின் மக்களின் பாரம்பரிய உரிமைகள் – மத,இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்பட்டுக்கொண்டிருப்பதுநிரூபணமாகியுள்ளது. ஒரு இனத்தின், ஒரு மதத்தின் அடாத்தான எண்ணப்பாடுககளை நடைமுறைப்படுத் கூடிய ஒரு அரசாங்கம் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவ்வரசாங்கத்தில் நான் இருக்க முடியாது .என்னைப்போல் பலர் இருக்கமுடியாது.

வடக்கு கிழக்கில்,குறிப்பாக திருகோணமையில்,முல்லைத்தீவில், வவுனியாவில், மட்டக்களப்பில் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடிய திணைக்களமாக இனவாதத் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரணதண்டனை.

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சிறியப்படலால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகளை விடுவிக்க மைத்திரி இணக்கம்

அவசரகாலச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல் கைது செய்யப்பட்டிருக்கும் அல்லது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொது மக்களை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்

இவர்களின் வேண்டுகோளை தாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாகவும், இதுபற்றி மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்திலும் தாம் கூறியிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிலமை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினார்.

இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் M.H.A.ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா, அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா, பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.பௌஸி. தௌபீக் M.I.M.மன்சூர் போன்றோர் கலந்து கொண்டனர்