Home Blog Page 3117

‘இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது’ – இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? – பிபிசி தமிழ்

இந்து மாமன்றம்

இலங்கையில் நிலைகொண்டுள்ள மதத் தீவிரவாதத்திற்கு மாத்திரமே எதிராக செயற்படுவதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் தெரிவிக்கின்றது.

முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த சம்மேளனத்தின் தலைவர் நாரா.பி.அருண்காந்த் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள், இஸ்லாமியவாத தீவிரவாத செயற்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான இஸ்லாமியவாத தீவிரவாதத்திற்கு எதிராகவே தாமும் களமிறங்கிய பௌத்த தேரர்களுடன் போராட்டங்களை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.download 'இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது' - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? - பிபிசி தமிழ்

பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சில முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது மாத்திரமே தாம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததாக கூறிய அவர், ஆனால் அனைத்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் பதவி விலகியமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் ராஜதந்திர ரீதியாக செயற்பட வேண்டிய காலம் இதுவென அருண்காந்த் குறிப்பிடுகின்றார்.

சிலோன் தௌஹித் ஜமாத்

‘ஒரு மனிதனை வாழ வைத்தவன், முழு மனித சமூகத்தையே வாழ வைத்தவனாக கருதப்படுகின்றான், ஒரு மனிதனை கொலை செய்தவன், முழு மனித சமூகத்தையே கொலை செய்தவனாக கருதப்படுகின்றான்.”

இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்-குரான் வசனங்களின் மூலமே உறுதிப்படுத்தப்படுவதாக சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் துணை செயலாளர் எம்.எப்.எம்.ரஷ்மீன் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒன்று கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதத்திற்கு முழுமையான எதிர்ப்பை கொண்ட மார்க்கமே இஸ்லாம் எனவும் கூறுகின்றார்.

இந்த நிலையில், பேரினவாத பௌத்த பிக்குகளின் பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தீர்மானங்கள் எட்டப்படுமாக இருந்தால், அது ஜனநாயக நாடு என்ற வகையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறான அடிப்படைவாதிகள் கருத்துகளை கேட்டு, செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எம்.எப்.எம்.ரஷ்மின் குறிப்பிடுகின்றார்.attack sl 2019 'இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது' - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? - பிபிசி தமிழ்

அரசியலமைப்பை தாண்டி, அதிகாரங்களை ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ கைகளில் எடுக்குமாக இருந்தால், அந்த செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை, முஸ்லிம்கள் ஒன்றிணைவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தபோதும், முஸ்லிம் சமூகம் அதனை தவறவிட்டதாக எம்.எப்.எம்.ரஷ்மின் கூறுகின்றார்.

அருந்தந்தை சக்திவேல் (கிறிஸ்தவப் பாதிரியார் )

மன்னாரின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களினால், இந்துக்களின் அலங்கர வளைவு பலகை சேதமாக்கப்பட்ட விவகாரத்தின் ஊடாகவே, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் சந்தர்ப்பத்தில், இந்து மற்றும் பௌத்த மதவாதிகள் ஒன்றிணைந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.sakthivel 572x400 'இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது' - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? - பிபிசி தமிழ்

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியுடன் தமிழர்களை தமது கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாக நம்பும் பெரும்பான்மை சமூகம், தற்போது முஸ்லிம்களை தமது கைகளுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இன்று இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.

பௌத்த பேரினவாத பிக்குகளின் போராட்டங்களினால் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிக்ள பதவி விலகியமையானது, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி என அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகிய பின்னணியில், ஆளுநராக முஸ்லிம் ஒருவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளமையானது, ஒரு காட்டிக் கொடுப்பாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் தற்போது இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அனைத்தும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே தாம் கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார்.

சிங்கள பௌத்த பேரினவத்தற்கு எதிராக கருத்துத் தெரிவித்த மூன்று சிங்கள அமைச்சர்களுக்கு தடை

முக்கியமான இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரை இனிமேல் விகாரைகளுக்கு அனுமதிப்பதில்லை என்று தென்னிலங்கையின் பௌத்த சங்கம் ஒன்று தீர்மானித்திருக்கிறது.

கம்பஹா மாவட்ட பௌத்த சங்கமே இந்த தீர்மானத்தை நேற்றிரவு மேற்கொண்டுள்ளது.

இதன்படி அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன ஆகியோரையே கம்பஹா மாவட்டத்தின் எந்தவொரு விகாரை நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லையென மாவட்ட பௌத்த சங்க சபை தீர்மானித்துள்ளது.

குறித்த மூவரும் தமது மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட காரணத்தாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்படி பௌத்த மகா சங்கச் சபை கூறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு விசாரணைகளை உடன் நிறுத்துமாறு மைத்திரி பணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்க ள் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் நடத்தப் பட்டுவரும் விசாரணை விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் கருஜயசூரயவிடமும் ஜனாதிபதி இந்த உத்ரவை விடுத்தார்.

தெரிவுக்குழுவின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாதென ஜனாதிபதி பணித்திருந்த நிலையில் நேற்றையதினமும் அதனை ஒளிபரப்புச்செய்ய தெரிவுக்குழுவினர் முயற்சித்தவேளை அதனை ஜனாதிபதி தடுத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் ஒளிபரப்பு விடயம் குறித்து பேச்சு நடத் தினார்.இதன்போது ஒளிபரப்பை மட்டுமல்ல தெரிவுக்குழு விசாரணைணையே உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்தும் விசாரணையை தொடர்ந்துட மேற்கொண்டால் நாடாளு மன்றையே ஒத்திவைக்கவேண்டிய நிலை ஏற்படலாமென நேற்றுமுன்தினம் பிரதமர் ரணிலை சந்தித்தவேளை ஜனாதிபதி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணுக்கழிவுகளை புதைக்கும் இடமாக தமிழ்நாடு- கொந்தளிக்கும் மக்கள்

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் ஜூலை 10ந்தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்பபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 22 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 2அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் மேலும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவ தாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் மையம் அமைக்க கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில், கூடங்குளத்தில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற நீதிமன்றத்தில் கேள்விக்கு, தேசிய அணுமின் கழகம், நாட்டில், அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்றும், `கூடங்குளத்தில் உற்பத்தி யாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போகிறோம்’ என தெரிவித்தது. அத்தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் கர்நாடகா, தங்கள் மாநிலத்தில் அணுக்கழிவுகளை கொட்ட விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10ந்தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

இந்த கருத்துக்கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் இந்த கூட்டம் நடை பெறும் என்றும், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களை கொண்டு வந்து, தமிழகத்தை சுடாகாடாக மாற்றி வரும் மத்தியஅரசு, தற்போது அணுக்கழிவு களை பாதுகாக்கும் மையம் அமைக்க கூடங்குளத்தையே தேர்வு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் உலக நாடுகளே திணறி வரும் நிலையில், இந்தியா கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க முன்வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை நிர்முலமாக்க மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளதுபோலும்

இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் – பதியுதீன்

என்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.அதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.

அத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம்.இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக பயங்கரவாதம் இந்த நாட்டில் புகுந்து இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்காத பயங்கரவாதத்தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுடன் அப்பாவி 22 இலட்சம் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வகாபிவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற அரசியல்வாதிகள் இந்தப் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உருவாகியுள்ளனர். முஸ்லிம்களையும் உலமாக்களையும் மிக மோசமான வார்த்தைகளால் பேசுகின்ற செயற்பாட்டினை நாம் பார்க்கின்றோம்.அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன.

நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உணர்வோடுதான் இன்றுவரை முஸ்லிம் சமூகம் உள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத செயலை கண்டித்ததோடு மட்டுமல்லாது அந்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சொந்தங்களாக,நண்பர்களாக இரத்த உறவுகளாக இருந்தாலும் கூட அவர்களைக் காட்டிக்கொடுக்கும் பணியை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணைந்த வடக்கு கிழக்கில் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்- விக்னேஸ்வரன்

இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தை நடைபெறுவரும் நிகழ்வுகள் காட்டுவதாகவும் அத்தகைய ஒரு கட்டமைப்பு மட்டுமே இரண்டு சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் இன்று செய்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார பலத்தை இலக்குவைத்து பௌத்த பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பேராபத்தை உணர்ந்துகொண்டு வெவ்வேறு கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் இதனை வெகுவாகப் பாராட்டுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரித்து தேவையெனில் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றஞ்செய்யாதவர்களையும் பெரும்பான்மையினம் தண்டிக்க விழைவது எந்த விதத்திலும் மன்னிக்க முடியாதது என்றும் அவர் தம் அறிக்கையில் கூறியுள்ளார்

டென்மார்க்கில் சாதனை படைத்த இரு ஈழத்தமிழர்கள்

டென்மார்க்கில் வசித்து வரும் ஜனார்த்தன், வாகீசன் ஆகிய இரண்டு ஈழத் தமிழர்களும் டென்மார்க் விமான நிலைய பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள்  குவிந்தவண்ணம் உள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை 70 விகிதத்தால் வீழ்ச்சி – நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் சிறீலங்கா

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்காவுக்கவுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 70 விகிதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சிறீலங்காவின் சுற்றுலா மேம்பாட்டுத்துறைத் தலைவர் கிசோ ஹேம்ஸ் நேற்று (04) தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் மூன்று ஆடம்பர விடுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம். அதன் பின்னர் பெருமளவான பயணிகள் சிறீலங்காவைத் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த வருடம் மே மாதம் 129,000 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்த போதும், இந்த வருடம் மே மாதம் 37,000 பயணிகளே சிறீலங்காவுக்கு வந்திருந்தனர்.

இந்த வீழ்ச்சியானது ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் 30 தொடக்கம் 40 விகிதமாக குறைவடையலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் பிரதான வருமானத் துறையான சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி சிறீலங்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு சமுர்த்திக் கொடுப்பனவு

முல்லைத்தீவில் நீண்ட காலமாக வழங்கப்படாதிருந்த சமுர்த்திக் கொடுப்பனவு எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வைத்து வழங்கப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3ஆயிரத்தி697 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 6ஆயிரத்து 11 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கில் 657 குடும்பங்களுக்கும், துணுக்காயில் 642 குடும்பங்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 1758 குடும்பங்களுக்கும், வெலிஓயா(மணலாறு) பிரதேசத்தில்878 குடும்பங்களுக்கும் என ஆக மொத்தம் 13ஆயிரத்து 643 குடும்பங்களுக்கான சமுர்த்தி திட்ட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவில் நடைபெறும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வழங்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு தெரிவுக்குழு அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தேர்வு குழு (PSC) காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை தேய்வுக்குழுவின் முன் சமூகமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பொறுப்பாளரான பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) மற்றும் CID மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (TID) ஆகியோரை முதலில் அழைத்து விசாரிப்பதற்கு முன்னர் திட்டமிட்டிருந்ததாக தெரிவுக்குழுத் பிரதித் தலைவர் ஜயபிட்டி விக்ரமரத்ன தெரிவித்தார்.

“ஐ.ஜி.பீ, மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடமிருந்து முதன்முதலில் சான்றுகளை பெறுவது சிறப்பாக இருக்கும் என்று தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

நடப்பு பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டகொட தேசிய புலனாய்வு முன்னாள் டி.ஐ.ஜி. சிசிர மென்டிஸ் மற்றும் டி.டி.ஐ யின் முன்னாள் பணிப்பாளர் டி.ஐ.கே. நலகா டி சில்வா ஆகியோர் இதுவரை PSC க்கு முன் சான்றுகள் வழங்கியுள்ளனர்.