பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு தெரிவுக்குழு அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தேர்வு குழு (PSC) காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை தேய்வுக்குழுவின் முன் சமூகமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பொறுப்பாளரான பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) மற்றும் CID மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (TID) ஆகியோரை முதலில் அழைத்து விசாரிப்பதற்கு முன்னர் திட்டமிட்டிருந்ததாக தெரிவுக்குழுத் பிரதித் தலைவர் ஜயபிட்டி விக்ரமரத்ன தெரிவித்தார்.

“ஐ.ஜி.பீ, மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடமிருந்து முதன்முதலில் சான்றுகளை பெறுவது சிறப்பாக இருக்கும் என்று தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

நடப்பு பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டகொட தேசிய புலனாய்வு முன்னாள் டி.ஐ.ஜி. சிசிர மென்டிஸ் மற்றும் டி.டி.ஐ யின் முன்னாள் பணிப்பாளர் டி.ஐ.கே. நலகா டி சில்வா ஆகியோர் இதுவரை PSC க்கு முன் சான்றுகள் வழங்கியுள்ளனர்.