Home Blog Page 3029

அடாத்தான விகாரை அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்தமை தொடர்பான இரண்டாவது வழக்கு விசாரணைகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில்  குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் இந்நிலையில் ஆறாம் மாதம் ஆறாம் திகதி இரு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் குறித்த விடயம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் (10.06.2019) அன்று வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்றைய தினம் (26.08.2019) இரண்டாவது வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ,ஆலய நிர்வாக சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.

‘சித்திரவதை – ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி’ – வெளிவரும் கொடூரங்கள்

“இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த  ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது.
நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது.”

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கைதிகள் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு உள்படுத்தப்படுகின்றனர் என மனிதவுரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இதில் நீரில் அமுக்கி மூச்சுத்திணறச் செய்தல், தூங்கவிடாது தடுத்தல் மற்றும் பாலியல் ரீதியான சித்திரவதைகள் போன்றவை அடங்கும் என்று இரண்டு உரிமை அமைப்புகளின் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளன.

திங்களன்று வெளியிடப்பட்ட 560 பக்க அறிக்கையில், காஷ்மீரிகளுக்கு எதிரான சித்திரவதை நுட்பங்களாகப் பயன்படுத்தப்படும் தனிமைச் சிறைவாசம், தூங்கவிடாது தடுத்தல், மற்றும் பாலியல் பலாத்காரம் மற்றும் உள்ளிட்ட பாலியல் ரீதியான சித்திரவதைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் மின்சாரம் பாய்ச்சுதல் , கட்டித் தொங்கவிட்டல் , கைதிகளின் தலையை நீரில் மூழ்கடிப்பது (இது சில நேரங்களில் மிளகாய் தூளுடன் கலக்கப்படுகிறது) போன்ற மற்ற சித்திரவதை முறைகளும் அங்கு இடம்பெறுவதாக காணாமல் போனோரின் பெற்றோர் சங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி போன்ற அமைப்புகள் தெரிவிக்கின்றன.

‘சித்திரவதை போது கைதிகள் நிர்வாணமாக நிர்வாணமாக்கப்பட்டு , மரக் குச்சிகளால் தாக்கப்பட்டனர். உடற்பகுதிகள் சூடாக்கப்பட்ட இரும்பு கம்பிகள், ஹீட்டர்கள் அல்லது சிகரெட் துண்டுகளால் சுடப்பட் டன.’

“டிராலைச் சேர்ந்த முசாஃபர் அகமது மிர்சா மற்றும் மன்சூர் அஹ்மத் நாய்கூ ஆகியோரின் மலக்குடல் வழியாக ஒரு தடியைச் செருகி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். இது அவர்களின் உள் உறுப்புகளுக்கு பல சிதைவுகளை ஏற்படுத்தியது”
என்று அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட 432 சாட்சியங்களில் ஒன்று கூறுகிறது.

“நுரையீரல் சிதைக்கப்பட்டதால் சில நாட்களுக்குப் பிறகு மிர்சா மருத்துவமனையில் இறந்துவிட்டார்.’

.”இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த க்கு ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது.
நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது.”

“சித்திரவதை – இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி”

என பெயரிடப்பட்ட இந்த அறிக்கையில்,
சித்திரவதைக்கு ஆளானவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் அப்பாவி பொதுமக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிக்கான பயணத்தில் பேதமின்றி அணிதிரளுங்கள் -யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் கூட்டாகக் அறைகூவல்

தமிழர் தாயகத்தின் இருவேறு இடங்களில் எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அறிவித்துள்ளன.

அத்துடன் வலிந்து காணாம லாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முழுமையாக பங்கேற்கவுள்ள தைப்போன்ற ஏனைய அனைத்து தரப்பினரும் பேதங்களை மறந்து அணிதிரளுமாறும் அறைகூவல் விடுத்துள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினம் தாயகத்தில் உணர்வெழிச்சியுடன் நினைவு கூரப்படவுள்ளது. இதன்போது, வடக்கிலும் கிழக்கிலும் இறுதிப்போரின்போது படைகளிடத்தில் சரணடைந்தும், ஒப்படைத்தும், காணாமலாக்கப்பட்டவர்கள், மற்றும் அசாதா ரண சூழலில் பல்வேறு தருணங்களில் காணாமலாக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் என்ன நடந்தது என்பதற்கான பதிலை சிறீலங்கா அரசாங்கம் கூறவேண்டும். இதிலிருந்து விலகி நிற்கவே முடியாது.

பொறுப்புக்கூறலிலிருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக சிங்களப்பேரினவாத சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தனது ஏமாற்று வித்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சர்வதேசம் உடனடியாக இவ்விடயத்தில் தலையீடு செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை விரைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக, தாயகத்தில் வட புலத்தில் வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் இருந்து உறவுகளை படையினரிடத்தில் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளனர். அதேபோன்று கிழக்கில் கல்முனையில் தரவைப்பிள்ளார் ஆலயத்திலிருந்து போராட்ட பேரணியை ஆரம்பித்து கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் செயலகம் வரையில் செல்லவுள்ளனர்.

இந்நிலையில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று தமது ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதோடு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கல்முனை போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை அடுத்துவரும் சில தினங்களில் வெளியிடவுள்ளதாகவும் இரு மாணவர் ஒன்றியங் களும் அறிவித்துள்ளன.

மேலும் நீதிகோரும் சமூகத்தின் நியாயங்களை புரிந்து அனைவரும் பாகுபாடின்றியும் இடையூறுகளை ஏற்படுத்தாதும் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்து காணாமலாக் கப்பட்டோருக்கான விடயத்தில் உரிய தீர்வுக்காக முன்னகர்த்தலை இத்தருணத்தில் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதாகவும் அம்மாணவர் ஒன்றியங்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் விரும்பவில்லை – துரைராஜசிங்கம்

நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயமாகும். கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் சம்பந்தமாக அவரிடம்  கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது கட்சி சார்ந்து உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் என எதுவும் இடம்பெறவில்லை.

சாதாரண சந்திப்புக்கள் இடம்பெறுகின்ற போது இது தொடர்பாக அவ்வப்போது உத்தியோகபூர்வமற்ற விதத்தில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

அவற்றை ஊடகங்கள் பேச்சுக்களாகக் கருதுகின்றனவே தவிர கட்சியின் நிலைப்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பட்டாசு கொளுத்தப்பட்டது என்கின்ற விடயம்  அவர்களால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்மக்கள் பட்டாசு கொளுத்த விரும்பவில்லை. தமிழர்களை வைத்து பட்டாசு கொளுத்தினார்கள். கோத்தபாய ராஜபக்ஷ என்றாளே தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள்.

இது தொடர்பில் தமிழ்ப் பகுதிகளில் இருந்து வந்த அபிப்பிராயங்களைப் பார்க்கின்ற போது தமிழ் மக்கள் விமர்சனத்தோடு வைத்திருக்கின்ற சில அரசியல்வாதிகள் தவிர ஏனைய அரசியல்வாதிகள் எல்லோரும் இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.

சூடானில் இனக் குழுக்களிடையே மோதல்; 37 பேர் பலி 200 பேருக்கு மேல் காயம்

சூடானின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடங்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளது.

சூடானின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா ஆகிய பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த புதன்கிழமையில் இருந்து மேலும் அதிகரித்தது

போர்ட் சூடான் பகுதியில் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சம்பவ இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநில ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை ஆய்வு – பிரான்ஸ், நோர்வே நிறுவனங்களுக்கு அனுமதி

சிறீலங்காவில் தமிழர் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை மற்றும் எரிவாயு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பிரான்ஸ் மற்றும் நோர்வே நிறுவனங்களுக்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று நேற்று (27) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் நாட்டின் டோட்டல் மற்றும் நோர்வே நாட்டின் ஈகுய்னோர் ஆகிய நி-றுவங்களுடனேயே இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது இரண்டு வருட உடன்படிக்கை எனவும் சிறீலங்காவின் எரிபொருள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டோட்டல் நிறுவனம் ஏற்கனவே 50,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், நோர்வே நிறுவனம் புதிதாக இணைந்துள்ளதாகவும் அது 30 விகிதமான பங்குகளைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பெல் ஜியோஸ்பேஸ் நிறுவனம் மன்னர் கடற்பகுதியில் காந்த மற்றும் புவியீர்ப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புலனாய்வு அமைப்பை வலுப்படுத்த சவேந்திர சில்வா திட்டம் – அச்சத்தில் தமிழ் மக்கள்

சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என சிறீலங்காவின் புதிய இராணுவத்தளபதியாக பதவியேற்றுள்ள லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராணுவப் புலானாய்வுத்துறையின் சில பிரிவுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் இராணுவத்தை பலப்படுத்த முடியும். இதுவே எனது எதிர்கால நடவடிக்கை.

புலனாய்வுத் தகவல்கள் துல்லியமாக இருந்தால் தேவைப்படும் இடத்தில் படையி-னரை விரைவாக நகர்த்த முடியும்.

நாட்டின் நலன் கருதியே அரச தலைவர் எனது நியமனத்தை மேற்கொண்டுள்ளார். இராணுவத்தை பலப்படுத்துவதும், போரில் காயமடைந்த மற்றும் இறந்த படையி-னரின் குடும்பங்களுக்கு உதவுவதுமே எனது பிரதான கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சவேந்திர சில்வாவின் இராணுவத்தின் புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்தும் செயலானது அவர் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், மேலும் மனித உரிமை மீறல்கள் சிறீலங்காவில் இடம்பெறலாம் என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவி

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து ‘எர்த் அலையன்ஸ்’ என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை கடந்த மாதம் தொடங்கினர். இந்த அமைப்பு அமேசானை பாதுகாக்கும் வகையில் உதவிகளை செய்ய அமேசான் வன நிதியம் என்ற பெயரில் நிதி திரட்டி வருகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி உதவி தொகை அமேசான் காடுகளைப் பாதுகாக்க தீவிரமாக பணியாற்றிவரும் 5 உள்ளூர் அமைப்புகளுக்கு போய் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக 50 லட்சம் டாலரை நன்கொடையாக அளித்து நிதி திரட்டும் பணியை டிகாப்பிரியோ தொடங்கி வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் காணப்படும் பருவநிலை மாற்றங்களுக்கான தீர்வாக அமேசான் மழைக்காடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமேசான் இல்லாமல் நாம், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

rainforests amazan அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நிதி உதவிபூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. தீயை அணைக்கும் பணியில் பிரேசில் படைகளுடன் பிற உலகநாடுகளும் உதவி செய்து வருகின்றன.

மட்டக்களப்பில் கண்டனப் பேரணிக்கு அழைப்பு

எதிர் வரும் 30/08/2019 அன்று பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கமைய உலகம் முழுதும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாலும் மக்களாலும் அடையாளப்படுத்தலுடன் விழுப்புணர்வு செய்யப்படுகின்றது .

வடகிழக்கில் இந்திய ராணுவத்தாலும் அரசபடைகளாலும் அதனுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களாலும் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை கூறும் படியுமான கேள்விகளுடனும் கண்ணீருடனும் உள்ளூர் முதல் உலகம் வரை அலைந்து திரியும் உறவுகளின் குரலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக வருகின்ற 30/08/2019 அன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலான கண்டனப்பேரணி ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்டன பேரணிக்கு பொது அமைப்புகள்,பல்கலைகழக மாணவர் சங்கங்கள் ,பட்டதாரிகள் சங்கம் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ,விளையாட்டுக்கழகங்கள் ,கிராம அபிவிருத்தி சங்கங்கள் ,மாதர் சங்கங்கள் ,தாணி (ஆட்டோ)ஓட்டுநர் சங்கங்கள் ,பல்சமைய ஒன்றியம்,வர்த்தக சங்கங்கள் ஆகியோரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம்.

அதே போலவே தமிழ் மக்களாகிய உங்களிடமும் தார்மீக ஆதரவை கோரிநிற்கின்றோம்.

வலிசுமந்த எங்கள் குரலுக்கு வலுச்சேர்க்க தமிழ் மக்களாகிய உங்கள் ஆதவை தந்து அன்றைய நாளில் பெரும் திரளாக கூடி சர்வதேசத்திடம் நீதி கேட்க துணையாக நிற்க வேண்டுகின்றோம்.

நன்றி
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் .
மட்டக்களப்பு .

எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30 திகதி தாயகத்திலே மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய கருத்துக்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே ஒரே தீர்வு

வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி ஜோகராசா

kanaka எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

 போர்க் காலத்தில் காணாமல் ஆக்கப் பட்ட உறவுகள் சரணடையும்போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே அவர்களை கையளித் திருக்கின்றோம். தற்போது அவர்கள் காணாமலாக் கப்பட்டிருக் கின்றார்கள். ஆனால் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தளபதி பதவி வழங்கப்படுகின்றது. எமது உறவுகள் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிப்பதாகவும் இல்லை. நாங்கள் தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் எமதுபோராட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

அவை காலச்சூழலுக்கு ஏற்ப வடிவங்கள் மாறினாலும் நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. உள்நாட்டில் அரசாங்கமோ, படைத்தரப்போ எமது விடயங்களுக்கு பதிலளிப்பதாக இல்லை. இந்த நிலையில் தான் நாம் சர்வதேசத்தினை நாடினோம். இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினோம். எனினும் தமிழ் பிரதிநிதிகள் சிலரின் தலை அசைப்பால் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியிருந்தன. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை என்பதை இன்று கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. ஆகவே தொடர்ந்தும் சர்வதேச நாடுகள் பொறுத்துக்கொண்டிருக்க கூடாது.

சரணடைந்து, கடத்தப்பட்டு, விசாரணைக்காக அழைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான பொருளாக கொள்ள வேண்டும். எமது சாட்சிகளுக்கு அமைவாக உரியவர்களை நீதிமன்றின் முன்நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தற்போதே உறவுகளை தேடியவர்கள் நாற்பது பேர் வரையிலானவர்கள் இறந்துவிட்டார்கள். அதுபோன்ற நிலைமை தான் அனைவருக்கும் ஏற்படும் என்றார்.

அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி அமலநாயகி,

625.0.560.320.160.600.053.800.700.160.90 1 எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

வலிந்து காணா மலாக்கப்பட்ட உறவுகளை ஒன்றிணைத்து எமது உறவுகளுக்காக நீதிகேட்டு போராட ஆரம்பித்த போது எம்மை புலனாய்வாளர்கள் தொடர்ந் தார்கள்.  காணொளி எடுத்தார்கள். நாம் செல்லுமிடமெல்லாம் பின்தொடர்ந் தார்கள்.

காணாமலாக் கப்பட்ட விவகாரத்தினை கைவிடச் செய்வதற்காக எமக்கு எதிராக பல முயற்சிகளை எடுத்தார்கள். குறிப்பாக என்னை இலக்கு வைத்து திட்டமிட்ட அச் சுறுத்தல்கள், தாக்குல்கள் என அனைத் தையுமே முன்னெடுத் துள்ளார்கள். இறுதியாக என்மீது தாக்குதலையும் திட்டமிட்டு மேற் கொண் டார்கள். எனக்கு புலம்பெயர் தேசங் களிலிருந்து நிதி அனுப் படுவதாக கூறி என்னை கைது செய்வதற்கு விளைந்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சி எமது நீதிக்கான நியாயமான கோரிக் கையை கைவிடவில்லை.

எமது உறவுக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு நாம் எமது உயிர்களை துச்சமென மதித்தே வீதிக்கு இறங்கியுள்ளோம். இதனை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும். சர்வதேசத்திடமே நீதிகேட்கின்றோம். அவர்கள் எங்களுக்கான உத்தரவாதங்களை தர வேண்டும். நாம் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடு த்து சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்ப்போம் என்பதில் மாற்றமில்லை என்றார்

நாமும் காணாமலாக்கப்படும் ஆபத்துள்ளது

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி மதியசுரேஸ்  ஈஸ்வரி.3 1 எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய  இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப் பட்டுள்ள நிலையில் அத்தகைய தொருவர் சனாதி பதியாக வந்தால்  எம்முடைய உறவு களைத் தேடிப் போராடிக் கொண்டிருக்கின்ற நாங்களும் காணா மலாக்கப்படும் நிலையே ஏற்படும். சனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மை முழுமையாக ஏமாற்றிவிட்டார். காணி விடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த அவரின் பதவிக்காலம் முடிவடையப் போகிறது.

மஹிந்தவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கம் அமைத்ததைப் அவர் மீண்டும் ராஜபக்சவிடத்திலேயே ஒப்படைத்துவிட்டுப் போகப்போகிறார். கடந்த மூன்று வருடகாலமாக எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியிருக் கிறோம். எமது பிரச்சினைக்கு எவ்வித நிரந்தர தீர்வும் பெற்றுத்தரப்படாத அதேவேளை, சர்வதேசமும் எமது போராட்டங்கள் தொடர்பில் பாராமுகமாகவே இருந்து வந்திருக் கிறது. எதிர்காலத்தில் சர்வதேசமும் எம்மை கைவிடும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட இடமளிக்க கூடாது என்றார்.

.நா தீர்க்கமான பதிலளிக்க வேண்டும்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி  தம்பிராசா செல்வராணி,

amparai எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் எமது போராட்ட வடிவத்தினை மாற்றியுள்ளோம்.

சர்வதேச காணா மலாக்கப்பட்ட தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதியை ஒவ்வொருமாதமும் நினைவு கூர்ந்து மாதாந்தம் 30 ஆம் திகதிகளில் கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் கொல்லப் பட்டவர்களுக்கும் காயமடைந் தவர்களுக்கும் அரசாங்கம் உடனடியாக இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பனவற்றை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் ஏன் எமது உறவுகளை தேடிக்கண்டு பிடிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

நாம் தமிழர்கள் என்பதால் எமக்கு ஒரு நீதியும் பெரும்பான்மையினருக்கு ஒரு நீதியுமாகவே உள்ளது.  இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலாவது பாராமுகம் காட்டாது. சரி சமமாக நடக்க வேண்டும். ஐ.நாவின் அமர்வில் யுத்தக்குற்றம் தொடர்பாகவும், காணாமலாக்கப் பட்டவர்கள் தொடர்பாகவும் சரியான முறையில் விசாரணை செய்து ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரவேண்டும் என்றார்.

அனைவருமே ஏமாற்றி விட்டார்கள்

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி    செல்வராஜா சறோஜாதேவி

unnamed 5 எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை. எனினும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக அதுவே எமக்கான நியாயமான தீர்வை வழங்கும் என்றும்  நம்பியிருந்தோம். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை.  இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய சர்வதேசமும் எம்மை ஏமாற்றிவிட்டதாகவே உணர்கின்றோம். சிங்கள பௌத்தவாத அரசினால் எமக்கான தீர்வினை நீதியினை வழங்கமுடியாது என்பதனை சாதாரண மக்களாகிய நாம் புரிந்து கொண்டுள்ளோம்.ஆயினும் ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் அதனை புரிந்து கொள்ளவில்லை

மஹிந்த காலத்தில் மட்டுமல்ல தற்போதைய ஆட்சியிலும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. காணாமலாக் கப்பட்டோர் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவில்லை, அலுவலகத்தினை அமைத்து அனைத்தையும் முடக்குவதற்கு முயற்சிக்கின்றர்கள். நீதி வழங்கல் தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர். திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்த ஆக்கிரமிப்புக்கள், பாரம்பரிய வரலாறுகளை மாற்றுகின்றமை ஐக்கியநாடுகள் சபையின் இனவழிப்பு தொடர்பான வரைவிலக்கணத்தின் படி மேற்படி செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்டஇன அழிப்பு செயற்பாடுகளே என்றார்.

காலம்கடத்தி மழுங்கடிக்க முயற்சி

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி    சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா

GPJ News Jaffna Missing person Open office at Mannar 2 WEB 595x397 1 எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனநாங்கள் காணாமல் போன எங்களுடைய பிள்ளைகளை தேடிஅலைகின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கங்கள் இந்த விடயத்தினை காலம்கடத்தவே முயல்கின்றன.

எமது விடயத் தினை பொருட்டாகவே கருதாது இருந்து வருகின்றார்கள். நாங்கள் ஆடு, மாட்டை படையினரிடம்  கொடுக்கவில்லை. எங்களிடம் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பதற்கு இடமே இல்லை.

எமது உறவுகள் இருக்கின்றனரோ, இல்லையோ? தற்போது இருக்கின்ற உறவுகளை விடச் சொல்லியே கேட்கின்றோம். அவர்கள் இல்லை என்றால் அவர்களை என்ன செய்துள்ளனர். ஏன்? எதற்காக எமது உறவுளை பிடித்துக்கொண்டு சென்றனர். அவர்களை என்ன செய்துள்ளனர். இவற்றுக்கான பதில்களை நீதியுடன் கூறவேண்டும். இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே ஐ.நாவை நம்பியுள்ளோம். இருப்பினும் தற்போது வரையில் அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை.  எனவே ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்துக்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாது. இந்தவிடயத்தில் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

கால அவகாசம் வெறும் கண்துடைப்பே.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் இணைப்பாளர் திருமதி சரோஜா சண்முகம்பிள்ளை

thumbnail 6 1 எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தி செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன

எமது பிள்ளைகளை தொலைத்து 10 வருடங்கள் கடந்தும் இன்றுவரை தீர்வில்லை. இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. கண் துடைப்புக் காக காணாமல் போனோர் அலுவலகத்தை இலங்கை அரசுஆரம்பித்தது. இதைப்போலவே கடந்தகாலங்களில் பல ஆணைக்குழுக்களை அமைத்து எம்மை ஏமாற்றினார்கள். எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கியது போன்று எம்மைகாணாமல் போக செய்வதற்காக மிகுதியாக உள்ள எம்மை எமது குடும்பங்களின் விபரங்களையும் பதிவு செய்தார்கள்.  என எண்ணத்தோன்கிறது. ஏனெனில் கால அவகாசம் கொடுத்தததற்கு ஏற்றவாறு எந்த நன்மையும் தீர்வும் எமக்கு வழங்கப்படவில்லை.

எமது பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள்  என்ற நம்பிக்கையில் போராடு கிறோம். சர்வதேசம் இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் வங்கக் கூடாது. எமது பிள்ளை களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும். என்பதுடன் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக சர்வதேசம் தலைதலையிட்டு எமக்கு நீதியை பெற்றுத் தரவேண்டும்.

சர்வதேசம் உடன் தலையிட வேண்டும்

யாழ். மாவட்டவலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  சங்கத் தலைவி இளங்கோதை.

எமது உறவுகளை தேடிய போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எமது ஒவ்வொரு போராட்டங்களைம் முடக்கி எமது நீதிக் கோரிக்கையை அமிழ்த்தி விடுவதே தென்னிலங்கை பௌத்த சிங்களவாத தரப்புக்களின் அடிப்படை நோக்கமாக இருக்கின்றது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. யாழில் காணாமலாக்கப் பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் முன்னிலையில் நாங்கள் சாட்சியங்களை வழங்கியிருந்தோம். எமது சாட்சியங்கள் வெறுமனே வாக்குமூலங்கள் போன்று பதியப்பட்டனவே தவிர அவை அனைத்துமே கண்துடைப்பு நாடகங்களே. காணாமலாக்கப்பட்டவர்கள் அலுவலகம் பற்றிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இத்தனை காலத்திற்கு பின்னரே கிளைகள் நிறுவப்படுகின்றன. அதிலேயே இத்துணை தாமதங்கள் என்றால் ஆயிரக்கணக்கில் இருக்கும் எமது உறவுகளின் முறைப்பாடுகளை அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பளிப்பது எப்போது?

எமது கோரிக்கைகளை காலம் தாழ்த்தச் செய்து அதனை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் ஆகின்ற நிலையில் இனியும் உள்நாட்டில் இந்த விடயங்கள் சரியாக கையாளப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. ஆகவே சர்வதேச தரப்புக்கள் உடனடியாக தலையீடு செய்து இவ்விடயதிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.