Home Blog Page 2766

 கப்பல்கள் மீது தாக்குதல் ;அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

எரிபொருள் ஏற்றிச்சென்ற இரண்டு கப்பல்கள் ஓமான் கடல் பிராந்தியத்தில் தாக்குதலுக்குள்ளாகின.இதனால் இரண்டு கப்பல்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜப்பானுக்கு சொந்தமான Courageous மற்றும் நோர்வேக்கு சொந்தமான Front Altair ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு வெடித்துள்ளன.கப்பல்களில் இருந்தவர்களை ஈரான் மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Front Altair கப்பலில் இருந்த 23 ஊழியர்களும் அருகிலிருந்த மற்றுமொரு கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஈரான் கப்பலொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஈரானின் தெற்கு துறைமுகத்திற்கு தற்போது அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Courageous கப்பலில் இருந்த 21 ஊழியர்களையும், U.S.S. Bainbridge அமெரிக்க கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இருந்து சிங்கப்பூருக்கு Courageous கப்பல், Methanol கொண்டு சென்றிருந்ததாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தாய்வான் எரிபொருள் கூட்டுத்தாபனம் பயன்படுத்திய Front Altair கப்பல், Naptha என்ற இரசாயனப் பொருளுடன் பாரசீக வளைகுடாவில் இருந்து ஜப்பான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கான உரிய காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டும் என அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைக்கின்ற போதிலும், ஈரான் அதனை நிராகரித்து, அமெரிக்கா ஆவேசமாக செயற்படுவதாகக் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில், மத்திய கிழக்கு வலயத்தில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பாரிய சிக்கல் என சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் எரிபொருள் ஏற்றிச்சென்ற நான்கு கப்பல்கள் மீது ஒரு மாதத்திற்கு முன்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அதற்கு அண்மையிலேயே ஓமான் கடல் மார்க்கம் உள்ளது.

பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்கள் கொண்டு செல்லும் பயண மார்க்கமாக ஓமான் கடல் மார்க்கம் விளங்குகின்றது.சீன உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் பாரிய துறைமுகமான க்வாதா துறைமுகம் இதற்கு அருகில் அமைக்கப்படுகின்றமை இந்த கடல் வலயத்தின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.இது சீனாவின் கடல்மார்க்கத்தின் அரணாகும்.

இரண்டு கப்பல்களும் வெடிப்புக்குள்ளான பகுதியை, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Mason கப்பல் தற்போது நெருங்கி வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.இந்த கடல் வலயத்தில், அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு, ஈரானுடன் நெருங்கிய இராணுவங்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்து, அமெரிக்க விமானத் தாக்குதல் குழுவொன்று கடந்த மே மாதம் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில், அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் அமைச்சரவையின் பிரதம செயலாளர் யோஷிஹீடே சுபா கூறியுள்ளார்.நேற்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தமது அரசாங்கம் மேலும் தகவல்களை சேகரிப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்களுக்கு அவர் கருத்து வௌியிட்டுள்ளார்.

புலனாய்வுத் துறையினரால் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன்  தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் டுபாயிலிருந்து சிறிலங்காவிற்கு அழைத்து வரப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்களை CIDயினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

பாலஸ்தீனத்துக்கு எதிராக இந்தியா இஸ்ரேலுடன் கூட்டு

ஐ.நாவில் இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானத்துக்கு, இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஷாகெத் எனப்படும் பாலஸ்தீன தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு ‘ஆலோசனை அந்தஸ்து’ வழக்கக் கோரி ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிடம் பாலஸ்தீனம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது கடந்த 6ம் தேதி நடந்த இந்த வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது. தீர்மானம் வெற்றிப்பெற்றது.இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகூ தனது டுவிட்டரில் ‘இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவுக்கு நன்றி, தெரிவித்துள்ளார்.

சிறுதீவில் தேடுதல் ஆயுதங்கள் மீட்பு

யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று பிற்பகல் இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இவற்றை மீட்டனர்.

மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதில் டெற்னேற்றர்கள், C – 4 வெடிமருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.

 

‘பிரபாகரனுக்கு என ஒரு ஆதரவு தளமிருந்தது, அரசியல் கொள்கை இருந்தது’ மைத்திரிக்கு ஹக்கீம் பதிலடி

ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தற்கொலைகார கும்பலிலிருந்து யாரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது, பிரபாகரனுக்கு என ஒரு ஆதரவு தளமிருந்தது, அரசியல் கொள்கை இருந்தது, அவருக்கென்று விடுதலைப்போராட்டம் என்ற ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த இலங்கை தற்கொலைத்கார கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது, இவர்களுக்கு இந்த ( முஸ்லிம் ) சமூகத்திடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது, அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற அந்தஸ்த்திற்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அயோக்கியர்களின் கடைசி அடைக்கலமே தேசப்பற்றுக் கோஷம்- ஹக்கீம்

அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம் தேசப்பற்று என்ற கோஷமாகும் என ஒர் ஆன்மீக எழுத்தாளரான மார்க் பைன் என்பவர் கூறியுள்ளதாகவும், அதுதான் இலங்கையிலும் தற்பொழுது நடைபெறுகின்றது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்றிரவு அரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

எமது நாட்டின் முன்னைய வரலாற்றில் தேசப்பற்று, தேசிய இயக்கம் என்ற விடயங்கள் நாட்டின் நன்மைக்கே பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது தீமைக்கே அது பயன்படுத்தப்படுகின்றது.

சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏதேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அதிகாரம் படைத்தவர் ஒர் ஆதங்கத்தினாலோ, உணர்ச்சிவசப்பட்டோ ஒரு கருத்தைக் கூறும் போது அது இனவாதமாக பார்க்கப்படுகின்றது.

இதே விதமாக பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதமாக பேச்சுக்கள் இடம்பெற்றாலும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். இது ஏன் என நிகழ்ச்சியை நடாத்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

சிக்குவார்களா ராஜபக்சாக்கள் ;வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு

ஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டு மென்றும் சட்ட மாஅதிபர் கேட்டுள்ளார்.

குறித்த கொலைகளுக்கு ராஜபக்ச குடும்பத்தினரே கரணம் என பலதரப்பிலும் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.ஊடகவியலாளர் லசந்த கொலைதொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாது.

நான்கு படுகொலை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அதனை சாத்தியமான முறையில் முன்னெடுத்து அதன் முழுமையான அறிக்கையை தமக்கு விரைவாக பெற்றுத் தருமாறும் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி

சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக் களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, குற்றத்தடுப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாண் அபேசேகர ஆகியோருக்கு சட்ட மாஅதிபர் இது தொடர்பில் எழுத்துமூலம் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேற்படி நான்கு வழக்குகளும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் அதுதொடர்பில் பெரும் அவதானத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி வழக்குகள் தொடர்பில் தேவையற்ற தாமதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் தாமதமாவது தொடர்பில் சட்ட மாஅதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மேற்படி நான்கு வழக்குகள் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை கண்காணித்து முறைப்படி விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; 4 வைத்தியசாலையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்விபயின்றுவரும் 4 மாணவர்கள் மீது சம்பவதினமான நேற்று இரவு 2 ஆம் ஆண்டில் கல்விபயின்று வரும் மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டு அவர்கள் மீது தாக்குல் நடாத்தியுள்ளனர்.

இதனால் அவர்கள் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர் .

“சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனது

கடலின் இயற்கை மற்றும் மரபினைப் பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் புதுச்சேரி கடல்சார் சூழலியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. கடல்சார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஜெயசீலா ஸ்ரீபன் தலைமையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஓசெர் மற்றும் மேனன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அருங்காட்சியக நிறுவுனரும், ஆய்வாளருமான அறிவன் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

பூமியில் 70 %  ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது யாவரும் அறிந்ததே. உலக அளவில் அதே விகிதத்தில் மக்கள் கடற்கரை ஓரங்களில் வசிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமான பிராணவாயு தேவைகளில் 70%  கடல்வாழ் தாவரங்கள் தான் éர்த்தி செய்கிறது.

சுமார் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்கள் தோன்றியிருக்கலாம் என்று கூறும் இன்றைய அறிவியல், அன்றைய காலகட்டத்தில் நில அமைப்பு பெருங்கடலாக இருந்திருக்கிறது. 361,740,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட உலகக் கடல் அட்லான்டிக், பசுபிக், இந்தியன், ஆட்டிக் என 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 166,240,000 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட பசுபிக் பெருங்கடல் மட்டும் உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நீரால் சூழ்ந்திருக்கின்றது. அதை ஒரே நேர்கோட்டில் நீட்டிப் பார்த்தோமென்றால் சுமார் 17,700 கிலோமீற்றர் அதாவது உலக நிலப்பரப்பில் பாதி அளவைத் தொடும். அதே போல உலகின் மூன்றாவது பெரிய கடலாகவும், வெப்ப மண்டலக் கடலாகவும் விளங்குவது 73,430,000 சதுர கிலோமீற்றர் பரப்புக் கொண்ட இந்தியப் பெருங்கடல்தான்.

மேலும் உலகக் கடல்களின் தனிச்சிறப்புடைய இயற்கைத் தகவலமைப்பினை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. சிறிய கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் எனக் குறிப்பிடப்படுகின்றது. அதன்படி அரபி மற்றும் வங்காள விரிகுடாக் கடல்கள் இந்தியப் பெருங்கடலில் தான் இடங்குகின்றது. இந்தியப் பெருங்கடல் என்பது குமரிக் கடலைத் தான் குறிக்கும்.

தமிழ் மக்கள் கடல்களைப் பற்றிய ஆழமான அறிவுடையவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சங்க இலக்கிய பாடல்களே சாட்சி. கடல் என்ற சொல்லாட்சி அவற்றில் பரவிக் கிடக்கிறது. கடலைக் குறிக்கும் ஆழி என்ற சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகின்றது. கடல் சார்ந்த நிலம் நெய்தல் என்றும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் ஏராளமான செய்திகள் தமிழில் உள்ளன. இந்தியக்் கடலைக் கட்டியாண்ட பெருமை முடியுடை மூவேந்தர்களையே சாரும். இந்தியாவிற்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சோழமண்டலக் கடல் என்றே நமது கடல் அழைக்கப்பட்டது. சோழர்களின் பெருமையும், அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்த ஒன்று. சோழர்களின் கடல் ஆளுமைப் பெருமையை எண்ணி தற்போதைய இந்திய அரசு 2015இல் இராசேந்திர சோழனுக்கு அங்சல் தலை வெளியிட்டுள்ளது.

cholar “சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனதுசுமார் 2,172,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதாகச் சொல்லப்படும் வங்காள விரிகுடா தனக்குள் சோழமண்டலக் கடலையும் அடக்கிக் கொள்கின்றது. மற்றபடி சோழமண்டலக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 19ஆமநூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வங்க மொழி என்ற சொல்லை “இடியமா பெங்கல்லா“ என்று போர்த்துக்கீசியர்கள் அழைத்தனர். முனமதிய ஆட்சியின் போது தான் இந்தச் சொல் முதன் முதலில் அறியப்படுகின்றது. 16ஆம் நூற்றாண்டில் வங்க மொழியை கௌடமொழி என்றே அழைத்தனர். வங்காள மொழி பேசுவதன் அடிப்படையிலேயே வங்காளதேசம் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து தனிநாடாக உருவாகியிருக்கும் வங்க தேசம் தான் முந்தைய இந்தியாவில் கிழக்கு வங்கமாக இருந்தது.

வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்கம் வரை பரந்திருக்கும் குடாப் பகுதியே விரிகுடா எனப்படுகின்றது. இந்தப் பகுதியில் தான் கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி போன்ற பெரிய ஆறுகள் கலக்கின்றன. இதை வங்காள விரிகுடா என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அளவில் சிறியதான குடா வளைகுடா (Gulf) என்றும், பெரிய அளவிலான பகுதி விரிகுடா (Bay)  என்றும் பெயர் பெற்றதோடு அப்படியே அழைக்கப்பட்டது. பரப்பளவில் சிறியதான மன்னார் வளைகுடாவையும், பெரியதான வங்காள விரிகுடாவையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். நமது சோழமண்டலத்தை ஐரோப்பியர்கள் கோரமண்டல் (Coromandel) என்றே அழைத்தார்கள்.

Cholar 3 “சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனது29 கடல்களையும் 4 பெருங்கடல்களையும் கொண்ட இப்புவிப் பரப்பில் சோழமண்டலக் கடலுக்கென்று மிகப் பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றைப் போலவே இந்தியாவின் மேற்கிலும், மலையாளக்கரை அல்லது மலைவாரக் கடல் என்ற சொற்கள் எப்படி அரபிக் கடலாக ஆகும் என்ற கேள்வியினை அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும். கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார் வரையுள்ள கடற்பரப்பு சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது. அதனால் மத்திய மாநில அரசுகள் மரபு அடிப்படையில் சோழ மண்டலக் கடல் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

 

 

 

 

 

 

 

முஸ்லிம் பயங்கரவாத குழு தலைவரை அழைத்துவர புலனாய்வுப் பிரிவினர் சவுதி பயணம்

சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் அவசரமாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளனர். அங்குள்ள தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவுத் தலைவர் மொஹமட் மிலான் என்ற அபு செய்லானை அழைத்து வருவதற்காக சென்றுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 21 தாக்குதல் சஹ்ரானின் தலைமையிலான ஐ.எஸ் அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்டது எனக் கூறப்பட்ட போதிலும், அத் தாக்குதலை வழிநடத்தியவர் அபுசெய்லான் என அறியப்பட்டுள்ளது. முகமட் மிலான் எனும் அபு செய்லா, வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும், வண்ணாத்திவில்லு சஹ்ரானின் பயிற்சி முகாமைக் காட்டிக் கொடுத்த அமைச்சர் கபீர் காசிமின் இணைப்பாளர் மொகமட் நஸ்லின் மீதான துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தியவர் என தெரிய வந்துள்ளது.

தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற போது அவர் மக்கா சென்றிருந்தார் எனவும் அத்துடன் அபு செய்லான் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் தாக்குதல்கள் நடைபெற்ற சமயம் அவர் மக்கா சென்றுள்ளார் என்று சவுதி மற்றும் சர்வதேச பொலிசாருக்கு சிறிலங்கா புலனாய்வு பிரிவால் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தற்போது அவர் சவுதியிலிருந்து சிறிலங்கா வருவிருக்கின்றார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

சிறிலங்கா வருவதற்காக அவர் சவுதி விமான நிலையம் வந்த போதும், அவர் விமானத்தில் ஏறவில்லை என்றும் சவுதி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் கிடைத்திருந்தன. அன்றே அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் சிறிலங்கா வரவில்லை. இதனால் இவரை அழைத்து வருவதற்கு விசேட குழு முயற்சி மேற்கொண்ட போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்த கடந்த மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில், அவரை சிறிலங்கா அழைத்துவர சவுதி அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே இவரை அழைத்துவர குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒரு குழுவினர்  சவுதி சென்றுள்ளது.