புலனாய்வுத் துறையினரால் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன்  தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் டுபாயிலிருந்து சிறிலங்காவிற்கு அழைத்து வரப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்களை CIDயினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.