Home Blog Page 2733

அத்துரலிய ரத்ன தேரரின் ஞானம்

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான ஊடக சந்திப்பின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை  சிங்கள பௌத்த மக்கள் மேற்கொள்ளக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக் கொண்டார்.

கன்னியா விவகாரத்தில் ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம், நீதியின் அடிப்படையிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்கள் வன்முறையை பிரயோகிக்கக்கூடாது எனவும் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் – மு.திருநாவுக்கரசு

சிங்கள மக்களால் பெரிதும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட வெல்லுதற் அரிய புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்ற வகையிலான யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்சகள் மேலும் கால் நூற்றாண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற எடைபோடுதல் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்த்தது.

இந்நிலையில் நம்பிக்கையான வெற்றியை எதிர்பார்த்து மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னாக முன்கூட்டியே 2015 ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலை அறிவித்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தன் கட்சிக்குள் இருந்து அவருடன் கூடயிருந்த மைத்திரிபால சிறிசேன அவருக்கெதிராக போர்க்கொடி தூக்கி ஜனாதிபதி வேட்பாளராய் களமிறங்கினார்.

இந்நிலையில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிய ராஜபக்ச அதனால் திணறிபோய் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியும் அடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அனைத்தும் முன்கூட்டிய எதிர்பார்க்கையோடும் அதற்க்கு ஏற்ற முன்னேற்பாடுகளோடும் ராஜபக்சகள் ஏப்ரல் மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி விட்டனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்புகள் ஜனாதிபதி தேர்தலை நோக்கிய மாபெரும் முதலாவது முற்தயாரிப்பாகும்.

இதை தொடர்ந்து தெற்கில் வெடித்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம், பொது பல சேன தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலிருந்து ஜனதிபதியால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமை, யூன் மாதம் கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வண.வாரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரோ முஸ்லிம்களின் கடைகளை பகிஸ்கரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை உட்பட முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட கடுமையான அறிக்கை, யூலை முதல் வாரத்தில் 10,000 வரையிலான பௌத்த பிக்குகள் உள்ளடங்கலாக கண்டியில் பொது பல சேன தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரால் கூட்டப்பட்ட மாபெரும் மாநாடும் அதில் சிங்கள இராட்சியம் நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மானம் உட்பட முஸ்லிம்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன எல்லாம் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சரங்களாகவே அமைந்துள்ளன.

இவைகள் அனைத்தும் பெரும் பாலும் ராஜபக்ச குடும்பத்தின் பக்கம்  சாய்வுள்ள அச்சாரங்கள் ஆகும். இவற்றில் ஒன்றையேனும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேற்பாடு என்பதிலிருந்து விலக்கிப் பார்க்க முடியாது.வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பற்றிய முடிவு ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடக்கவுள்ள மேற்படி கட்ட்சியின் மாநாட்டில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அக்கட்சி உத்தியோக பூர்வமாக  அறிவித்துள்ளது.

இக்கட்சியில் தீர்மானம் எடுக்கும் உண்மையான நபர் மகிந்த ராஜபக்ச ஆவார். அவரது நேரடி இளைய சகோதரரான கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த அவர் தீர்மானித்துள்ளார் என்ற செய்தியின்படி கோத்தாபய  ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஏற்படக்கூடிய ஏதாவது சட்டத்தடைகளின் காரணமாக அவரை வேட்பாளராக நிறுத்த முடியாது போனாலும் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார்.BBVKztD ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மத்தியிலும் மகிந்த ராஜபக்ச பெருந் தலைவர் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுகிறார் என்பதுடன் இவரே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் ஒட்டுமொத்த பெரும் தலைவராகவும் பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார் ஆதலால் ராஜபக்ச குடும்பத்திலிருந்து யார் தேர்தலில் போட்டியிட்டாலும் சிங்கள மக்கள் அவரை ராஜபக்சவுடன் இணைத்து அடையாளம்  கண்டு அவருக்கு வாக்களிப்பர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நிறுத்தப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு பெரிதாக உள்ளது.கோத்தாபய  ராஜபக்ச 1949 ஆம் ஆண்டு யூன் மாதம் பிறந்தவர். ரணில் விக்ரமசிங்க அதே ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர். இருவரும் இவ்வாண்டில் தமது எழுபதாவது பிறந்த தினத்தை தாண்டி இருப்பவர்கள்.

இவர்கள் இருவருமே பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாக களம் இறங்குவர் என்று பெரிதும் எதிர்பாக்கலாம்.ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜனதிபதியாக வேண்டும் என்ற அபிலாசையை ரணில் விக்ரமசிங்க கொண்டுள்ள போதிலும் கடந்த காலங்களில் அம்முயற்சிகளில் அவர் தோல்வியடைந்து “இராசி இல்லா ராஜாவாக” உள்ளார் என்ற கணிப்பீடு அவரது கட்சியினர் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் உண்டு.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்  ஜெயவர்த்தனவின் நெருங்கிய உறவினரான ரணில் விக்கிரமசிங்க இளம் வயதிலேயே அமைச்சர் ஆகிய “ராஜா வீட்டு கன்றுக்குட்டி” ஆவார் என்ற ஒரு கணிப்பீடும் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.

மிக இளம் வயதிலேயே அமைச்சரான ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியில் இறுக்கமான பிடி இருப்பதுடன் கட்சியில் உயர் குழாத்தினரின் பலமான ஆதரவும் இவருக்கு உண்டு .அத்துடன் மேற்குலக ஆட்சியாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக அறியப்பட்டவரும், அவர்களின் நம்பிக்கைக்கும் பெரிதும் பாத்திரமாக காணப்படும் நிலையில் இவருக்கு மேற்குலகின் தெளிவான ஆதரவும் உண்டு.ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவானது என்றும் அடிமட்ட மக்களின் ஆதரவை உடைய பிரேமதாசவின் பாரம்பரியத்தை கொண்ட இளம் தலைவரான 52 வயது நிரம்பிய சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன.

எப்படியாயினும் கட்சியின் மீது ரணில் விக்கிரமசிங்கவிக்கு இருக்கக்கூடிய பலமான பிடி, கட்சிக்குள் உள்ள உயர் குழாத்தினரின்  ஆதரவு, மேற்குலக ஆதரவு என்பனவற்றின் பின்னணியிலும் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே ஏற்ப்படக்கூடிய சமரசத்திக்கான வாய்புகளின் பின்னணியிலும் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் பிரகாசம் ஆனது.“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பதற்க்கு ஏற்ப ரணிலின் வருகைக்காக அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளன.“ரணிலின் தலைமையை எதிர்பார்க்கும் அமெரிக்கா” என்ற தலைப்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழில் வெளியான பின்வரும் செய்தி குறிப்பிடத்தக்கது.

“மிலேனியம் சவால் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக பணிப்பாளர், சீன் கெய்ன் குரோஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்” என்று செய்தி நீள்கிறது.

எப்படியோ மேற்குலகின் ஆதரவு திட்டவட்டமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ராஜபக்ச குடும்பமானது நாடாளுமன்றமுறை அரசியலிலும் அதற்கு அப்பால் நாடாளுமன்றமுறை அரசியலுக்கு புறம்பான(Extra Parliamentary Politics) வெகுசன அரசியல், பலப்பிரயோக அரசியல், பௌத்த மதநிறுவன அரசியல், இராணுவ பல அரசியல் என்பனவற்றிலும் வல்லமை போருந்தியவர்கள்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற மற்றும் தேர்தல்முறை அரசியலில் மட்டுந்தான் பலமுள்ளவராக உள்ளார்.சஜித் பிரேமதாசாவிடந்தான் பாராளுமன்ற முறைக்கு வெளியேயான மக்கள் திரள் அரசியலில் பலம் உண்டு இறுதியில் ரணிலும், சஜித்தும் ஒரு குடையின் கீழ் நிற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் வெற்றி வாய்ப்பு எப்படி அமையக்கூடும் என்பதை சிறிது ஆராயலாம்.z p01 Ranil ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசு

ரணிலை விடவும் நான்கு வயதுகளால் மூத்தவரான மகிந்த ராஜபக்ச(1945) அரசியலில் இளமைத்துடிப்புடன் காணப்படுகிறார் இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தொல்வியுற்றிருந்தாலும் முடிசூடா மன்னரான இவரே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பெருந் தலைவராய் காட்சியளிக்கிறார்.

தம்பி கோத்தாபயவை அண்ணன் ராஜபக்சவுக்கு ஊடாகவே சிங்கள மக்கள் கணித்து வாக்களிப்பார்கள் சிங்கள மக்களால் பிரமிப்புடனும் அச்சத்துடனும் பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வெற்றிகொண்டு சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்திய இரட்டை வெற்றி வீரர்களாக மகிந்த ராஜபக்சவையும், கோத்தாபய  ராஜபக்சவையும் சிங்கள மக்கள் பார்க்கின்றனர்.

சிலவேளை சட்டத்தடைகளினால் கோத்தாபய வேட்பாளராக நிறுத்தப்படாதுவிட்டலும் மேற்படி பின்னணியில் ராஜபக்ச கும்பத்தினர் எவர் நின்றாலும் அவருக்கு வாக்களிக்கும் மனநிலையே சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.

அத்துடன் கோத்தாபயவுக்கு  தடை ஏற்பட்டாலும் அது மக்கள் மத்தியில் ஒருவகை கோபமாக உருவெடுத்து பெருமளவிலான வாக்கு வேட்டைக்கு ஏதுவாகவும் அமந்துவிடவும் கூடும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முஸ்லிம்கள்  ஒரு சவாலாக காணப்படுகின்றார்கள் என்ற தோற்றம் பெரிதாக ஸ்தாபிதம் அடைந்திருக்கும் இன்றைய சூழலில் பாதுகாப்பான, பலமான, ஸ்திரமான ஆட்சியை ராஜபக்சக் களால்தான் தரமுடியும் என்ற கருத்தாக்கம் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

“முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் இலங்கையில் சிறுபான்மையினர்.  ஆனாலும் உலகில் பலம் வாய்ந்த பெரும்பான்மையினர்” என்று கிழக்கு மாகாண ஆளுநராய் இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசிய பேச்சானது சிங்கள மக்கள் மத்தியில் கோபத்தை உருவக்கியுள்ளதுடன் சிங்கள மக்களை அதிகம் சிங்கள கடும்போக்காளர் பக்கம் ஒருங்கிணைத்தும் உள்ளது.

ஏற்கனவே காணப்படும் வேகமான முஸ்லிம் சனத்தொகை வெடிப்பு(Population Explosion) என்ற அச்சத்தின் பின்னணியில் மேலும் சிங்கள பெரும்பான்மை பலத்தை ஒருங்கு திரட்ட மேற்படி பேச்சு ஏதுமாய் அமைந்தது.இம்மாதம் 7 ஆம் திகதி கண்டியில் பொது பலசேன கூட்டிய மாநாட்டில் சிறுபான்மையினரின் வாக்குகளில் தங்கியிருக்காமல் முற்றிலும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற கோசம் முதன்மை பெற்றிருந்தது.IMG 3756 man 600 11 ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசு

இலங்கையிலுள்ள 10,000 பௌத்த விகாரைகளில் 7,000விகாரைகளை ஒருங்கி ணைத்தால் அதன்மூலம் சிங்கள வாக்குகளால் மட்டுமான அறுதிப் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடியுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு திட்டத்துடன்தான் ராஜபக்சகள் ஜனாதிபதி தேர்தலை அணுகுகிறார்கள். இத்திசை வழி நோக்கி அவர்களின் கை ஓங்கியிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் அரசியல், சமூக, இராணுவ ரீதியில் பலம் பொருந்திய ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக வாக்களித்தால் சிங்கள மக்களுடன் ஒட்டி வாழும் தமக்கும் தமது வர்த்தகத்திற்கும் பெரும் கேடு ஏற்படும் என்ற அச்சம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்த சம்பவங்களால் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆதலால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் தலைவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க ராஜபக்சவுக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்தது போல் இம்முறை வாக்களிக்க மாட்டார்கள்.

முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு கேட்டுக்கொண்டலும் அதற்கும் அப்பால் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் இரு பெரும் பலம் பொருந்திய கட்சிகளுக்கிடையே ஏறக்குறைய சமபங்காக பிரியும். அதுதான் முஸ்லிம்களின் முன்னுள்ள தவிர்க்க முடியாத தெரிவாகவும் அமையும்.அவ்வாறு கடந்த தேர்தலில் அளிக்கப்பட்டது போல் முஸ்லிம்களின் வாக்குகள் ஒருபக்கம் செல்லாமல் இரண்டாக பிரிந்தாலே அது ராஜபக்சாக்களுக்கு பெரும் சாதகமாக அமையும்.

இப்பின்னணியில் ராஜபக்சகள் போதிய முற்தயாரிப்புடன் வெற்றிக்கான நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளனர். பாராளுமன்ற அரசியல் முறைக்கு வெளியேயான அரசியலிலும் கைதேர்ந்தவர்களான ராஜபக்சாக்களுக்கு உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து உருவான அரசியற் குழப்ப நிலையானது அனைத்து வகையிலும் வாய்ப்பான சூழலை தோற்றுவித்துள்ளது.

ஒருவேளை, இலங்கையில் 2020 ஆம் ஆண்டு தம்பி (அல்லது ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர்) சிங்காசனத்தில் முடி தரித்து அமர்ந்திருக்க அருகே அண்ணன் (பெருந்தலைவர்)முதல் மந்திரியாய் வீற்றிருக்கக்கூடிய வரலாற்றுக் காட்சியை காண்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் தெரிகிறது .அதேவேளை. ஈரான் ஒருநாள் அணுகுண்டை தயாரித்துவிடும் என்பது இஸ்ரேலினதும், அமெரிக்காவினதும் கணிப் பீடாகும்.

ஈரான் அணுகுண்டு தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பேரழிவாய் அமைந்துவிடும் என்ற பின்னணியில் அத்தகைய அணு ஆற்றலை ஈரான் பெற்றிடாமல் தடுத்திட வேண்டும் என்பது இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் தீர்க்கமான முடிவாகும்.

ஈரான் படிமுறை வளர்ச்சியடைந்து அணுகுண்டு தயாரிக்கும் வரை காத்திருக்காமல் தற்போது காணப்படக்கூடிய ஒரு சாதகமான சூழலில் ஈரானின் மீது யுத்த மேகத்தை கவிழ்ப்பதன் வாயிலாக ஈரானை விரைவான அணுகுண்டு தயாரிப்பை நோக்கி தூண்டமுடியும்.

அவ்வாறாக அணுகுண்டு தயாரிப்பதற்கான முதிர்ச்சி நிலையை ஈரான்  எட்டும் போது அணுகுண்டு தயாரிப்பின் பெயரால் அதன்மீது  தொடுக்கும் நேரடி யுத்தத்தின் வாயிலாக அதன் அணுவாயுத ஆற்றலை முற்றாக அழித்து அதில் ஈரானை குறைந்தது இரண்டு தசாப்தங்களுக்கு பின்தள்ளிவிடலாம்.

1981 ஆம் ஆண்டு  ஓபரேசன் ஒபேரா அல்லது ஒபரேசன் பாபிலோன் (Operation Opera or Operation Babylon)என்ற பெயரில் ஈராக்கிய அணு உலைகள் மீது இஸ்ரேல் திடீர் விமான தாக்குதலை நடாத்தி அதனை முற்றிலும் அழித்தொழித்த உதாரணம் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் அணுகுண்டு தயாரிக்கும் விளிம்பை ஈரான் அடைய இன்னும் சற்று காலம் எடுக்கும்.

எனவே தற்போது ஈரான் மீது சூழ்ந்துள்ள யுத்த மேகங்கள் முதிர்ச்சியடைந்து கருமேகங்களாக்கூடிய காலத்தையும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனதிபத்தித் தேர்தலுக்கு முன்னான காலத்தையும் ஒட்டிய கால இடைவெளியை யுத்தத்திற்கான இலக்காக கொண்டு இன்றைய அமெரிக்க நிர்வாகம் ஈரான் தொடர்பான நடவடிக்கைகளை முன்னேடுக்கிறது.

அத்தகைய யுத்த சூழலில் “அமைவிடம்” என்ற இலங்கைக்குரிய அமைவிட அடுக்கு முக்கியத்துவத்தால் இலங்கை தவிர்க்க முடியாதவாறு யுத்தப் பிராந்திய புயலின் மையமாகிவிடும்.இந்நிலையிற்தான் இலங்கையுடன் அமெரிக்கா மேற்கொள்ள முனையும் ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் விசாலமடைகிறத இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மேற்படி அமெரிக் காவுடனான ஒப்பந்தம் தொடர்பான தமது ஒவ்வாமையை இறுக்கமாக வெளியிட்டு வருகின்றனர்.

சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு எதிராக அபாயச் சங்கு ஊதுகின்றனர்.

ராஜபக்சக்களின் முகங்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் தொடர்பாக கறுத்துப் போயுள்ளன. ரணில் மட்டுமே பச்சைக்கொடி காட்டும் நிலையில் உள்ளார்.

இத்தகைய பின்னணியில் வாளேந்திய சிங்கத்தின் முதுகில் கோத்தாபயக்கள் அமரும் போது வாளேந்திய சிங்கத்தின் முற்றத்தை ஆடுகளமாக கொண்டு வெளிநாட்டு சக்திகள் பலவும் களமாடக்கூடிய காட்சிகள் அரங்கேற முடியும்.

இந்த ஆடுகளத்தை ராஜபக்சக்களோ அல்லது வேறெந்த சிங்கள ஆட்சியாளர்களோ எப்படி கையாளப் போகிறார்கள் என்பதற்கு அப்பால் தமிழ் தரப்பானது இதில்  பங்காளர்களாகவா அல்லது பார்வையாளர்களாகவா அல்லது பந்தாடப்படுப வர்களாகவா இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியது அவசியம்.

இவ்வாறு அடுத்த ஆண்டில் உருவாகக்கூடிய இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலை எவ்வாறு தமிழ் தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்தப் போகிறது? கற்பனைகளுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான வகையில் இவை பற்றிய முன்கூட்டிய சிந்தனைகளும் அணுகுமுறைகளும் எழவேண்டியது அவசியம்.

இத்தகைய உள்நாட்டு – வெளிநாட்டு சூழலை தமிழ் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதிலிருந்தே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

 

கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) – றோய் சமாதானம்

ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்த கனடாவில் வசிக்கும் றோய் சமாதானம் அவர்கள் சிறப்பு பேட்டி

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீங்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு விதமான சித்திரவதைகளை அனுபவித்ததாக அறிகின்றோம். தங்கள் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் எப்போது எங்கே இடம்பெற்றது இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று கூறமுடியுமா?

நான் 2007 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கொழும்புக்கு அண்மையிலுள்ள யா-எல என்ற இடத்தில் வைத்து இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டேன். 1990 களில் இலங்கையை விட்டு வெளியேறி கனடாவில் தஞ்சடைந்திருந்த நிலையில் எனக்கு கனடாவில் வதிவிட உரிமை கிடைத்தது.

இதன் பின்னர் எனது திருமணத்திற்காகவும் வியாபாரத் தேவைகருதியும் 2005-2006 ஆண்டுகளில் இலங்கைக்கு சென்று திரும்பிய நிலையில் 2007 இல் இலங்கை சென்றிருந்தபோதே கைது செய்யப்பட்டேன். நான் கையடக்க தொலை பேசிகள் இறக்குமதி செய்ததில் அரசிற்கு வரி செலுத்தவில்லை என்றும் தங்களுக்கு பணம் தந்தால் உடனே விடுவோம் என்றும் கடுமையாக அச்சுறுத்தினார்கள். 25000 ரூபாவில் இல் தொடங்கி 50 இலட்சம் ரூபாவரை தருமாறு அச்சுறுத்தி கேட்டதோடு எனது கண்களைக் கட்டி என்னை பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு இடத்திற்கு கொண்டு சென்று கடுமையான சித்திரவதை செய்து விசாரணைகளைத் தொடர்ந்தார்கள்.

நான் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு தான் நான் தொலை பேசிகளை கடத்தியதாகவும் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தான் என்னை 1990 இல் கனடாவிற்கு அனுப்பியதாகவும் அவர்களின் அறிக்கையில் எழுதியிருந்தது.

பொட்டம்மான் சொல்லித்தான் நான் இலங்கைக்கு வந்ததாகவும் நான் சரத் பொன்சேகா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் நோக்குடன் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் உண்மைக்கு புறம்பான பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி அறிக்கையை எழுதி எனக்கு ஒருவருடம் நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்பை மறுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் கொழும்பு சையித் வீதியில் உள்ளது பழைய பாஸ்போட் அலுவலகத்தில் உள்ளது. அதில் ஒரு வருடம் அடைத்து வைத்திருந்தனர்.still torture continue 720x4801 கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) - றோய் சமாதானம்

அதற்கு பின்னர் உண்மைக்குப் புறம்பான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் நான் கையப்பம் போட மறுத்ததால் என்னை பூசாவில் கொண்டுபோய் தனியாக அடைத்து வைத்திருந்தார்கள். அங்கு நான் அனுபவித்த துன்பங்களையும் பார்த்த கொடுமைகளையும் வார்த்தைகளால் கூற முடியாது. மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள் அங்கு அரங்கேற்றப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அங்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளையும் பல்வேறு சித்திரவதைகளையும் கண்டேன். நான் பார்த்த இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஆவணப்படுத் தியுள்ளேன்.

எனது மனைவி பிள்ளையையும் கைது செய்யப் போவதாகவும் அவர்களைக் கற்பழிப்புக்கு உள்ளாக்கப் போவதாகவும் கடுமையான மிரட்டல் விடுக்கப்பட்டதால் எனது மனைவி பிள்ளைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவிலே வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

இந்த நேரத்திலே எனது வழக்கறிஞரும் கனடா அரசும் தலையிட்டு நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் கொண்டுவந்த தொழில்நுட்ப சாதனங்களில் நிறிஷி இருந்தது என்று ஒத்துக்கொள்ளுங்கோ என்று அறிவுறுத் தினார்கள் அதன்பின்னர் நான் அதை ஒத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் ஒன்று மற்றும் இரண்டிலும் சகல சார்ச்சும் எடுத்துவிட்டு எனக்கு ஐந்து இலட்சம் பணம் செலுத்துமாறும் தீர்த்தார்கள் உண்மையிலேயே உளவுத்துறை கேட்ட பணத்தை தரவில்லை என்பதற்காகவே என்னை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை என்று பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள்.

தங்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட நடவடிக்கைகளுக் கான முனைப்புக்களை கூறமுடியுமா?

இலங்கையில் எனக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக 2013 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கு போட்டேன். 2016 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஆறு மாதத்திற்குள் எனக்கு இழப்பீடு வழங்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்க வேண்டும். என்னை துன்புறுத்திய அனைத்து அதிகாரிகளும் பதவி விலக்கப்பட வேண்டும் போன்ற வரையறைகளுடன் ஆறு மாதத்திற்குள் இவற்றை நிறைவேற்ற வேணடும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்றைக்கு 2019 ஆகிறது இதுவரை எனக்கு நீதி கிடைக்க வில்லை. கோத்தபாஐ ராஜபக்ச எப்ப அமெரிக்கா வருவார் என்று 2017 தொடக்கத் திலிருந்தே நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். அவர் சில தடவைகள் வந்து வந்து போனார். ஆனால் சூழ்நிலை சரியாக அமையவில்லை. தற்போது இங்கு வருவதாக அறிந்தேன். ஏற்கனவே தொடர்பில் இருந்த நான், 2013 இல் இருந்தே எனது வழக்கில் உதவிய சட்ட செயற்பாட்டாளர்கள் யஸ்மின் சூக்கா பிரான்சிஸ் கரிசன் உட்பட அமெரிக்காவில் உள்ள எனது வழக்கறிஞர்கள் எல்லோரின் ஆதரவுடனேயே நான் வழக்கை பதிவு செய்துள்ளேன்.Gotae1341974562542 கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) - றோய் சமாதானம்

நான் இழப்பிடு கோரிய போடப்பட்ட ஒரு சிவில் வழக்கு. இது குற்றவியல் வழக்கல்ல. இதில் லசந்த விக்கிரம சிங்கவின் மகள் போட்ட வழக்கு வேறு. எனது வழக்கு வேறு. எனது வழக்குடன் 10 பேரை இணைத்துள்ளேன். என்னுடன் சேர்த்து 11 பேர் இந்த 10 பேரில் 03 பெண்கள் உட்பட 08 பேர் தமிழர்கள் 2 சிங்களவர்கள் உள்ளடங்கலாகவே நான் வழக்கை முன்னெடுத்து செல்கின்றேன்.

இந்த வழக்கிற்கும் கோத்தபாய ராஐபக்சவின் அமெரிக்காவின் பிரசாவுரிமை தொடர்பான வழக்கிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்படவும் முடியாது காரணம் எனது வழக்கு ஒரு சிவில் வழக்கு. அவரின் வழக்கு பிரசாவுரிமை வழக்குடன் தொடர்புடையதால் எந்த விதத்திலும் எமது வழக்குடன் சம்பந்தப் படாது. அவரின் பிரசாவுரிமை இரத்து செய்து அவர்கள் அடுத்த மாதமே தீர்ப்பை கொடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கு எமது வழக்கிற்கு அப்பாற் பட்டது. அதேவேளை எமக்கு நீதி கிடைக்கும்வரை கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் போட்ட வழக்கிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் இதில் வெற்றி பெற்றால் இது சட்ட ரீதியாக ஆவணப்படுத்தப்படும்.

மனித உரிமை தளத்திலே நீதிவேண்டி தாங்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு புலம்பெயர் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எந்தளவில் ஆதரவு தருகின்றனர்?

ஐ.நா. தொடக்கம் சர்வதேச மட்டத்தில் நான் முன்னெடுத்த எந்தவொரு வழக்கிற்கும் எந்தவொரு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஆதரவு தரவில்லை. மேலும் ஐ.நா.வில் வழக்கை போடுவதற்கு கனடாவில் உள்ள இலாப நோக்கமற்ற அமைப்பான சில வழக்கறிஞர்கள் உதவினார்கள். நான் வாழும் கனடாவில் உள்ள தமிழ் அரசியல் வாதிகள் எந்தவொரு ஆதரவையும் தரவில்லை. குறிப்பாக முக்கிய தமிழ் அரசியல் வாதியான கரி ஆனந்தசங்கரியோ கனடா அரசாங்கமோ எனக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கவில்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் எமது முயற்சியை மதித்து கனடாவில் உள்ள சில தமிழ் குடும்பங்கள் ஆட்களை ஒருங்கிணைத்து ஜெனிவா செல்வதற்கு போக்குவரத்து உதவிகளை செய்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ளனர். அதேநேரம் யஸ்மின் சூக்கா பிரான்சிஸ் கரிசன் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் எமது வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரவாக இருந்து எம்மை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 13 படையி னரும் கடந்த 03 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலையுடன் படையினர். சம்பந்தப் படவில்லை என்றால் ஏன் இவ்வளவு காலமும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஏன் தற்போது திடீரென்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. தற்போது நீதிபதி சொல்கிறார் போதிய ஆதாரம் இல்லை என்று. இந்த வழக்கில் மட்டுமல்ல எல்லா வழக்குகளிலும் படையினரையும் இலங்கை அரசையும் பாதுகாக்கும் நோக்குடனேயே இலங்கையின் நீதிப்பொறிமுறை செயற்படுகிறது. இந்த அடிப்படையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

பலமான மாற்று அணியை உருவாக்க விக்கியும் கஜனும் இணைய வேண்டும் – கருத்துக்கணிப்பில் மக்கள் தீர்ப்பு

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான அறிக்கைப் போர் பலமான மாற்று அணி ஒன்றை எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு கடும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் தெரிவித்திருக்கின்றது.

விக்கினேஸ்வரன் கஜேந்திரகுமாரை உள்ளடக்கிய மாற்று அணி ஒன்று இன்றைய கால கட்டத்தில் அவசியம் என்பதை தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் மேற்கொண்ட கள ஆய்வில் வலியுறுத்தி இருப்பதாகவும் மையம் தெரிவித் திருப்பதோடு இறுதி யுத்தத்திலே கஞ்சிக்காக வரிசையில் நின்போது அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களையும் முதியவர்களையும் நெஞ்சில் நிறுத்தி பலம் வாய்ந்த மாற்று அணியை உருவாக்குவதில் விக்கியும் கஐனும் கருத்தியல் முரண்நிலைகளை கடந்து அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அதேவேளை தாம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் மக்கள் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகளின் அடிப்படையிலேயே இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்த அறிக்கையின் விபரம் வருமாறு:

“போர் முடிவடைந்த போதுஇ தமிழ் மக்களின் தலைமைப் பாத்திரத்தை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்குரிய வரலாற்றுக் கடமையை உரிய முறையில் செய்திருந்தால் மாற்றுத் தலைமை ஒன்றைத் தேட வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. கடந்த நான்கு வருட காலத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகள் நலன்கள் என்பவற்றை விட ஐ.தே.க.வின் நலன்களுக்கே கூட்டமைப்புத் தலைமை முக்கியத்தும் கொடுத்திருந்தது. அதனால் தமிழ் மக்களுடைய உரித்துக்களை முன்னிலைப்படுத்தக்கூடிய – அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய ஒரு தலைமையைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.

அவ்வாறான ஒரு தலைமையை வழங்கக்கூடிய ஒருவராக விக்கினேஸ்வரன் அடையாளம் காணப்பட்டார். மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் எனச் செயற்பட்ட அரசியல் தலைமைகள் புத்திஜீவிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு இவ்விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருக்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட இதனை ஏற்றுக்கொள்கின்றார். தன்னுடைய பிந்திய அறிக்கையில் கூட விக்கினேஸ்வரன் தலைமையில் இணைந்து செயற்படத் தான் தயார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் உருவாகக்கூடிய மாற்று அணிக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு உள்ளடக்கப்படுவதை அவர் ஏற்க மறுக்கிறார். அவ்வமைப்பு வந்தால் அந்தக் கூட்டுக்குள் தான் வரப்போவதில்லை என்பது அவரது இறுக்கமான நிலைப்பாடு.

இந்த முரண்பாடு மாற்றுத் தலைமை அல்லது மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதில் தடங்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையத்தின் பிரதிநிதிகள் மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றை கடந்த ஒரு வார காலப்பகுதியில் மேற்கொண்டார்கள். தாயகத்திலும் புலம்பெர்ந்த தேசங்களிலும் வசிக்கும் ஆயிரம் பேரிடம் தொலைபேசி மூலமாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் கருத்துத் தெரிவித்தவர்களில் 981 பேர் குறுகிய முரண்பாடுகளைத் தவிர்த்து விக்கினேஸ்வரனும்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

பொது நலன்களின் அடிப்படையில் இவ்வாறு இணைந்து செயற்படாவிட்டால் தமிழ் இனம் பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கும் என்பதையும்இ 30 வருடங்களாகத் தொடர்ந்த போராலும் திட்டமிட்ட இன அழிப்பாலும் துவண்டுபோயுள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க முடியாது என்பதையும் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயுத ரீதியாக இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழினத்துக்கு எதிராக மறைமுகமான ஒரு போர் முன்னெடுக்கப்படுகின்றது. நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு திட்டமிட்ட குடியேற்றங்கள் கலாசார ரீதியான சீரழிவுகள் என பல வடிவங்களில் எமது மக்கள் மீது போராகத் தொடுக்கப்பட்டிருக்கின்றது. இன ஒடுக்குமுறைக்கான கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளன. எமது மண் கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துச் செல்லப்படுகின்றது. தனித்தனியாக எமக்குள் முரண்பட்டுக்கொண்டு நின்று இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடியாது.

அத்துடன்இ பாராளுமன்றத்தின் பலமும்இ மாகாண சபைகளும் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றடையும்போது அரசாங்கத்தின் இந்த ஆக்கிரமிப்பு தந்திரோபாயங்களுக்கு எதிராக காத்திரமான செயற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ளமாட்டார்கள். சிறிய சலுகைகளுக்காக இவற்றைக் கண்டும் காணாமலும் செல்வதே அவர்களுடைய அரசியலாக இருக்கும். அவர்களைத்தான் சர்வதேசமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கின்றது. அதனைத்தான் நாம் இப்போதும் காண்கிறோம். இதனைத்தான் நாம் தொடரவிடப்போகிறோமா?

இந்த சமகால வரலாற்றிலிருந்து சிலவற்றையாவது நாம் கற்றுக்கொள்ள முடியும்.

கொள்கை அடிப்படையில் இணைந்து செயற்படக்கூடிய கட்சிகள் தனித்தனியாகச் சென்று முரண்பாடுகளை மேலோங்கவிட்டால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தென்னிலங்கையின் தேசியக்கட்சிகளுக்குமே வாய்ப்பாகிவிடும். கடந்த கால வரலாறு மேலும் தொடர்வதற்கே அது வழிவகுக்கும். பறிபோய்க்கொண்டிருக்கும் தாயகம் முழுமையாகப் பறிபோவதற்கும் தாயகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மையினராவதற்குமே அது காரணமாக அமையும்.

ஆயுதப்போராட்டக்களத்திலே கடுமையான பகைமை உணர்வுடன் இருந்த சுரேஷ் செல்வம் போன்றவர்களை மக்களின் அரசியல் பலத்திற்காக தலைவர் பிரபாகரன் இணைத்து செயற்பட்ட விதத்தை அவரை ஏற்றுக்கொள்பவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

எமது மக்களின் அவல நிலையைக் கருத்திற்கொண்டு வரலாறு எமக்குத் தந்துள்ள பொறுப்பை ஏற்பதற்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக உழைக்கக்கூடிய கட்சிகள் முன்வரவேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற சிறிய தவறுகளைப் பெரிதுபடுத்தி – ஒற்றுமைக்கு வேட்டு வைக்காமல்இ தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக மட்டும் உழைப்பது என்ற பிரஞ்ஞையுடன்இ கட்டுக்கோப்பான யாப்பு – ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்படுவதற்கு இப்போதாவது முன்வராவிட்டால்இ எமது மக்கள் எம்மை மன்னிப்பார்களா என்ற கேள்வியை கேட்கவேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

ஆப்கானில் காவல்துறை தலைமையகம் மீது கார்க்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

ஆப்கானின் தென் பகுதியில் உள்ள காவல்நிலைய தலைமையகம் மீது தலிபான் படையினர் மேற்கொண்ட கார்க்குண்டு மற்றும் அதிரடித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கன்டகர் நகரத்தில் உள்ள காவல்நிலையம் மீதே நேற்று (18) மாலை இந்த கார் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் தமது பi-டயினர் நேரடியான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தலிபானின் பேச்சாளர் குரி யூசுப் அகமதி தெரிவித்துள்ளார்.

கனரக மற்றும் இலகு இயந்திரத் துப்பாக்கிகளுடன் காவல்நிலைய தi-லமையகத்திற்குள் நுளைந்த தலிபான் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 9 பொதுமக்களும், இரண்டு காவல்துறையினரும் கொல்லப்பட்டதுடன், 89 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசின் பேச்சாளர் பகீர் அகமதி தெரிவித்துள்ளார்.

இரண்டு தலிபான் படையினர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், மேலும் 6 பேர் மோதல்களில் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சைவ ஆலயங்களில் வேள்விக்கான தடை நீங்கியது

சைவ ஆலயங்களில் வேள்விகளின் போது மிருகங்கள் பலியிடப்படுவதை சிறீலங்கா அரசு தடை செய்திருந்தது. ஆனால் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மீண்டும் வேள்விகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மத வழக்கங்களை தடை செய்வதன் மூலம் அவர்களின் இன அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. சிறீலங்கா அரசின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு பல தமிழ் அதிகாரிகளும் துணைபேகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ் நீதிமன்றத்தில் வலிகாமத்தில் உள்ள கவுணாவத்தை நரசிம்மர் ஆலயத்தில் ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடுவதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் வேள்விக்கான தடையை விதித்திருந்தார்.

ஆனால் அதனை எதிர்த்து சட்டவாளர் கே. வி. எஸ் கணேசராஜா மேன்முறையீடு செய்திருந்தார்.

சைவ மக்களின் தென்மையான மத வழிபாட்டுக் கலாச்சாரத்தில் வேள்வியும் அடங்குவதாக  வாதத்தில் தெரிவித்திருந்ததை நீதிபதி ஏற்றுக்கொண்டு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தமிழ் மக்களை ரணில் ஏமாற்ற முயல்கிறார்- மகிந்த ராஜபக்¬

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ, அதனாலேயே இனப்பிரச் சினைக்கு இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் அறிவித் திருப்பதாக கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் அவரது கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க எந்த வொரு யோசனைகளையும் முன்வைக்காது இருந்துவிட்டு தேர்தல் நெருங்கும் நிலையிலேயே அந்த விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்க்ஷ கடுமையாக சாடியுள்ளார்.

அவசர அவசரமாக இந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்ய முயற்சிக்கின்றது.  மறுபுறம் பல்வேறு கொள்கைகள் தொடர்பான விடயங்களை வெளியிட்டு பாராளுமன் றத்தில் சட்டங்களையும் நிறைவேற்றிவருகின்றது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டத்தை வழங்க தயாராகியதாகவும்,ஆனால் அதனை செய்துமுடிக்க முடியாததனால் மீண்டும் அதனை கொண்டு வர வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். 4 வருடங்களாகின்ற போதிலும் குறைந்தபட்சமாக ஒரு பிரேரணையேனும் இதற்காக சமர்ப்பிக்கவில்லை.

அந்தப் பிரச்சினை குறித்து ஆழமாக ஆராய்வதற்கும் அந்தக் கட்சியும் அரசாங்கமும் தயாரில்லை. இந்த அரசாங்கம் கடந்த 04 வருடங்களாக அரசியற் பழிவாங்கலைத் தவிர வேறு எதைத்தான் செய்துமுடித்தது என்பதை கேட்கவிரும்புகிறோம்.

மரண தண்டனை தீர்மானம் கூட தற்போது ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் புதிதாக ஒன்றுமே இடம்பெறவில்லை. காரணம் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான மோதலாகும். இந்த மோதலானது உக்கிரமடைவதானது சமூகத்தையே பாதிக்கும் என்றார்.

 

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு ஜப்பான் நிதியுதவி

கிளிநொச்சியிலுள்ள பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கான நிதியுதவியின் ஊடாக 86,358 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் மனிதநேய அபிவிருத்தி நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ஜேசுராஜா அமிர்தராஜ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலையினை நினைவேந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வணக்க நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்பு போராட்டம் இடம்பெறுகின்றது. பின்னர் யுலை 23ம் நாள் செவ்வாய்கிழமை லண்டன் அலுவலத்தில் சுடறேற்றி அகவணக்கத்துடன் வணக்கம் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை யுலை 21ம் நாளன்று பிரான்சில் கறுப்பு யுலை நினைவேந்தலும், உரையாடலும் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கனடாவில் கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்புதலும் முன்னெடுக்கபடவுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவில் சிறிலங்கா ஆட்சியாளர்களினால், சிங்கள அரசினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கறுப்பு யூலை – 1983 தமிழினப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள் தொட்டு விட்டன.

காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன.

கறுப்பு யூலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.

1983 கறுப்பு யூலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச்  சொல்லியிருக்கிறது. இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

இலங்கைத்தீவுக்கு சென்றுள்ள ‘அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை’ தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

இலங்கைத்தீவில் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை செய்வதற்கு, ஒன்பது நாள் பயணமாக ஐ.நா அதிகாரி சென்றுள்ள நிலையில், தமது மரபுரிமையினை காக்கவும், பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் அமைதியான முறையின் ஒன்றுதிரண்ட தமிழ்மக்கள் மீது ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த அவசர கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள தமிழர்களின் பாராம்பரிய வழிபாட்டுத்தளமான பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அவ்விடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதோடு, முல்லைதீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தினை ஆக்கிரமித்து பௌத்த சிலையொன்று எழுப்பப்பட்டுள்ளது.

பாரம்பரியமான தமது வழிபாட்டுதளங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு பௌத்தமயமாவதற்கு எதிராக தமிழர்கள் தமது மரபுரிமையினைக் கோரும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழர்களின் இந்த அமைதிவழிப் போராட்டங்களை சிறிலங்கா அரச கட்டமைப்பினரும், பௌத்த பிக்குகளும் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி வரும் நிலையில், குறித்த சம்பவங்கள் மீது கவனம் செலுத்த ஐ.நா அதிகாரியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

யுலை 18ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை இலங்கைத்தீவில் தங்கியிருக்கும் ஐ.நாவின் அதிகாரி, கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

தொடர்ந்து தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு யுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.