தமிழ் மக்களை ரணில் ஏமாற்ற முயல்கிறார்- மகிந்த ராஜபக்¬

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ, அதனாலேயே இனப்பிரச் சினைக்கு இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் அறிவித் திருப்பதாக கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் அவரது கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க எந்த வொரு யோசனைகளையும் முன்வைக்காது இருந்துவிட்டு தேர்தல் நெருங்கும் நிலையிலேயே அந்த விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்க்ஷ கடுமையாக சாடியுள்ளார்.

அவசர அவசரமாக இந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்ய முயற்சிக்கின்றது.  மறுபுறம் பல்வேறு கொள்கைகள் தொடர்பான விடயங்களை வெளியிட்டு பாராளுமன் றத்தில் சட்டங்களையும் நிறைவேற்றிவருகின்றது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டத்தை வழங்க தயாராகியதாகவும்,ஆனால் அதனை செய்துமுடிக்க முடியாததனால் மீண்டும் அதனை கொண்டு வர வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். 4 வருடங்களாகின்ற போதிலும் குறைந்தபட்சமாக ஒரு பிரேரணையேனும் இதற்காக சமர்ப்பிக்கவில்லை.

அந்தப் பிரச்சினை குறித்து ஆழமாக ஆராய்வதற்கும் அந்தக் கட்சியும் அரசாங்கமும் தயாரில்லை. இந்த அரசாங்கம் கடந்த 04 வருடங்களாக அரசியற் பழிவாங்கலைத் தவிர வேறு எதைத்தான் செய்துமுடித்தது என்பதை கேட்கவிரும்புகிறோம்.

மரண தண்டனை தீர்மானம் கூட தற்போது ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் புதிதாக ஒன்றுமே இடம்பெறவில்லை. காரணம் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான மோதலாகும். இந்த மோதலானது உக்கிரமடைவதானது சமூகத்தையே பாதிக்கும் என்றார்.