Home Blog Page 2695

விண்வெளி மையத்தில் பழுதுபார்ப்பு பணிகளில் ரசிய ரோபோ

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

இதன் உயரம் 5 அடி 11 அங்குலம். எடை 160 கிலோ. இதற்கு ‘ஸ்கைபாட் எப்850’ என்ற அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘பெடர்’ ரோபோவை,  சோயுஸ் எம்-14 விண்கலம் மூலம், கஜகஸ்தானில் உள்ள ஏவுதளத்திலிருந்து ரஷ்யா நேற்று காலை அனுப்பியது. வழக்கமாக சோயுஸ் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.

இந்த முறை, சோதனை ரோபோ அனுப்பப்பட்டுள்ளது. விண்கலத்தின் பைலட் இருக்கையில் கட்டப்பட்டிருந்த ரோபோ தனது கையில் ரஷ்ய கொடி ஒன்றையும் வைத்திருந்தது. சோயுஸ் விண்கலம் ஏவுதளத்தில் இருந்து புறப்படும்போது, ‘நாம் புறப்படலாம் (லெட்’ஸ் கோ) என ரோபோ கூறியது. இது விண்வெளிக்கு முதலில் சென்ற ரஷ்ய வீரர் யூரி காகரின் கூறிய வார்த்தை. இந்த பெடர் ரோபோவுக்கு இஸ்டாகிராம், டிவிட்டர் கணக்குகளும் உள்ளன. பெடர் ரோபோ விண்வெளியில் கற்றுக்கொள்ளும் விஷயங்களை  இதில் தெரிவிக்கும்.

குறைந்த புவியீர்ப்பு விசையில் எப்படி செயல்படுவது, தண்ணீர் பாட்டீலை எப்படி திறப்பது போன்ற செயல்களை இந்த ரோபோ பரிசோதித்து பார்க்கும். ஸ்கூரு டிரைவர், ஸ்பானர், தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது, சர்வதேச விண்வெளி மையத்தில் மின் வயர்களை இணைப்பது, துண்டிப்பது போன்றவற்றையும் இந்த ரோபா பரிசோதித்து பார்க்கும்.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த மாதம் சென்ற ரஷ்ய வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்கோட்சோவின் மேற்பார்வையில் இந்த ரோபோ பணிகளை மேற்கொள்ளவுள்ளது. மனிதனின் செயல்களை அப்படியே செய்யும் இந்த ரோபோ, விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி நடை போன்ற ஆபத்தான பணிையும், இந்த ரோபோ மேற்கொள்ளும் என ரஷ்ய விண்வெளி மைய இயக்குனர் பிளாஸன்கோ தெரிவித்தார். விண்வெளியை மிக ஆழமாக ஆராயும் பணிகளுக்கு, இந்த வகை ரோபோக்களை எதிர்காலத்தில் பயன்படுத்த ரஷ்ய விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு ரோபோ அனுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. நாசா கடந்த 2011ல் ‘ரோபோனட்-2’ என்ற ரோபோவை அனுப்பியது. இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இது கடந்த ஆண்டு பூமிக்கு திருப்பி கொண்டுவரப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டில், ஜப்பானும் ‘கிரோபோ’ என்ற சிறிய ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது.

வடக்கு, கிழக்கில் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – சஜித்

சனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராகக் களமிறங்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், அந்தக் கோரிக்கைக்குப் சாதகமான பதில் எதுவும் வழங்காமல் இரா.சம்பந்தன் நழுவியுள்ளார் .

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு சஜித் பிரேமதாஸவுக்கும் இரா.சம்பந்தனுக்கு இடையில் முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் மங்களவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

“எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கின்றேன். என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்குமாறு கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நான் நியமனம் பெறாத பட்சத்தில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுமாறும் எனக்குப் பல தரப்பின ராலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது பொது வேட்பாளராக நான் களமிறங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எனக்குக் கட்டாயம் தேவை.

வடக்கு, கிழக்கில் மாபெரும் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன், எனது பிரசாரக் கூட்டங்களில் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்” என்று இந்தச் சந்திப்பின்போது இரா.சம்பந் தனிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், “ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து இப்போதே அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் இது தொடர்பில் நான் மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது.இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் பேசித்தான் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.அதற்கு முன்னர் சனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுடனும் கூட்டமை ப்பின் நாடாளுமன்றக்குழு தனித்தனியே பேச்சுகளை நடத்தும்” என தெரிவித் துள்ளார்.

சீனாவின் போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டார் மைத்திரி

  1. மேற்குலகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்திவரும் சிறீலங்கா அரசு தற்போது சீனாவில் இருந்து தனது கடற்படைக்கு கொள்வனவு செய்யப்பட்ட போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டுள்ளது.

பி- 625 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த கப்பல் சிறீலங்கா கடற்படையில் நேற்று (22) முதல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறிலங்கா அரச தலைவர், சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த வாரம் நியமனம் பெற்றவரும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட மேற்குலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதும், அவரின் பிரசன்னத்தை சீனா வரவேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 122 மீற்றர் நீளமும், 2300 தொன் எடையும் கொண்ட இந்த கப்பல், நவீன ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்களைக் கொண்டதாகும். மேலும் 23 கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்த கப்பலில் 18 அதிகாரிகள் உட்பட 92 படையினர் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து ள்ளனர் – சந்திரகுமார்

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். புதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமி ஓ பிரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமாரை அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை காலை பதினொரு மணிக்கு இடம்பெற்ற இச் சந்திப்பில் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளின் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். குறிப்பாக நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்கள் உட்பட பல இடங்களின்ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இடம்பெறுகின்றமை, என்பன நல்லிணக்கச் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்துகிறது எனத்தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் உருவாக்கப்பட்டமை மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுகின்றமை, அவர்களுக்கான நீதியான தீர்வுகள் காணப்படாமை பற்றியும், குறித்த அலுவலகத்தின் மூலம் இதுவரை ஆரோக்கியமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்ற விடயம் என்பன நல்லிணக்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறது.

இதனை தவிர புதிய இராணுவத்தளபதியின் நியமனமும் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்திருக்கிறது.

இதனைத் தவிர கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேச அழுத்த தற்போது இல்லை எனவும் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் வகையில் பெயர் குறிப்பிட்டு நீதிபதிகளை நியமிக்கும் அளவுக்கு காணப்பட்ட சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை என்றும் தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர்,ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் இரண்டு தரப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்தே காணப்படுகின்றனர். எனவே இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் பற்றி எதனையும் கூற முடியாது என்றும் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இலங்கையூடாக கோவைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்;பாதுகாப்பு தீவிரம்

இலங்கை ஊடாக ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிற்குள் ஊருடுவியுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாகவும் ஊடுருவிய ஆறு தீவிரவாதிகளும் கோவையில் முகாம் இட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசை எச்சரித்துள்ளது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி இருக்கும் எச்சரிக்கையில், ”இந்த ஆறு தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெயர் இளையாஸ் அன்வர். அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆறு தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் புகுந்துள்ளனர்.

மற்ற 5 பேரும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள். இவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நெற்றியில் திருநீறு அணிந்து, திலகம் இட்டு இருப்பார்கள். தற்போது இவர்கள் 6 பேரும் கோவையில் முகாமிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு இருப்பதாக வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி கே. பெரியய்யா மேட்டுப்பாளையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வரும் சோதனைகளை பார்வையிட்டார். இவரைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவைக்கு விரைந்துள்ளார். அங்கு இவர் முன்னணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கோவையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை, கேரளா எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டு கோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், விமான நிலையம், காந்தி புரம், டவுன் ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, லாட்ஜ்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

எழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம்!!

சர்வதேச போர்குற்ற விசாரணையை நடாத்து,தமிழ் அரசியல் கைதிகள் அனனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019 அன்று நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அணிதிரட்டும் முகமாக இன்று காலை யாழ் நல்லூர் ஆலய முன்றல் மற்றும் யாழ் பேருந்து தரிப்பிடநிலையங்களில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். தமிழ் மக்கள் பேரவையினர் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Ezlugatamil எழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம்!!

வைத்தியர் சிவரூபனை அடுத்து மேலும் 3 பேர் கைது

பளை வைத்திய சாலையின் பெறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 பேர் சிறீலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பகுதியை சேர்ந்த வாகனங்கள் திருத்துமிடத்தின் உரிமையாளர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்தவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர்

எதிர்வரும் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிஸ்டர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் போட்டியிடவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான அதிகளவு வழக்குகள் விசாரிக்கப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இவரை பலரும் இரும்புப் பெண் என அழைத்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பிரதி சொலிஸ்டர் பதவியிலிருந்து 20.08 அன்று இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி சார்பாக இவர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் – ஈரான்

அணு ஆயுத ஒப்பந்த விவகாரங்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

பாவர் 373 என்ற நீண்டதூர ஏவுகணை அமைப்பை ஈரான் இராணுவம் 22.08 இன்று அறிமுகப்படுத்தியது. இதில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

“அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. நமது எதிரிகள் நமது அணுகுமுறைகளை ஏற்கவில்லை. நாமும் அவர்களது அணுகுமுறைக்கு தக்கபடி பதிலளிக்க வேண்டும்.

ஏவுகணைகளைக் கொண்டு அவர்கள் தாக்கும் போது, அந்த ரொக்கெட்டைப் பார்த்து, நாங்கள் அப்பாவிகள் எங்களைக் கொல்ல வேண்டாம் என நாம் கூறிக்கொண்டிருக்க முடியாது.” என்றார்.

இந்த பாவர்-373 வகை ஏவுகணை ரஷ்யாவின் எஸ்-300 ரக ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்ததாகும்.

ஒரே சமயத்தில் 100 இலக்குகளை தாக்கக்கூடியது. அதே நேரத்தில் 6 விதமான ஆயுதங்களோடு போரிடக்கூடியது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ரணிலை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும் கூட்டமைப்பு; சுரேஷ் பிறேமச்சந்திரன்

அரசைப் பாதுகாத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சனாதிபதி மைத்திரி மட்டுமே தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார், பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தமிழ் மக்களை ஏமாற்றவில்லை என்ற தோற்றப்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் என ஈ.பி.ஆர். எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தற்போதைய அரசைத் தாங்கள் தான் கொண்டு வந்தோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறி வந்தனர்.இப்போது மைத்திரி எம்மை ஏமாற்றி விட்டார் என விமர்சிக்கின்றனர் கண்டிக்கின்றனர். அவ்வாறு கண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் மைத்திரி மட்டும் ஏமாற்றவில்லை. ரணிலும் தான் மக்களை ஏமாற்றியுள்ளார். போர்க் குற்றச்சாட்டுக்களில் முக்கிய இராணுவ அதிகாரியாக குறிப்பிடப்பட்டு வரும் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதி பதவியை சனாதிபதி வழங்கியுள்ளார்.இதற்குச் சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் இராணுவத் தளபதியின் நியமனம் நாட்டின் சுயாதீனமான விடயம், இதில் சர்வதேசநாடுகள் தலையிடக்கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரணில் நியமித்த வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டு ள்ளார் என்றால், இராணுவத் தளபதியின் நியமனத்தில் ரணிலும் மைத்திரியும் இணைந்தே நியமித்துள்ளனர். ஆனால் கூட்டமைப்பினர் இதே ரணிலுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். இராணுவத் தளபதியின்நியமனம் வடக்கு கிழக்கில் வாழும் மக்களைத் தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்தஅரசு மக்கள் மீது குறிப்பாகச் சிறுபான்மை இனம் மீது அக்கறை இல்லாது செயற்படுகின்றது என்பதையே வெளிக்காட்டுகின்றது. தற்போது நாட்டில் சனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயம்பேசு பொருளாக உள்ளது.சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சிகள் சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் என்றைக்குமே கோட்டாவுக்குக் கிடைக்காது. ஏனெனில் அவர் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பதில் சாதகத்தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்” என்றார்.