Home Blog Page 2416

மன்னார் மனிதப் புதைகுழி,அரசாங்கம் அலட்சியப்படுத்த முடியாது- சட்டவாளர்

மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில், மன்னார் மனித புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, கடந்த விசாரணையின் போது அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களுக்கு காணாமல் போனோரின் குடும்பங்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் பிரதி வாதங்களை மன்றில் முன் வைத்தார்.

காணாமல் போனோரின் குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு அரச தரப்பு சட்டத்தரணியால் கடந்த வழக்கு விசாரணையின் போது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல், இந்த வழக்கு இறந்தவர்களுடையதும் காணாமலாக்கப்பட்டவர்களினதும் வழக்கு என்பதால், அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்த முடியாது என மன்றில் சுட்டிக்காட்டினார்.

இதுவொரு மனிதாபிமான பிரச்சினை தொடர்பான வழக்கு எனவும் சட்டம் சம்பந்தமான பிரச்சினையாக இதனைக் கருத முடியாது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.

காணாமற்போனோரின் பெற்றோர்கள் சுமார் ஆயிரம் நாட்களாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காணாமல் போனோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி இருப்பதாக தெரிவித்தார்.

காணாமல் போனோர் சார்பில் மன்றில் 13 சத்தியக் கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்தார்.

மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையின் ஊடாக மனித எச்சங்கள் 300 வருடங்கள் பழமை வாய்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட மக்களும் சட்டத்தரணிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மன்றுக்கு அறிவித்தார்.

விசாரணையின் ஒரு பகுதி அறிக்கையாகவே, அந்த அறிக்கையை நீதிமன்றம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் மேலதிக அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தடயவியல், தடயப்பொருட்கள், சான்றுப்பொருட்கள் என பலதரப்பட்ட அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இந்த விசாரணை தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை முன் வைத்தார்.

மன்றின் பாதுகாப்பிலுள்ள சான்றுப்பொருட்கள் முறையான வகையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், சட்ட வைத்திய அதிகாரியிடமுள்ள மனித எச்சங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையின் சாவியை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், சட்ட வைத்திய அதிகாரியிடமுள்ள சான்றுப் பொருட்களை மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் கட்டளையிட வேண்டும் எனவும் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : வி.உருத்திரகுமாரன்

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 43ஆம் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளதோடு, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஆணையாளர் அவர்கள் முன்வைக்கவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோளொன்றினை அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதவுரிமைகளை ஊக்கி வளர்த்தல் ஆகியவன்றை அடிப்படையாக கொண்டு, கொண்டுவரப்பட்ட ஐநா மனிதவுரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தின் நிலைமாறுகால நீதிக்கான முன்முயற்சி காலவாதியாகி விட்டபடியால், அதற்கு உயிரூட்டும் முயற்சியைக் கைவிட்ட, அதற்கு மாறாக ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றை கைக்கொள்ளும்படியும் அனைத்துலக சமூகத்திடம் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புவதும்,
இனப்படுகொலையினை தடுப்பதற்கான அனைத்துலக உட்படிக்கைக்கு அமைய,சிறிலங்கா இனப்படுகொலை அரசினை, அனைத்துலக நீதிமன்றத்திற்கு அனுப்புவதும், ஈடுசெய் நீதிச் செயல்நிரலாக அமைய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா தீர்மானத்தின்படி தனக்குள்ள நிலைமாற்ற நீதிக் கடப்பாடுகளை வேண்டுமென்றே சிறிலங்கா நான்காண்டு காலத்தை நிறைவேற்றத் தவறியயிருந்த நிலையில், மனிதவுரிமைப் பேரவை சென்ற ஆண்டு அமர்விலேயே சிறிலங்கா தொடர்பான தன் வழியை மாற்றிக் கொண்டு, ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மாறாக அத்தீர்மானத்துக்குக் கெடுமாற்றம் தந்து தள்ளிப்போட முடிவு செய்ததன் விளைவாக, சிறிலங்காவின் தண்டனை விலக்கிய குற்றப் பண்பாடு மேலும் ஊன்றி வலுப்பட்டதோடு, ஆய்த மோதலின் போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பெரிதும் பொறுப்பானவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டுவிட்டது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநா மனிதவுரிமைப் பேரவையின் நிலைமாறுகால நீதிப்பற்றுதல் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றை நோக்கி நகர்த்துவதற்குப் பதில் அவற்றிலிருந்து அது விலகிச் செல்வதற்கே அது முடிவில், வழிகோலிற்று எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஐ.நா 30/1தீர்மானத்திலிருந்து சிறிலங்கா ஒருதரப்பாக விலகிக் கொள்வது மனிதவுரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் தெளிவாக மறுதலிப்பதே ஆகும் எனத் தெரிவித்துள்ளதோடு, ஐநாவின் சக உறுப்பரசுகளை அது துச்சமாக மதிப்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஆகவே இந்தக் கட்டத்தில் நிலைமாற்ற நீதி பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. சரியாகச் சொன்னால் ஈடுசெய் நீதியே இன்றையத் தேவையாகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2015 தேர்தலில் இராசபட்சே தோற்று, சிறிசேனா அதிகாரத்துக்கு வந்த போது, சர்வதேச சமுதாயம் இந்த ஆட்சி மாற்றத்தை நிலைமாறுகால நீதி அடைவதற்கு ஒரு வாய்ப்பாகப் பார்த்தது. ஆனால் உண்மை வேறுவிதமாக இருப்பதை கடந்த ஐந்து ஆண்டுக் காலம் காட்டி விட்டது. பார்க்கப் போனால், சிறிசேனா அரசு நிலைமாற்ற நீதியை தண்டனை விலக்கிய குற்றத்தின் நவீன வடிவமாகப் பயன்படுத்திக் கொண்டது. காணாமற்போனவர்களில் பெரும்பாலார் இறந்து விட்டார்கள் என்று சிறிலங்காவின் தலைமையமைச்சர் விக்கிரசிங்கே அறிவித்து விட்ட நிலையில் காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது என்பது சிறிலங்கா அரசு ஐநா மனிதவுரிமைப் பேரவையையும் பரந்த சர்வதேச சமுதாயத்தையும் ஏமாற்றுவதற்கே நிலைமாறுநீதியைப் பயன்படுத்திக் கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

நிலைமாறுகால நீதிக்கான முன்னிபந்தனைகளில் ஒன்று: சம்பந்தப்பட்ட தரப்பு தான் இழைத்த மீறல்களை ஏற்றுக்கொள்வதாகும். ஆனால் மீறல்கள் நடந்தன என்பது சிறிலங்காவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. சொல்லப்போனால் திரும்பத்திரும்ப நாம் கண்டது மறுப்புகளும் வெற்றி மமதையுமே ஆகும்.

அரசே மோசமான குற்றங்கள் புரிந்து, குற்றங்களுக்கு இரையானவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் சார்ந்த குழுவுக்கு எதிராக – சிறிலங்காவைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு எதிராக – பரவலான நிறுவனவகைப் பாகுபாட்டின் சிற்பியும் கங்காணியுமாக இருக்கும் போது, பொறுப்புக் கூறல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயல்வழிகளில் அரசே தொடர்புடையதாக இருக்கும் வரை துயரப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியே இல்லை என்பதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப நமக்குக் காட்டியுள்ளது.

இராசபட்சேக்கள் சென்ற ஆண்டு அதிகாரத்துக்கு மீண்டிருப்பதும் அது முதல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும் தமிழர்கள் சிறிலங்காவில் சமத்துவம் அல்லது கண்ணியத்துடன் வாழ முடியவே முடியாது என்பதைக் காட்டுகின்றன. இராசபட்சே சிங்கள வாக்குகளைக் கொண்டு பெற்ற வெற்றி சிறிலங்கா வளைந்து கொடுக்காத இனநாயக சிங்கள பௌத்த அரசு என்பதையும் அதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமே இல்லை எனப்தையும் காட்டும். சிங்களப் பெரும்பான்மையின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தீர்வு முயற்சியிலும் ஈடுபட மாட்டேன் என்று அதிபர் கூறியிருப்பது இதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஜனநாயகத்தின் போர்வையில் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையே தவிர வேறன்று.

மேலும், 2020 பிப்ரவரி 4ஆம் நாள் சிறிலஙகாவின் அதிகாரபூர்வ சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பது தமிழர்களுக்கு எதிரான பகைச் செயலும், மீளிணக்கத்தில் அரசுக்கு ஆர்வமில்லை எனக் காட்டும் அழுத்தமான அடையாளமும் ஆகும். நீதியும் மீளிணக்கமும் நிலைமாற்று நீதியின் இரட்டைத் தூண்கள். சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கு இடமே இல்லை என்பதாகும்.

தமிழ் மக்களின் இருப்பையே இல்லாதழிக்க பாரிய மனிதஉரிமை மீறலைச் செய்தவர் இப்போது சிறிலங்காவின் அதிபராக இருக்க, அரசுத் தலைவருக்குரிய சட்டக்காப்பை ஊடுருவி அதிபர் இராசபட்சேயை நீதியின்முன் நிறுத்தும் திறங்கொண்ட ஒரே மன்றம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமே. தமிழர் இனவழிப்புக்குப் பெரிதும் பொறுப்பான ஏனைய உயர்நிலை சிறிலங்க அரசதிகாரிகள் மீதும் படையதிகாரிகள் மீதும் வழக்குத் தடுப்பதற்கு இப்போதுள்ள ஒரே மன்றமும் அனைத்துலக்க் குற்றவியல் நீதிமன்றமே. ஆகவேதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப்பி வைக்குமாறு ஐநாவைக் கேட்டுக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இக்கோரிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்கா தொடர்பான 2012 ஐநா உள்ளக ஆய்வறிக்கை (பெற்றி அறிக்கை) கூறியுள்ள படி, போரின் இறுதி மாதங்களில் இப்போதைய அதிபர் கோத்தபய இராசபட்சே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது, சிறிலங்கா இராணுவம் 70.000 தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றது. 2016இல் வலுக்கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு அறிக்கையிட்டுள்ள படி, அதன் முன்னுள்ள காணாமற்போதல் வழக்குகளில் இரண்டாம் பெரிய தொகை சிறிலங்காவுக்குரியதாகும். காணாமற்போன ஆயிரக்கணக்கான தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளும் போது, உயிரிழந்த தமிழர் தொகை போர் முடிவில் 100,000க்கு மேல் வரும்.

2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் கூட்டு முன்மொழிவாக மனிதவுரிமைப் பேரவையால் ஒருமனதாக இயற்றப்பட்ட 30/1 தீர்மானம் சிறிலங்காவைச் சில உறுதிப்பாடுகளுக்கு ஒப்புக்கொடுக்கச் செய்துள்ளது; இதன் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுக்காலப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்திட அயல்நாட்டு நீதியர்களும் சட்டத்தரணிகளும் அடங்கலான நீதிப் பொறிமுறையை நிறுவவும், நிலைமாற்ற நீதி வழிமுறைகளில் ஒன்றாக உண்மை மற்றும் மீளிணக்க ஆணையம் அமைக்கவும் சிறிலங்கா உறுதியளித்தது.

மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே சிறிலங்கா தொடர்பில் மிக அண்மையில் தந்த அறிக்கை இந்த வாரம் முன்னதாக வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் அவர் கூறியிருப்பது சிறிலங்காவின் ஏமாற்றுத்தனத்தை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. 2015 முதற்கொண்டு ‘கடந்த கால மீற்ல்களுக்குப் பொறுப்பான தனியாட்களை அகற்றவும், சித்திரவதைக்கும் வலுக்கட்டாயக் காணாமற்செய்தல்களுக்கும், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட சாகடித்தல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்த கட்டமைப்புகளையும் நடைமுறைகளையும் கலைக்கவும், இக்குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்கிறார் உயராணையர். அதாவது தீர்மானத்தின் செயலாக்கம் ஐநா மனிதவுரிமைப் பேரவையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தாலும், அப்பேரவையின் நிலைமாற்ற நீதி முயற்சி தோற்று விட்டது என்று பொருள்.

உயராணையர் பசேல் தன் அறிக்கையில் மேலும் சொல்கிறார்: ‘ஏற்கெனவே மனிதவுரிமைப் பேரவைக்கு உயராணையர் அளித்த அறிக்கைகளில் வெளிச்சமிட்டுக் காட்டிய நெடுங்காலத்திய அடையாளக்காட்டான வழக்குகளில் புலனாய்வு செய்வதிலும் சிறிலங்காவின் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதிலும் சொற்ப முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது…. இந்த வழக்குகளில் முன்னேற்றம் இல்லை என்பது குற்ற நீதியமைப்பில் பொறுப்புக்கூறலுக்கு அமைப்புசார் தடைகள் இருப்பதையே துலக்கமாக வெளிப்படுத்துகிறது.’ அதாவது பன்னாட்டு மனிதவுரிமைச் சட்டங்களையும் பன்னாட்டு மாந்தநேயச் சட்டங்களையும் மீறிய கொடுங்குற்றங்களுக்காக அரசு அலுவலர்களைப் பொறுப்பாக்க சிறிலங்காவுக்கு விருப்பமும் இல்லை, திறனும் இல்லை. இதற்குத் தலையாய காரணம் அரசே இந்தக் கொடுங்குற்றங்களைச் செய்தது என்பதே. விருப்பமின்மையும் திறனின்மையும் சேர்ந்து கொள்ளும் போது சரியாக இந்தச் சேர்க்கையைக் கவனித்து வெற்றி கொள்ளத்தான் பொதுவாக ஈடுசெய்நீதியும் குறிப்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமும் வடிவமைக்கப்பட்டன.

உயராணையர் தமது மிக அண்மைய அறிக்கையில் கூறியிருப்பது போல், தண்டனை விலக்கிய குற்றநிலை தொடர்வது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். ஆட்சியாளர்கள் ‘கடந்த காலத்தை முழுமையாகக் கையாளத் தவறுவதால் வன்முறையும் மனிதவுரிமை மீறல்களுமான சுழல் திடும்பத் திரும்ப இடம்பெறும் ஆபத்துள்ளது.’ இதற்கு சென்ற ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையையே சான்றாகக் காட்டலாம்.

சிறிலங்க உள்நாட்டுப் போரின் முடிவு தொடர்பான மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் அவர்களுக்கு அறிவுரைத்த சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பான மூவல்லுநர் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஸ்டீபன் ராட்னர் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இண்டர்நேசனல் லா என்ற ஏட்டில் எழுதியுள்ளார்: ‘சட்டத்துக்கும் நட்த்தைக்கும் இடையே பாலம் அமைப்பதில் மூன்று தெளிவான தடைகள் இருப்பதையும் சிறிலங்காவின் நேர்வு காட்டுகிறது.

முதலாவதாக, மனிதவுரிமை மீறிய கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான சட்டத்தில் பெரும்பகுதி இப்போதைய ஆட்சியாளர்கள் முன்சென்ற ஆட்சியாளர்களைப் பற்றித் தீர்ப்புரைக்கும்படியான நிலைமைகளில் – அதாவது உண்மையான நிலைமாற்ற நீதி நேர்வுகளில் – உருவாகியிருப்பதாகும்.

நிலைமாற்றமல்லாத நிலைமைகளில் பொறுப்புக்கூறலுக்கான தடைகள் பெரிதும் பெருகி விடுகின்றன. ஏனென்றால் தலைவர்கள் இன்னுமதிகமாகப் பணயம் வைக்க வேண்டியதாகிறது: முழுப் புலனாய்வு என்பது சொத்துகள் முடக்கப்படுவதற்கும் பொதுவெளியில் அவமானப்படுவதற்கும், ஏன், உள்நாட்டு, அயல்நாட்டு அல்லது பன்னாட்டுத் நீதிமன்றத்தில் உசாவப்படுவதற்கும் (வழக்குவிசாரணை செய்யப்படுவதற்கும்) கூட வழிகோலக் கூடும்.

இன்னமும் கூட அரசாங்க அலுவலர்கள் தங்களைத் தாங்களே புலனாய்வு செய்து கொள்ள விரும்புவதில்லை என்பதே நிலைமாறுகால நீதிக்கு வரம்பிடும் கொள்கையாக உள்ளது.

தோற்ற தரப்பின் சட்ட மீறல்களைப் புலனாய்வு செய்யவே அந்த அரசுகள் விரும்பக்கூடும் – தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா இப்படிச் செய்ய விரும்பலாம்…. ஆனால் இத்தகைய புலனாய்வுகள் வெற்றியாளரின் நீதியாக மட்டுமே தெரியும்.’

இராசபட்சே அதிபராக இருந்த வேளை, 2010இல் பாதுகாப்புச் செயலராக இருக்கும் போதே பிபிசிக்கு அளித்த பேட்டியில் சிறிலங்கா இராணுவம் போர்க் குற்றங்கள் புரிந்த ஒரே ஒரு நேர்வு கூட இல்லை’ என்று அந்தச் செய்தியாளரிடம் கூறினார். 2012 பிபிசி பேட்டியில் அரசுப்படைகள் மக்களைக் காணாமற்செய்தல் பற்றிக் கேட்ட போது, கோத்தபயா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து விட்டுச் சொன்னார்: ‘நான் பாதுகாப்புச் செயலர். இது குறித்துப் புலனாய்வு செய்து விட்டேன். இந்த ஆட்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளாமல் நான் சொல்வதை எடுத்துக் கொள்ளுங்கள்.’ இதற்கு முற்றிலும் முரணாகத்தான் அண்மையில் அவர் ‘காணாமற்போன அனைவரும் இறந்து விட்டார்கள்’ என்று சொல்லியுள்ளார்.

காணாமற்போனவர்கள் உண்மையில் இறந்து விட்டார்கள் என்றும், இறந்தவர்களைத் தன்னால் மீட்டுக் கொண்டுவர முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருப்பதை உயராணையர் குறைத்துக் காட்டினார் என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். ஐநா மனிதவுரிமைப் பேரவையும் பிற பன்னாட்டு அமைப்புகளும் அதிபர் இராசபட்சே முன்னுக்குப் பின் முரணான தன் அறிவிப்புகளை இணக்கப்படுத்திக் காட்ட வேண்டும் என்றும், தன்னிடமிருக்கும் எல்லாத் தகவல்கலையும் சிறிலங்கா தகவலுரிமைச் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட சிறிலங்கா தகவலுரிமை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும், தெரிந்து கொள்ளும் உரிமை, உண்மையறியும் உரிமை ஆகிய பன்னாட்டுக் கொள்கைகளுக்கு இணங்க ஐநாவிடமும் ஒப்படைக்க வேண்டும்.

மாறாக, உயராணையர் பசலே தமது மிக அண்மைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்: ‘கடந்த காலத்தைக் கையாள்வதை விட வளர்ச்சிக்கே அரசு முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது. 2030ஆம் ஆண்டின் செயல்நிரலில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் 16இன் படி ‘அமைதியான, அனைவருக்குமான சமூகங்களை ஊக்குவிப்பதும், அனைவருக்கும் நீதிபெறும் வாய்ப்பு வழங்குவதும், அனைத்து நிலைகளிலும் திறமிக்க, பொறுப்பான, அனைவருக்குமான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதும் அடங்கும். மனிதவுரிமைகளும் நீதியும் பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் ஆகிய இவையெல்லாம் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வளமாகவும் வாழ்வதற்கேற்ற சூழல் மலரச் செய்வதற்கு முன்தேவைகளாக அறிந்தேற்கப்படுகின்றன. இவற்றுக்கான ஒப்புக்கொடுப்புதான் 2030 செயல்நிரலின் அச்சாணியாகும்.’

5/1 தீர்மானத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள மனிதவுரிமைப் பேரவையின் முதல் குறிக்கோள் ‘களத்தில் மனிதவுரிமைகளை மேம்படுத்துவது’ ஆகும். மாறாக 30/1 தீர்மானம் இயற்றப்பட்டது முதல் சிறிலங்காவில் நாம் கண்டிருப்பது என்னவென்றால் மனிதவுரிமைகள் மேலும் தாழ்ந்து போயுள்ளன. இதில் வியப்பதற்கொன்றுமில்லை.

நிலைமாறுகால நீதி என்பது இனவழிப்பை நிறுத்த விரும்பாத அரசுகளின் உளச்சான்றை சாந்தப்படுத்த பொறுப்பைத் திசைதிருப்பப் பயன்படுகிறது. துயரப்பட்டவர்களுக்கும் உயிர்பிழைத்தவர்களுக்கும் அது பயன்படுவதில்லை என நிலைமாறுகால நீதி அறிஞர் மகாவ் டபிள்யூ. முட்டுவா அவர்கள் ருவாண்டா தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே மனிதவுரிமைப் பேரவை தன் கடமையை நிறைவேற்றும் வகையில், நிலைமாறுகால நீதியிலிருந்து நகர்ந்து போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் இனவழிப்புக் குற்றமும் புரிந்த சிறிலங்கக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் மாறுபட்ட, செயலுக்குகந்த, அணுகுமுறையை, அதாவது ஈடுசெய் நீதியைக் கைக்கொள்வது அவசர அவசியமாகும். நிலைமாறுகால நீதியால் ஒருபோதும் சாதிக்க முடியாததை, ஒருபோதும் சாதிக்காததை ஈடுசெய் நீதியால் சாதிக்க முடியும் என அனைத்துலக சமூகத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

கோத்தாவுக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் மீண்டும் கைது

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 02 ஆம் திகதி 44 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று உட்பட மேலும் சில ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இடையில் வௌ்ளை வேன் ஊடக சந்திப்புடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தலில் ஈடுபட்டதாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்த சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

என்டனி டக்ளஸ் பெர்ணான்டோ மற்றும் அதுல சஞ்சீவ ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

வவுனியா மாவட்டத்தில் இலை மறை காய்களாக பல திறமைகளுடன் கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள் அண்மைக் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றி வெங்கலப்பதக்கத்தை வெற்றிபெற்று கிராமப்புறங்களில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

14 வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்டு மயில்வாகனம் பிளசிகா,மற்றும் ராஜசேகரம் வினோதா ஆகிய இரண்டு மாணவிகளும் பல சவால்களுக்கு மத்தியில் தெசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகி மொறட்டுவையில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தைப் வெற்றிபெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

முதல் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக பாடசாலை சமூகமும் கிராம மக்களும் இணைந்து புதுக்குளம் சிவன் ஆலயத்திலிருந்து வாகனப் போரணியுடன் கௌரவமாக அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் கு.செந்தில்குமரன், உடல்கல்வி ஆசிரிய ஆலோசகர் இ.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி பத்மா ஜெயச்சந்திரன், பயிற்றுவிப்பாளர்களான சுரங்கா மற்றும் நிக்ஷன ரூபராஜ் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர், பழைய மாணவர்கள் சமூக ஆர்வலர்களென பலரும் கலந்து கொண்டு சாதனை மாணவிகளை கௌரவித்தனர்.DSC03982 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03975 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03981 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03986 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03987 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு
DSC03974 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03972 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03970 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03968 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

சுவிட்சலாந்தில் முதல் கொரோனா வைரஸ் தோற்று உறுதிசெய்யப்பட்டது

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள திசினோ மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளி ஒருவர் (இன்று 25) இனங்காணப்பட்டுள்ளார். நாட்டின் தெற்கில் உள்ள இந்த மாநிலம் இத்தாலியின் எல்லையில் அமைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 15 இல் இத்தாலியின் மிலான் நகரில் வைத்து இந்த தோற்று ஏற்பட்டதாக அறியப்படுகிறது.இந்த நோய்க்கான முதல் அறிகுறிகள் இரு நாட்களின் பின் தோன்றியதாக மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில்,தனது 70களில் உள்ள குறித்த ஆண் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது .

குறித்த நபர் தற்போது லுகானோவிலுள்ள ஒரு வைத்தியசாலையில்
தனித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் நன்றாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த 14 நாட்களுக்கு கண்காணிப்பின் கீழ் வாக்கப்படுவர் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவிட்சலாந்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை மிதமானது எனவும்,இந்த நிலையில் பாடசாலைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் அவசியமற்றவை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் மன்னாரில் இன்று (25) காலை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தின் போது சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், நீதியான விசாரணை நடாத்தக் கோரியும், சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும், அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டையும், வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெந்நீரூற்று வழக்கில் மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிப்பு.!

திருகோணமலை-கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இடைபுகு மனுதாரரின் விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீரூற்று வழக்கு இடைபுகு மனுதாரரை வழக்கில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது பற்றியே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் மற்றும் முதலாம், இரண்டாம் மனுதாரர் சார்பில் அரச சட்டத்தரணி மற்றும் இடைபுகு மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ஏ. எஸ். எம். ரபீஸ் உட்பட சிரேனிய புஞ்சிநிலமே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச தேரரினால் முன் வைக்கப்பட்ட ஆவணங்களில் குறித்த கன்னியா வெந்நீரூற்று தொடர்பிலான எந்த ஒரு உரிமைக்கான ஆவணங்களையும் முன்வைக்காத காரணத்தினால், முதலாவது எதிர் மனுதாரரான தொல்பொருள் திணைக்களம் மற்றும் இரண்டாவது மனுதாரரான திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்திற்கு உரிமை இருப்பதாகவோ அல்லது வில்கம் விகாரை விகாராதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது பற்றியோ எந்தவிதமான ஆவணங்களையும் முன்வைக்கவில்லை.

எனவே குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மனுதாரரை குறித்த வழக்கில் ஒரு கட்சி காரராக ஏற்றுக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு அழைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அமைப்பாளர்களை தமிழரசு கட்சி வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் நிறுத்த எதிர்ப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் இருந்து தமிழரசுகட்சி சார்பாக பொதுத்தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுபவர் யாராக இருந்தாலும் பேரினவாதகட்சிகளில் கடந்த காலத்தில் செயற்படாதவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்கடந்த 23இம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பொது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டினார்.

கட்சியில் கடந்த 2015இ தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பாளராகவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராகவும் செயல்பட்ட எவரையும் தற்போதைக்கு தமிழரசு கட்சியில் வேட்பாளராக தெரிவுசெய்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக தமிழரசுகட்சி ஆசனம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என அவர் கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டிப் பேசினார்.

அவர் கூறிய விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பகால தமிழரசு கட்சியாக செயல்பட்ட களுதாவளை ப.குணராசா என்பவர் கடந்த 2010இ பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அவரை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி கடந்த 2012இ மாகாணசபை தேர்தலில் தமிழரசு கட்சி வேட்பாளராக நிறுத்தியபோது அவர் வெற்றியடையவில்லை இதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கூறிய காரணம் ‘கடந்த தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் எலக்சன் கேட்டு தமிழ் வாக்குகளை சிங்கள கட்சிக்கு பெற்றுக்கொடுத்த ஒருவரைநாம் எப்படி ஆதரிப்பது’ என்பதே.UNSET மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அமைப்பாளர்களை தமிழரசு கட்சி வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் நிறுத்த எதிர்ப்பு!

இதே போல் கடந்த 2008இ மாகாணசபை தேர்தலில் பிள்ளையானின் கட்சியில் TMVP கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பழுகாம்ம் வீ.ஆர்.மகேந்திரன் என்பவரை 2012இ மாகாணசபை தேர்தலில் தமிழரசு கட்சியில் உள்வாங்கி வேட்பாளராக நிறுத்தியபோது அவரும் தோல்வி அடைந்தார் அவரின் தோல்விக்கு மட்டக்களப்பு மக்கள் கூறிய காரணம் ‘ஏற்கனவே பிள்ளையானின் கட்சியில் தேர்தல் கேட்டதனால் அவரை நிராகரித்தோம்’ என்பதாகும்.

உண்மயில் களுதாவளை குணம்இ பழுகாம்ம் வீ.ஆர். மகேந்திரன் இருவரும் குறித்த தேர்தல்களின் போது தமிழ அரசு கட்சி உறுப்பினர்களாக இருந்த போதும் மக்கள் அவர்களை ஏற்காமைக்கான காரணம் மாற்று கட்சியில் வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்ட ஒருகாரணம் என்பதே உண்மை.

அதே நிலையில் தற்போது பட்டிருப்பு தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக வேட்பாளராக விண்ணப்பித்துள்ள சாணாக்கியன் என்பவர் கடந்த 2015இ ல் பொதுத்தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் பிள்ளையான்இஹிஷ்புல்லாஇஅருண்தம்பிமுத்து இவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை இம்முறை தமிழரசு கட்சி வேட்பாளராக நிறுத்தினால் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகட்சியில் இருந்து விலகிச்செல்லும் இதற்கான பாவமும் பழியும் தமிழரசு கட்சி தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்.viber image 2020 02 25 07 53 20 மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அமைப்பாளர்களை தமிழரசு கட்சி வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் நிறுத்த எதிர்ப்பு!

தேர்தல் முடிந்தவைடன் தோல்விக்கான காரணத்தை ஆராய்வதற்கு முன் இப்போதே உண்மையை உணர்ந்து பட்டிருப்பு தொகுதியில் தமிழரசு கட்சியில் வேறு ஒரு பொருத்தமான வேட்பாளரை நிறுத்துங்கள் என அரியநேத்திரன் கூறியதாக அறியமுடிகிறது.

அவர் இந்த கருத்துக்களை கூறும்போது மத்திய குழு உறுப்பினர்கள் 60இபேரும் அவரின் கருத்தை தலை அசைத்து ஆதரவு தெரிவித்தனர் வாலிபர் அணி தலைவர் சேயோன் கைதட்டி இந்த கருத்தை வரவேற்றதையும் காண முடிந்தது.

இதன்பின்பு உரையாற்றிய மட்டக்களப்பு எம்.பி.ஶ்ரீநேசன் அரியநேத்திரன் கருத்தை ஆதரித்ததுடன் இம்முறை தனித்தனியாக வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதை விட்டு கூட்டாக மூன்றுபேர் இணைந்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளாவிட்டால் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தொகை குறையும் நிலை ஏற்படும்  குறிப்பிட்டார்.

சம்பந்தன் மாவைசேனாதிராசா துரைராசசிங்கம் மூவரும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தனர் எனவும் மத்திய குழுவில் கலந்துகொண்ட கட்சி பிரமுகர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்

 

 

கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் நீங்கள் வெற்றியடைந்துவிடலாம்.’

வெற்றியடைய உங்களுக்குப் பொருத்தமான ஊக்கமளிக்கும் வழிகாட்டி அவசியம். அவர் ஒரு அறிஞராகவோஇ ஆசிரியராகவோஇ தந்தையாகவோஇ நண்பராகவோ, மதகுருவாகவோஇ ஆசிரியராகவோ, ஒரு அமைப்பாகவோ இருக்கலாம் ,ஏன் ஒரு புத்தகமாகக் கூட இருக்கலாம்.

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்களின் சிறந்த அடைவிற்கு ஊக்கமளித்தல் இன்றியமையாததாகும்.சிறந்த கல்வி அடைவு என்பது கல்வியில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் தமது பெறுபேற்றைப் பெற்று தமது தகுதியை அதிகரித்துக் கொள்ளுதலாகும்.

ஊக்கமளித்தல் எனும் போது அக் கல்வி அடைவை உயர்த்திக் கொள்வதற்காக வழங்கப்படும் கல்வியியல்இபொருளியல், உடலியல்இஉளவியல்,சமூகவியல் ரீதியான உந்துதல்களாகும். சிறந்த உந்துதல் வழங்கும் போது சிறந்த கல்விப் பெறு பேறுகளும், குறைவான பெறுபேற்றிற்கு உந்துததல் அளித்தல் இன்மையும் ஒரு காரணமாக அமையலாம்.

பாடசாலை மாணவர்களை எடுத்துக் கொண்டால் ஆரம்பப் பிரிவில் அதாவது,தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை பெற்றோரின் ஊக்கம் அதிகமாகக் காணப்படுவதுடன், கனிஷ்ட இடைநிலைப்பிரிவில் (ஆறு தொடக்கம் ஒன்பது) பிள்ளையின் சுயமான ஊக்கலும் மேலும் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவிலும் உயர்தரத்திலும் (ஒன்பது தொடக்கம் பதின்மூன்று) பாடசாலை, சமூகம்இ பெற்றோர் என பல தரப்பட்டவர்களின் ஊக்கலும் சாதாரணமாகக் காணப்படுவதை அவதானிக்கலாம்.

இருந்தபோதிலும் ஊக்கமளித்தலானது எப்படிக் கல்விப் பெறுபேற்றில் தாக்கம் செலுத்துகின்றது என சில தற்போதைய நடைமுறை உதாரணங்களுடன் அதாவது மட்டக்களப்பின் தற்போதைய கல்வி அடைவுடன் ஒப்பிட்டு விமர்சன ரீதியில் நோக்குவோம்.

மட்டக்களப்பு மாவட்டமானது மட்டக்களப்பு,மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி,பட்டிருப்புஇ கல்குடா என ஐந்து கல்வி வலயங்களைக் கொண்டுள்ளது. இவ் ஐந்து வலயங்களிலும் கடந்த சில வருடங்களில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது அதாவது எமது சகோதர இனப் பாடசாலைகளை மாத்திரம்; கொண்ட வலயம் அதி சிறந்த
பெறு பேறுகளையும்இமருத்துவ, பொறியியல் பீடத்திற்குத் தெரிவான மாணவர்களின் அதிக எண்ணிக்கையையும் கொண்டுள்ளது.IMGL3044 கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

இப் பெறுபேற்றின்படி மீதமுள்ள நான்கு தமிழ் வலயங்களுடன் ஒப்பிடும் போது கல்வி அடைவில் இவ் வலயம் மிக உயர்வாக உள்ளது. இதன் மறைமுக இரகசியமும் ஊக்கமளித்தல்தான் என்றால் மிகையாகாது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாத்திரமல்ல ஏனைய சகோதர இனத்தவர்கள் இன்று கல்வி அடைவில் பெறும் பெறுபேறுகளையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் எமது தமிழ் மாணவர்கள் ஆரம்பகாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலும் தற்போது நவீன தொடர்பாடல் சாதனங்களின் மோகம்,அதிக போதை வஸ்துப் பாவனை மற்றும் பொருளாதார ரீதியான பின்னடைவு போன்றவற்றால் இன்று பெறுபேறுகளில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஏனைய சகோதர இன மதஸ்தாபனங்கள் கல்விக்காக வழங்கும் ஊக்குவிப்பில் அரை மடங்கு கூட எமது இந்து ஆலயங்களோ இந்து மத நிறுவனங்களோ வழங்குவதில்லை. வெறுமனே திருவிழாக்களுக்கும் வானவேடிக்கைகளுக்கும் இலட்சக் கணக்கான பணத்தை போட்டி போட்டு செலவிடுகின்றனர்.

இந்நிலையில் பொருளாதார ரீதியில் இடர்படும் தமிழ் ஏழை மாணவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருந்த வண்ணமே உள்ளனர். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி வழங்கினாலே போதும் தமிழ்ச் சமூகம் கல்வியடைவில் உச்சத்திற்குச் சென்றுவிடும்.

மேலும் எமது சகோதர மத நிறுவனங்கள் உயர்தர கணிதஇவிஞ்ஞான பாட ஆசிரியர்களை கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பிற்கு வரவழைத்து அவர்களின் சமூகத்திற்காக பிரத்தியேக வகுப்புக்களை நடத்துகின்றனர்.

மேலும் வார இறுதி நாட்களில் பெற்றோரும் மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களும் தங்கள் சமூகத்தின் கல்விக்காக மேல் மாகாணம் மற்றும் வெளி இடங்களுக்கு பேரூந்துகள் மூலம் பிள்ளைகளை அழைத்துச் சென்று கல்வி புகட்டுகின்றனர்.

அத்துடன் வறுமையான பிள்ளைகள் படிப்பதற்கு மாதம் தோறும் புலமைப் பரிசில்கள் வழங்குகின்றனர். நகர்ப்புறங்களில் தங்கி கல்வி கற்பதற்கு தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். மேலும் வேலை வாய்ப்புக்கள்,போட்டிப் பரீட்சைகள் பற்றிய விழிப்புணர்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் குழுக்களாக்கியும்இ சமய ஆராதனைகளின் பின்னரும் மக்களுக்குப் பரப்புகின்றனர்.unnamed 9 கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

ஆனால் எமது தமிழரிடம் சுயநலமிக்க தன்மையும் பொருளாதார ரீதியில் உயர்வானவர்கள் அவர்களின் பிள்ளைகளை மாத்திரம் வெளிநாடுகளில் படிக்க வைப்பதும் ஏனைய ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்காத தன்மையும் காணப்படுகின்றது. மேலும் தமிழர் மத்தியில் கல்விக்கான ஊக்குவிப்பு வழங்கும் தன்மையும்இ மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தன்மையும் ஏனைய சகோதர சமூகத்துடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.

ஓரிரு தமிழ்ச்சமூக அமைப்புக்கள் கல்வி பற்றிய விழிப்புணர்வுகளை மற்றும் நிதி உதவிகளை வழங்கினாலும் அவை நம் சமூகத்திற்குப் போதுமானதாகக் காணப்படவில்லை. இவ்வாறான நிலமைகளின் காரணமாகவே எமது மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறைவான சதவீதத்தில் காணப்படுகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் குறிப்பிட்ட சில வருடங்களில் எமது தமிழ் மாணவர்கள் உயர்ந்த பல பதவிகளில் அங்கம் வகிக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர்.

ஆகவே மட்டக்களப்பாக இருந்தாலும் சரி தமிழ் மாவட்டங்கள் எதுவாக இருந்தாலும் சரி எமது தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சைவ ஆலயங்கள்,தமிழ் சங்கங்கள்இ தமிழர் அமைப்புக்கள்,செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் பொருளாதார ரீதியிலும் கல்வியல் ரீதியிலும் உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்கி எமது தமிழ் மாணவர்களின் உயர்ந்த கல்வி அடைவிற்கு வழிகாட்டுங்கள்.

“ஊக்குவிப்பே கல்வியின் வெற்றி”

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே!

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை நிலையுறுத்தி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 24/02/2020 14:00 மணியளவில் Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகியது.

BELGIUM , LUXEMBOURG , GERMANY , FRANCE ஆகிய நாடுகளை ஊடறுத்து மனித நேய போராளிகளினால் நீதிக்கான ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுல்லது

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது, சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல்லும் கடப்பாடு புலம்பெயர்ந்த எமக்கானது என்பதில் இருவேறு கருத்திருக்கமுடியாது.87969300 191961158694658 7540114142405853184 n தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

காலம்காலமாக அடிபட்டு உதைபட்டு அழிவுகளைச் சந்தித்து எமது துயர்நிலையை வெளிப்படுத்தியபோதெல்லாம் வாழாதிருந்த உலகு 2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனஅழிப்பின் பின்னரான காலப்பகுதியில் சிறீலங்கா அரசினது மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பில் உரையாடத் தலைப்பட்டுள்ள வேளையில் எமது கடமை என்ன?
கடந்த காலத்தில் எமது உரிமைப் போராட்டத்துக்கு மனவலிமையோடு அள்ளியும் கிள்ளியும் தமது இயலுமைக்கு அமைவாக எமது தேசக்கட்டுமானத்தையும் தேசியபாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவிக்கரம் கொடுப்பது எமது கடமையென வரித்துக்கொண்டவர்கள் நாம்.

அந்த உயரிய பங்களிப்பின் வடிவாக அமைந்த தமிழீழத்தின் கட்டுமானங்களை நேரடியாகத் தரிசித்தவர்களுக்கு அதன் செழுமை புரியும். அவற்றை இந்த உலகு சிங்கள சிறிலங்கா அரசினது பொய்ப்பரப்புரையை நம்பி அழிக்க உதவியதென்பது நாமறிந்ததே.

மனிதஉரிமைகள் மீறப்பட்டமை இனஅழிப்பை மேற்கொண்டமை என்பவற்றுக்குப் பொறுப்புக்கூறுமாறு சிறீலங்காவினது எதேச்சதிகார ஆட்சியாளர்களை கேட்பதும் இறுக்கமற்ற தீர்மானங்களை முன்வைப்பதுமாக இவர்கள் நகரும்.

தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஜளநாயகத் தளத்தைப் பயன்படுத்தி முன்நகர்த்துவதொன்றே எந்த வினவுதலுக்குமப்பால் தமிழினத்தின் விடுதலையொன்றே தம்முயிர்மூச்செனக்கொண்டு தம்மை அர்பணித்தோருக்காற்றும் கைமாறாகும்.

எமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.

அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும்! உலகிலே நாம் மிகவும் தொன்மையான, வீரமான, தனித்துவமான கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட ஓர் தேசிய இனம். நாம் எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரனால் வீரமூட்டி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை.
‘தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம்.
எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது’.என்ற எமது தேசியத் தலைவரின் சத்திய வாக்குக்கு அமைய, எமது தலைமை எமக்குக் காட்டுகின்ற வழியில், உலக ஓட்டங்களுக்கு இசைவாக, புவி அரசியல் அசைவுகளை நுணுகி ஆராய்ந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான பாதையில், காலம் எமக்கிட்ட பரிமாணத்தில் நாம் தொடர்ந்து போராடிவருகிறோம்.

எமது அன்புக்குரிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழர்களுடைய தேசிய விடுதலை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறது. முள்ளிவாய்க்காலை அடுத்து, எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு, உலக அங்கீகாரத்துக்காக ஒரு வெற்றிகரமான பரிமாணத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
இது எமது மக்களின் போராட்டம். எமது மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டம். மக்கள்சக்தி வாய்ந்த போராட்டங்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்னும் நியதி உண்டு. நாங்கள் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக எழுச்சிபெற்று, எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் காட்டிய பாதையில் இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம்! நிச்சயமாக வீரமிகு போராட்டங்களை நிகழ்த்தி சுதந்திர தமிழீழம் மீட்போம்!

சிங்கள பௌத்த இனவாத சக்திகளையும் ஆட்சி மாற்றங்களையும் காரணம்காட்டி தமிழர்களது உரிமைகளை மறுப்பதும், தீர்வுத்திட்டம் என்ற பெயரில் காலங்கடத்துவதும் சிங்களத்தின் தந்திரமாகவே இருக்கட்டும். அதில் நாம் சிக்கிக்கொள்ளாது விளிப்பாக இருப்பதுடன் இலட்சியத்தில் உறுதியுடன் இருப்பது அவசியமாகும்.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக தியாகி திலீபன் அவர்களின் 32 ஆண்டு நினைவேந்தல் காலப்பகுதியில் உலகின் முன் உரத்து முழங்குவதே ஒன்றே சிங்களத்தின் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கான உபாயமாகும்.

எப்படி ஜனநாயக முகத்திரைபோர்த்தி உலகைத் துணைசேர்த்து எம்மைச் சிங்களம் வீழ்த்தியதோ அதே ஜனநாயக வழியைப் பயன்படுத்தி சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்து அதனது இனப்படுகொலை முகத்தை அம்பலப்படுத்தி எமது இலக்காகிய தமிழீழ தாயகத்தை வென்றெடுக்க அனைவரும் அணிதிரள்வோம். அடிமை விலங்குடைத்து நிமிர்வோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 09/03/2020ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும்
உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மக்களாகிய நாம் இந்த மக்கள் சக்திப் போராட்டங்களை நிகழ்த்தவுள்ளோம் :
1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி,
தமிழர் ஒருங்கிணைப்பு குழு- பெல்சியம் கிளை.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்