Home Blog Page 2387

எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி காஷ்மீர் முன்னாள் முதல்வர பாரூக் அப்துல்லா

காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் மாநில முதல்வர் பாரூக் அப்துல்லா உட்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். படிப்படியாக பலர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவை மாநில முதன்மை செயலாளர் விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்த பாரூக் அப்துல்லா, எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இருந்தாலும் அனைத்து தலைவர்களும் விடுவிக்கப்படும் போது இந்த சுதந்திரம் முழுமையடையும். அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா. மெகபூபா முக்தி உட்பட சிலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இனத்தை அழிக்காதே! நாடு சீனாவிற்கு மக்கள் கொரோனாவிற்கா? திரண்ட பல்கலை மாணவர்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட கிழக்கு பிரதேசத்திற்கு கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, அவர்களை அழைத்துவர வேண்டாம் என வலியுறுத்தும் கண்டனப் போராட்டம் இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்டனப் போராட்டத்தில், கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பங்கேற்றது.

வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் முன்பாக நடைபெற்ற எதிப்பு நடவடிக்கையில் பெருந்திரளான மாணவர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும் கலந்துகொண்டு கண்டன சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வாறு கோஷங்களை எழுப்பினர்.

‘வேண்டாம் வேண்டாம், கொரோனா வேண்டாம்’ ‘அழிக்காதே அழிக்காதே, எம் இனத்தை அழிக்காதே’ ‘நாடு சீனாவிற்கு, மக்கள் கொரோனாவிற்கா’ ‘மீட்போம் மீட்போம், உயிர்களை மீட்போம்’ ‘நோய்களைப் பரப்ப, நாம் தான் கிடைத்தோமா’ ‘இல்லாத கொரோனாவை, எம் மண்ணில் விதைக்காதே’ கொன்றது போதும், கொள்ளை நோய் தேவையா’ ‘வேண்டாம் வேண்டாம், கொரோனாவிற்குள் அரசியல் வேண்டாம்’ ‘மாற்று மாற்று, கொரோனாவிற்கான இடத்தை மாற்று’ போன்ற கோஷங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உச்சரித்தவாறு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் காரணமாக மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்து இடையூறுகள் எற்பட்டதனால், நிலமையை கட்டுப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து பொலிசார் கடமைகளில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான்

சீனாவிற்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான் என சீன வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (zhao lijian) வெளியிட்ட ருவிற்றர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ஆம் திகதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுகூடத்தில் 60 வயதான பெண்ணிற்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்தப் பெண் வூகானில இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார் என்றும் அவர் மூலம் அவர் கணவருக்கும் அந்நோய் பரவி பின்னர் இருவரும் குணமடைந்தனர் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு வந்த நிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறச்சென்றுள்ளார்.IMG 7367 திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

கொழும்பில் உள்ள ஹோட்டலில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் வைத்தியர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.IMG 7656 திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சுயேட்சைக் குழு இன்று நியமனப் பத்திரம் தாக்கல்

2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சுயேட்சைக் குழு இன்று நன்பகல் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நியமனப் பத்திரத்தை புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது தம்பி உவைஸ் தலைமையிலான சுயேற்சைக்குழுவே நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முதலாவது நியமனப் பத்திரத்தை தெரிவு அத்தாட்சி அலுவலர் திருமதி கலாமதி பத்மராஜா உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நியமனப் பத்திரத்தை கெயேற்றுள்ளது.

நியமனப் பத்திரங்களை கையேற்கும் இரண்டாவது நாளான இன்று (13) பொலிஸ் பாதுகாப்பு மாவட்டச் செயலக வளாகத்தில் பலப்படுத்தப் பட்டிருந்தது.

நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்கா

ரஸ்யாவுடனான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ படையினர் திட்டமிட்டபடி தமது போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (13) காலை பிரித்தானியாவில் உள்ள வான்படைத் தளத்தில் அமெரிக்காவின் மிக நவீன உருமறைப்பு பி-2 என்ற போர் விமானம் தரையிறங்கியுள்ளது.

image 1d2669a2ca நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்காimage c7b195ced3 நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்கா

போத்துக்கல்லில் உள்ள அமெரிக்காவின் தளத்தில் இருந்து சென்று குண்டு வீச்சு ஒத்திகைகளை மேற்கொண்ட விமானம், பிரித்தானியாவின் குளொச்செஸ்ரர் பகுதியில் உள்ள வான்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிட பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ.சூசைதாஸ் இன்று கட்டளையிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண மதலமைச்சருமான சந்திரகாந்தன் உட்பட 5வேரை சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சி.சந்திரகாந்தன் சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியைக் கோரியிருந்தார். இதனையடுத்து இன்று சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வழக்கை எடுத்துக் கொண்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையான காலத்திற்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கியதுடன் இந்த வேட்புமனுத் தாக்குதலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும், அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

கிழக்கில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் 8 பேர் போட்டி

வடக்கும் கிழக்கும் சேர்ந்த ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளோம். அதைப் பலமாக்குவதற்கும் வரும் காலத்தில் வடக்கும் கிழக்கும் கொள்கை ரீதியாக ஒருமித்து செயற்படக் கூடியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இன்று தொடக்கம் பலமானதொரு கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்படும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் காரியாலயத்தில் நேற்று (12) முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சி.வி. விகினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன் 4 கட்சிகள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அப்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு கட்சி சேரவில்லையே என ஆதங்கத்தோடு இருந்தோம். அந்த ஆதங்கத்தை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலங்கை தமிழர்கள் முற்போக்கு கூட்டணி எங்களுடன் சேர்ந்துள்ளது.

அதனடிப்படையிலே சேர்ந்து எங்கள் நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என்ற பலமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது இன்று தொடக்கம் பலமானதொரு கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்படும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் நூற்றுக்கு 17 சதவீதம் என்பதால் நாங்கள் தமிழ் கட்சிகளுடன் சோர்ந்து போட்டியிடுவதால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவமான ஒன்றும் இல்லாமல் போய்விடும் ஆகவே தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய யாராவது ஒருவரை ஆதரவு கொடுக்க யோசித்திருக்கின்றோம்.

திருகோணமலையில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு எடுக்கவில்லை ஆகவே நாங்கள் சிலரை அடையாளப் படுத்தியுள்ளோம். அவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கொடுப்பதா இல்லையா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியும்.

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் நாங்கள் அதிதீவிரமாக போட்டியிடுவோம் எங்களுக்கு போதியளவு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது

அதேவேளை எமது கட்சியின் இணை செயலாளர் சீ. சோமசுந்தரத்தை பிரதம வேட்பாளராக நியமித்திருக்கின்றோம். பிரதம வேட்பாளர் ஒரு அரசியல் ரீதியாக உத்தியோக பூர்வமாக இல்லாவிடினும் மக்கள் ரீதியாக நன்மைகள் பெறலாம் என சோ.கணேசமூர்த்தி நினைக்கின்றார் அவ்வாறான தர்னத்திலே இணை வேட்பாளராக தம்மை காட்டிக் கொள்ளமுடியும். ஆனால் சோமசுந்தரம் பிரதம வேட்பாளராக செயற்படுவார்.

தமிழ் தேசிய கொள்கைக்காக கட்சி உருவாக்கப்பட்டது ஆகவே அந்த கொள்கைகளுக்கு எதிரான விதத்திலே கடந்த காலங்களில் நடந்து கொண்ட சிலர் இருக்கும் கட்சிகளுக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்புகளை ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.

ஆனால் தமிழ் மக்கள் என்ற முறையிலே நாங்கள் பாராளுமன்றம் சென்ற பின்னர் அங்கு வரும் நபர்களுடன் நாங்கள் சேர்ந்து சில நேரத்தில் தமிழ் மக்கள் சார்பிலே நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும் போது நாங்கள் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களுடைய நன்மை கருதி நடவடிக்கைகளை எடுக்க முடியுமே தவிர தேர்தல் தொடர்பாக இந்த கட்சிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை

வன்முறைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் சிலர் அந்த கூட்டணியுடன் முக்கியத்துவம் வகிக்கின்றார்கள், அதேவேளை எந்த அரசாங்கத்துடனும் சேர்ந்து அமைச்சு பதவிகளை அவர்கள் பெற்றுக் கொண்டால் எங்கள் மக்களுக்கு அது கிடைக்கும் இது கிடைக்கும் என்பது உண்மை ஆனால் ஏற்படுகின்ற பாதகத்தையும் மனதிலே கொள்ளவேண்டும்.

அவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்ற பின் அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு பலவிதமான விடயங்களை செய்து கொண்டு போகின்றனர். இவர்கள் தங்களுடைய அமைச்சு பதவிகளை வைத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது இருக்கின்றனர்.

ஆகவே இதனை நாங்கள் முற்றாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அரசாங்கத்துடன் இருந்து எதனை பெறலாம் என்ற நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றதுடன் அவர்கள் சொந்த அரசிலுக்காக ஈடுபடுகின்றனர் என்பது எங்களுடைய கருத்து என்றார்.

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளை முதல் பூட்டு

நாளை தொடக்கம் 2 வாரத்திற்கு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து வெளியேறுகின்றது பிரித்தானியா

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து பிரித்தானியா வெளியேறவுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளர்.

சிறிலங்காவில் காலி மைதானத்தில் இடம்பெறவிருத்த பரீட்சாத்த துடுப்பாட்ட போட்டியை நிறுத்துவதாற்கு நேற்று (12) இரவு முடிவு செய்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறீலங்காவில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.