எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி காஷ்மீர் முன்னாள் முதல்வர பாரூக் அப்துல்லா

காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் மாநில முதல்வர் பாரூக் அப்துல்லா உட்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். படிப்படியாக பலர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவை மாநில முதன்மை செயலாளர் விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்த பாரூக் அப்துல்லா, எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இருந்தாலும் அனைத்து தலைவர்களும் விடுவிக்கப்படும் போது இந்த சுதந்திரம் முழுமையடையும். அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா. மெகபூபா முக்தி உட்பட சிலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.