Home Blog Page 2347

சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி இரண்டு விதமான அறிவியல் ஆய்வுகளில் பெயர்போனவர். அவருடைய MIT பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுகள்,  அவருக்கு “மொழியியலின் ஐன்ஸ்டீன்” என்ற பெயரை கொடுத்திருக்கிறது.

அவருடைய அரசியல் செயற்பாடுகளால் அவருக்கு வேறொரு புகழும் உண்டு. முக்கியமாக ஐ-அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு பயங்கரவாதங்களை வெளிப்படுத்தும் அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் அவருக்கு “உலகிலே இன்று வாழும் புத்திசீவிகளில் மிக முக்கியமானவர்” என்ற பெயரை கொடுத்திருக்கிறது. இருந்தும் மைநீரோட்ட ஊடகங்களிலோ, பள்ளிக்கூடங்களிலோ இவர் அதிகம் பேசப்படுவதில்லை.

இதிலிருந்து இவரது அரசியல் செயற்பாடுகள் அதிகார மையங்களை எத்துணை பயமுறுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். உலகில் பல மில்லியன் மக்களுக்கு இவர் ஒரு “சுப்பர் ஸ்டார்”.  மையநீரோட்ட ஊடகங்கள் அவரை புறக்கணித்தும் இத்துணை புகழ் இவருக்கு இருந்தும் இவர் எளிமையின் வடிவம். இத்தளத்திலும் “நோம் சொம்ஸ்கி” என்று தேடினால் இதில் பதியப்பட்டுள்ள இவருடைய அரசியல் சார்ந்த கருத்துக்கள் சிலவற்றை படிக்கலாம்.

2019 டிசம்பர் 7ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இவர் தனது 91வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் பல விடயங்களை பற்றி பதில் சொன்னார். மானிட மொழி ஆய்வுகள் பற்றி இவர் கூறியவற்றை தொகுத்து தருகிறது இவ்வாக்கம். சமூகத்தில் தாய்மொழி பாவனை இருந்தால் பிள்ளைகள் தாய் மொழியை கற்பது எத்துணை சுலபம் என்பதை இக்கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மாறுநிலை வளர்ச்சி காலம் (Critical development period)

உயிரினங்களிடம் இயற்கையாகவே காணப்படும் எல்லா திறன்களும் மரபணுக்களால் நிர்ணயிக்கப்பட்ட வழிகளில் வளர்ச்சியடைகின்றன. ஒரு உயிரினத்தின் குறிப்பிட்ட திறன்கள் குறிப்பிடட காலகட்டத்தில் வளர்ச்சியடைகின்றன. தவழும் நிலையிலிருந்து நடக்கும் திறனுக்கு மாறுவது, சொற்கள் மட்டுமே பேசும் திறனிலிருந்து வாக்கியங்கள் பேசும் திறனை அடைவது, மேலும் பல திறன்கள் பதின்பருவத்தில் அடைவது யாவுமே மரபணுக்களால் நிரணயிக்கப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு திறனுக்கும் ஒரு மாறுநிலை காலம் உள்ளது. அதாவது இந்த மாறுநிலை காலத்தில் அத்திறனை அடைந்துவிட்டால் தொடர்ந்து மேலதிக திறன்களின் வளர்ச்சி நடக்கும். அப்படி மாறுநிலை காலத்தில் நடக்காவிட்டால் சில திறன்கள் இல்லாமலே போய்வடும்.critical periods in human development 1 728 சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

உதாரணத்திற்கு பார்வை திறனை எடுத்துக்கொள்வோம். பிறந்த பூனைக்குட்டியின் கண்களை தைத்துவிட்டால் இரண்டு கிழமையில் தையலை கழற்றிவிட்டாலும் அப்பூனைக்குட்டிக்கு கண்பார்வை வராது. இந்த இரண்டு கிழமையே காண்பார்வை திறனுக்கான மாறுநிலை காலம். மனிதருக்கும் பூனைக்கும் கண்பார்வை திறன் ஒன்றே. மொழி திறனுக்கும் இவ்வாறான ஒரு மாறுநிலை வனர்ச்சி காலம் உள்ளதா? மேலும் படியுங்கள்.

அனைத்துமொழி இலக்கணம் (Universal grammar)

பல காலமாக மனிதரின் எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒரு அனைத்து மொழி இலக்கணம் இருக்கிறது என்ற சிந்தனை இருந்துள்ளது. இன்று இச்சிந்தனை கைவிடப்பட்டு விட்டது. கடந்த 50 ஆண்டுகளாக அனைத்துமொழி இலக்கணம் என்பதை “உயிரிய-மொழியியல்” (bio-linguistics) என்றே புரிந்துகொள்கிறோம். அதாவது மொழியை மனிதரிடம் உள்ள ஒரு உயிரிய குணமாக ஆய்வுசெய்வது. பிறந்த குழந்தை மொழியை எவ்வாறு இலகுவாக கற்றுக்கொள்கிறது என்பதை மனித குழந்தையின் உயிரிய குணமாக ஆய்வு செய்வது. குழந்தை மொழி படிப்பதை அதன் நடப்பது போன்ற ஏனைய திறன்கள் போலவே பார்ப்பது. அப்படி பார்க்கும் போது அடிப்படையில் எல்லா மானுட மொழிகளுக்கு ஒரு பொதுக்குணம் உண்டு. வித்தியாசங்களாக தெரிவதெல்லாம் மேலோட்டமானவையே அல்லாமல் அடிப்படை வித்தியாசம் அல்ல. இவ்வாறுதான் அனைத்துமொழி இலக்கணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மானிட மொழி

மானிட மொழிகளில் உள்ள பொருட்களை குறிப்பிடும் சொற்கள், அதவது பெயர் சொற்கள், மானுட சிந்தனையில் இயற்கையாக தோன்றுபவைகளாக உள்ளன. இவையே மனிதர்களின் உள்ளார்ந்த சிந்தனைகளில் ஓடி இறுதியாக எமது ஐம்புலன்கள் ஊடாக வெளியிடப்படுகிறது. இவை ஓசை மொழியாகவோ, காட்சி மொழியாகவோ, தொட்டுணரும் மொழியாகவோ வெளிப்படுகிறது.

இந்த உள்ளார்ந்த “மானுட சிந்தனை வடிவம்” எந்த மானிட மொழியாகினும் ஒன்றாகவே இருக்கிறது. இது எனது கருத்து என்பதையும் எல்லா மொழியியலாளர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

உங்கள் உள்ளார்ந்த சிந்தனைகளை கவனித்தீர்களானால், நீங்கள் தங்குதடையில்லாமல் உள்ளார்ந்து பேசிக்கொள்வது தெரியவரும். இப்படி உள்ளார்ந்து பேசுவதை நிறுத்துவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும். இந்த உள்ளார்ந்த பேச்சு இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு துண்டுகளாகவே இருக்கும். அவை நீங்கள் பேசும் பொழுது கையாளும் முழுமையான வாக்கியங்களாக இருக்காது. அவை உள்ளார்ந்து ரீங்காரம் செய்த வண்ணமாக இருக்கும்.

உங்களுக்குள் இவ்வாறு வெகு துரிதகதியில் உங்கள் வெளிமனதுக்கு தெரியாமல் ரீங்காரம் செய்வதுதான் “மானிட மொழி”. இதில் சில துளிகளே உங்கள் வெளிமனதுக்கு வருகிறது. இதையே எமக்கு நாமே பேசுவது என்று சொல்கிறோம். ஆனால் தொடரச்சியாக நாம் சிக்கலான வழிகளில் சிந்தித்த வண்ணம் இருக்கிறோம். இதுவரை தெரிந்த மட்டில் இதற்கு நாம் மொழியை பாவிக்கிறோம்.

உள்ளார்ந்த சிந்தனை மொழி மர்மமாகவே உள்ளது. ஏனெனில் இதை ஆய்வு செய்வதில் பிரச்சனைகள் உள்ளன. மொழி என்பது மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. வேறெந்த உயிரினங்களிடமும் இது போன்ற மொழி கையாளும் திறன் கிடையாது. அதனால் வேறு உயிரினங்களில் பரிசோதனைகள் செய்து மானிட மொழியை பற்றி அறிந்து கொள்ள முடியாது.

உதரணமான மனிதர்களின் கண்பார்வை பற்றி பூனைகள் மேல் பரிசோதனை செய்து விஞ்ஞானிகள் நிறையவே அறிந்துள்ளார்கள். இதற்காக பூனைகளைின் கண்களை மூடி தைத்தும், அதன் மூளையில் இலக்றோடுகளை (electrode) இணைத்தும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வது சரியோ தவறோ என்பது வேறு விடயம். பூனைக்கும் மனிதருக்கும் கண்பார்வை முறைமை ஒன்றே என்பதால் இதன் மூலம் மனிதரின் கண்பார்வை முறைமையை பற்றி நிறையவே அறிந்துள்ளோம்.Jan 2015 046 சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

அதுபோல மொழி முறைமை பற்றி ஆய்வு செய்வதற்கு வேறொரு உயிரினம் பூமியில் இல்லை. மனித குழந்தையை கொண்டு பரிசோதனைகள் செய்ய முடியாது. அப்படி செய்ய முடிந்தால் மொழி முறைமையை பற்றி நிறையவே அறிந்து கொள்ளலாம். அது முடியாததால் இது மர்மமாகவே உள்ளது. நேரடியாக முடியாவிட்டாலும் வேறுவழிகளில் ஆய்வுகள் செய்யலாம். அதையும் சவாலாக எடுத்து செய்யலாம்.

வேறுவழிகளில் கிடைக்கும் தரவுகளின்படி மானுட மொழிமுறை வளர்ச்சியில் இரண்டு மாறுநிலை காலங்கள் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒன்று  பதின்ம வயதுடன் ஒத்து வருகிறது. இது மிகவும் முக்கியமான மாறுநிலை காலமாக தெரிகிறது. இம்மாறுநிலை காலம் வரை சிறுவர்கள் மிகவும் துரிதமாக எந்த மொழியையும் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதுக்கு முன்னர் வேற்று மொழி இடங்களுக்கு குடியேறிய சிறுவர்கள் ஒரு ஆண்டுக்குள் அவ்விடத்து மொழியை அவ்விடத்தினர் போல பேசுவதற்கு கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் 18 வயதில் குடியேறியவர் அவ்விடத்தினர் போல பேசுவதற்கு முடிவதேயில்லை.

இன்னுமொரு மாறுநிலை காலம் 4-5 வயதில் மாறுகிறது. இவ்வயதில் உள்ள சிறுவர்கள் பல மொழிகளை இலகுவாக பேசுகிறார்கள். தாம் பல மொழிகள் பேசுகிறோம் என்ற அறிவே அவர்களுக்கு இருப்பதில்லை. இன்னாருடன் இவ்வாறு பேச வேண்டும் என்று மட்டுமே புரிந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு மாறுநிலை காலங்கள் இருப்பது மரபணுக்காளால் நிர்ணயிக்கப்பட்ட திறன்களுக்கே உள்ளன. அதனாலும் மனிதரின் மொழி திறனும் மரபணுவால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரமாக இந்த மாறுநிலை காலங்களை எடுத்துக்கொள்ளலாம்.

இதிலிருந்து புலம்பெயர் தமிழருக்கான பாடம் என்ன?

சிறுவயதில் மொழி பேசும் திறனை அடைவதன் சிறப்பை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு வீட்டில் தாய்மொழி பேசுவது போன்ற சிறப்பான வழிமுறை வேறெதுவும் இல்லை. வீட்டில் பிள்ளைகள் தாய்மொழி பேசாமல் கைவிடுவதற்கு பொதுவாக சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.tamil kids சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து வேற்று மொழியை கற்க எண்ணி தாய்மொழியை கைவிடல்.

வெளியே முன்பள்ளிகளுக்கோ பள்ளிக்கூடத்திற்கோ செல்லும் போது பிள்ளைகள் மொழி தெரியாமல் திணறுவார்கள் என்ற சிந்தனை.

பொதுவாக பிள்ளையின் பேச்சுத் திறன் பின்தங்கியுள்ளதால் பிள்ளை ஒரு மொழி மட்டும் பேசினால் நல்லது என்ற சிந்தனை.

வீட்டில் ஏற்கனவே ஒரு பிள்ளை தாய் மொழியை விட்டுவிட்டால் அப்பிள்ளை பேசும் மொழியையே அடுத்தடுத்த பிள்ளைகளும் பேசுவது நல்லது என்ற சிந்தனை.

இரண்டு மொழியை ஒரே நேரத்தில் பழகும் பிள்ளை சில சமயம் ஒரு மொழி பேசுவதை தற்காலிகமாக நிறுத்தலாம். அதனால் பதற்றம் அடைந்து ஒரு மொழி போதும் என்ற சிந்தனை.

இவ்வாறன சிந்தனைகளால் பதற்றம் அடைந்து தாய்மொழியை கைவிட்டு போகவிடுவது ஒற்றை வழிப்பாதை என்பதை நாம் உணரத் தவறுகிறோம்.

எம் பிள்ளைகளில் சிலர் மொழி பேசும் திறன் இல்லாவிட்டாலும் வாசித்து புரியும் திறனை ஓரளவு அடைந்துள்ளார்கள். இருந்தும் ஒரு வளர்ந்தோருக்கான ஆக்கத்தை வேகமாக படித்து புரியும் திறனை இவர்களால் எட்ட முடிவதில்லை. ஆக இவர்களால் அடுத்த சந்ததிக்கு மொழியை எடுத்து செல்ல முடியாது.

மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 29 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தற்போது 134 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டில் 166 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

யாழ் கொடிகாமம் கொரோனா சிகிச்சை முகாமிலிருந்து 40 பேர்கள் கொண்ட குழு விடுவிப்பு.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள 40 பேர்கள் கொண்ட குழுவினர்களை யாழ் கொடிகாமம் விடத்தற்பளையில் பகுதியில் கடந்த 5 ஆம் திகதி யாழ்பாதுகாப்பு படைப்பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்

குறித்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உட்பட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 40 பேர்களை இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையினை யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் முன்னேடுத்துள்ளனர்.

குறித்த நிகழ்வானது கொடிகாமம் 553 ஆவது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி

யாழ் மாவட்டம் மீசாலைப் பகுதியை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் Dardfordல் வசிப்பிடவுமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சிஜாமலன் (வயது 42 ) கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (04.04.2020) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஒரு மகனுக்கு (வயது 2) மற்றும் ஒரு பிள்ளை பிறந்து 6 மாதம் இவரின் உயிரிழப்பு உறவினர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்? – மனோ கணேசன்

பிரித்தானிய பாராளுமன்றம் முதல் பக்கத்து குட்டி நாடான மாலைத்தீவு பாராளுமன்றம் வரை பல்வேறு உலக நாட்டு சட்டசபைகள் இன்று, கோவிட்-19 மத்தியில் மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றங்களாக கூடுகின்றன.

அதாவது, இந்நாடுகளின் எம்பீக்கள் தம் வீடுகளில் இருந்தபடி, சபாநாயகர் தலைமையில், காணொளி தொழில்நுட்பம் மூலம் கூடி பேசி விவாதிக்கின்றார்கள்.

இந்நிலையில் நம் நாட்டில், இந்த கொரோனா வைரஸ் தேசிய நெருக்கடியையே காரணமாக காட்டி, எதிரணி உறுப்பினர்களை வீடுகளில் முடக்கி வைத்து விட்டு, தாம் விரும்பியவாறு இந்த அரசு காய் நகர்த்துகிறது.

கொரோனா கட்டுப்பாடு, வாழ்வாதார நிவாரணங்கள் ஆகியவை தொடர்பில் இந்த அரசின் நடவடிக்கைகளுக்கு, ஆரம்பத்தில் நாமும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒத்துழைப்பு வழங்கினோம். மக்களும் இன, மத, கட்சி பேதங்கள் இல்லாமல், ஜனாதிபதியின் ஆரவார அறிவிப்புகளை வரவேற்றார்கள்.

ஆனால், இன்று கொரோனா நாளுக்கு நாள் வளர்கிறது. பரிசோதனை செய்யப்பட வேண்டிய பெருந்தொகையானோர் இன்னமும் இருக்கிறார்கள். உரிய மருத்துவ கருவிகள் இல்லை. அப்படி பரிசோதனை செய்யப்பட்டால், இன்றைய நோயாளர் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அப்படியானால், இந்நாடு இன்னமும் பல மாதங்கள் ஊரடங்கினால் மூடப்படலாம். இன்றே வாழ்வாதார சவால்களுக்கு உள்ளாகியுள்ள அப்பாவி மக்கள், கொரோனா தவிர்ந்த ஏனைய மருத்துவ சிக்கல்களை எதிர்நோக்கும் நோயாளர்கள், நகரங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த உழைப்பாளர்கள் (MIGRANT WORKERS), எதிர்வரும் வாரங்களில் இன்னும் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரலாம்.

ஏனெனில், பெரும் எடுப்பில் பேசப்பட்ட ஜனாதிபதியின் வாழ்வாதார நிவாரணங்கள் நாடெங்கும் மக்களை சென்று இன்னமும் அடையவில்லை. அடையும் இடங்களிலும் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றதாக பரவலான புகார்கள் நாள்தோறும் என்னை வந்தடைகின்றன.

இந்நாட்டு அரசாங்கத்துக்கு, இன்றைய கொரோனா சூழலில், அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சீன அரசாங்கம் ஆகியவை பலமில்லியன் கணக்கான பெருந்தொகை டொலர்களை உதவியாக வழங்கியுள்ளன.

இவை தனியொரு கட்சிக்கோ, தனி நபர்களுக்கோ, தனி அரசியல் தலைவர்களுக்கோ வழங்கப்படுகின்ற உதவிகள் அல்ல. இவை இலங்கை நாட்டுக்கு, மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள். இன்னமும் பெருந்தொகை உதவி நன்கொடைகள், இலகு கடன்கள் இப்படி வழங்கப்பட உள்ளன.

அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்துக்கே நாட்டின் நிதிவளம் தொடர்பில் முதன்மை அதிகாரம் உள்ளது. ஆகவே இவற்றுக்கு என்ன நடக்கின்றது? இவை கொரோனா கொடும் நோய் தடுப்புக்கும், இந்நாட்டு மக்கள் நலன் சார்ந்த நிவாரணத்துக்கும் பயன்படுத்தபடுகின்றனவா என பாராளுமன்றம் கூடி ஆராய கூடாதா?

கொரோனா தடுப்பு பற்றி, மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றி அடுத்த ஆகஸ்ட் மாதம்வரை தெரிவு செய்யப்பட்டு இருந்த மக்கள் பிரதிநிதிகள் ஆராய கூடாதா? ஆராய்ந்து மக்களுக்கு அறிவிக்க கூடாதா?

நான் “வீட்டில் சும்மா முடக்கியிருக்க” விரும்பும் மக்கள் பிரதிநிதியல்ல. எல்லாம் நன்றாகவே நடக்கின்றது, எல்லாமே மக்களுக்கு கிடைக்கின்றது, என ஆளுவோருக்கு ஆலவட்டம் பிடித்து, வளர்க்கும் கட்சி தலைவனும் அல்ல. ஆகவேதான் இந்த கேள்விகளை கேட்கிறேன்.

ஆலோசனையை உதாசீனம்செய்தோர் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பிவைப்பு

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்காத அக்குரணை பகுதியை சேர்ந்த 144 பேர் இன்று (05) அதிகாலை புனாணை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தாலும், மக்களின் கவனயினத்தால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.

கொரோனா வைரசை பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தை மறுக்கிறது சிறீலங்கா

கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு படையினரை பயன்படுத்திவரும் சிறீலங்கா அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை மிரட்டி கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தென்னாசியா பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கடந்த
வெள்ளிக்கிழமை (3) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்பில் விமர்சனங்களை மேற்கொளபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிறீலங்கா காவல்துறை அதிகாரி மிரட்டியுள்ளார். அதாவது அனைத்துலக சட்டவிதிகளை மதிக்காது சிறீலங்கா அரசு கருத்துச் சுதந்திரத்தை படையினர் மூலம் மறுத்து வருகின்றது.
விமர்சனங்கள் அவர்களின் பணிகளை பாதிக்கப்போவதில்லை, ஊரடங்குச் சட்ட நேரத்தில் மக்கள் மிகவும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை உதவிகள் தேவை எனவே அது தொடர்பில் அவர்கள் தமது கருத்துக்களை பகிர விரும்புவார்கள்.
போர்க் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்ட சவீந்திர சில்வாவையே சிறீலங்கா அரசு இந்த பணிக்கு நியமித்துள்ளது. அவரின் நியமனம் சிறுபான்மை மக்களை அச்சமடைய வைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா,பிரித்தானியாவுக்கு உயிர்காப்பு கருவிகள்;ரசியா,சீனா உதவி

உலகத்தின் இயக்கத்தை தனது காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் மேற்குலக நாடுகளை அதிகம் அச்சுறுத்தி வருவதுடன்இ அங்கு பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றது.

நேற்று (04) சனிக்கிழமை 300 செயற்கை சுவாச உபகரணங்களுடன் சீனாவின் விமானம் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.

அதேசமயம்இ 1000 செயற்கை சுவாச உபகரணங்களுடன் சீனாவின் விமானம் அமெரிக்காவின் ஜோன் எப் கெனடி விமானநிலையத்தை சனிக்கிழமை வந்தடையவுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் மாநில ஆளுநர் அன்றூ கூமோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக நியூயோர்க் மாநிலமே உள்ளது. அங்கு சனிக்கிழமை (4) வரையிலான 24 மணி நேரத்தில் 630 பேர் மரணமடைந்துள்ளனர். நியூயோர்க் மாநிலத்தில் மட்டும் 3,565 பேர் நேற்றுவரை இறந்துள்ளதுடன், 113,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயோர்க் நகரத்தில் மட்டும் 63.306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இறுதியாண்டு மருத்துவபீட மாணவர்களையும் வைத்தியசாலைகளில் பணியற்ற அழைத்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மில்லியன் கணக்கான முகக் கவசங்களுடன் சீனாவின் விமானம் எதிர்வரும் 48 மணி நேரத்தில் கனடாவை வந்தடையவுள்ளதான கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நேற்று (4) தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்காவிற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை ரஸ்யா அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் ரஸ்ய அதிபர் விளாமிடீர் பூட்டினுடன் இந்த வாரம் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்தப் பொருட்களை வெள்ளிக்கிழமை (2) ரஸ்யா அனுப்பியிருந்தது.

ஆனால் தாம் அவற்றை உதவியாக கேட்கவில்லை, பணம் கொடுத்தே வாங்கினோம் என அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்கா அரை பங்கு உபகரணங்களுக்கு பணம் தந்ததாகவும். மிகுதியை ரஸ்யா அன்பளிப்பாக வழங்கியதாகவும் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் – துன்பத்தில் மலையக மக்கள் 

கடந்த வருடம் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மலையக மக்களின் தொழில் வாய்ப்புக்கள் வழமைக்கு திரும்பிவரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரேலியாவில் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சுற்றுலாத்துறை, தேயிலை தொழில் போன்ற விவசாயம் ஆகிய தொழில்களை நம்பி வாழ்பவர்கள். ஆனால் கோவிட்-19 அச்சம் சுற்றுலாத்துறையை முற்றாக முடக்கியுள்ளதுடன், சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் ஊரடங்குச் சட்ட நடைமுறைகளும் அவர்களின் அன்றாட தொழில்களை அதிகம் பாதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறீலங்கா அரசு உதவிகளையும் வழங்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் ஏழு கொரோனா நோயளர்கள்

யாழ் மாவட்டத்தில் இந்த வாரம் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு இதுவரை மொத்தம் 7 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த வாரத்தில் இருந்து நோயை உறுதிப்படுத்தும் பரிசோதனைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் அனுராதபுரத்தில் உள்ள வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளப்பட்டுவந்தன.
இதன் மூலம் உடனடியாக நோயை உறுதிப்படுத்தி நோயாளிகளையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த முடியும். அதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுவிற்சலாந்தில் இருந்து வந்த தேவாலைய மதகுருவுடன் தொடர்பில் இருந்த 7 பேரே நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேற்கொண்ட ஆராதனை நிகழ்வில் 200 பேர் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Attachments area