யாழ் கொடிகாமம் கொரோனா சிகிச்சை முகாமிலிருந்து 40 பேர்கள் கொண்ட குழு விடுவிப்பு.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள 40 பேர்கள் கொண்ட குழுவினர்களை யாழ் கொடிகாமம் விடத்தற்பளையில் பகுதியில் கடந்த 5 ஆம் திகதி யாழ்பாதுகாப்பு படைப்பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்

குறித்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உட்பட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 40 பேர்களை இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையினை யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் முன்னேடுத்துள்ளனர்.

குறித்த நிகழ்வானது கொடிகாமம் 553 ஆவது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.