Home Blog Page 2284

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தமிழீழதேசம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளைத் தன்னுள் இருத்திஇ சிங்கள அரசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்பது காலத்தின் நியதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு  நிலையங்களை உலகெங்கும் அமைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுவிபரம் :

இன்று தமிழீழத் தேசிய துக்க நாள்.

சிறிலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவு நாள்.

நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரச படைகள் நிகழ்த்திய கொடுமைகளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நினைவுகூரும் நாள்.

சிங்கள அரசின் முள்ளிவாயக்கால் தமிழன அழிப்புத் தற்செயலாக நிகழ்ந்ததொரு நிகழ்வல்ல. எதிரப்பாராமல் நிகழ்ந்ததொன்றுமல்ல. அது சிறிலங்கா  இராணுவத்தின் அத்துமீறலின் விளைவும் அல்ல.

மாறாக இது தமிழ் மக்களின்  சுதந்திர வேட்கையினைக் கருவறுக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டுப் புரிந்தவொரு வெறியாட்டே முள்ளிவாய்க்கால் இனவுழிப்பு.

முள்ளிவாய்க்கால் என்றதொரு சிறு கிராமத்தின் பெயர் தமிழ் மக்களின் மீதான இனவழிப்பின் குறியீடாக இப்போது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

இம் முள்ளிவாய்க்கால் தமிழனவழிப்பின் 10வது ஆண்டு நினைவை நாம் தற்போது நினைவு கூருகிறோம்.

இப் பத்தாண்டுகளில் நாம் எவற்றைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் எழுவதனையும் காண முடிகிறது.

பத்தாண்டுகள் கடந்தும் நாம் எமது உரிமைளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பெரிதும் முன்னேறவில்லையே என்ற ஏக்கக் குரல் பலர் மத்தியில் எழுவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

நாம் இந்த இடத்தில்; சிறிலங்கா அரசு மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழினவழிப்பின் ஊடாக சிங்கள அரசு அடைந்து கொள்ள முயன்ற விடயங்களை அடைந்து கொள்ள முடிந்ததா என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் தமிழினவுழிப்பு மூலம் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை நசுக்கி விட சிறிலங்கா அரசு முயன்றது.

சிறிலங்கா அரசின் கொள்கையான ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற நிலைப்பாட்டை நடைமுறையில் அமுல்;படுத்தலாம் என்று எண்ணியது.

சிங்கள அரசின் நிலைப்பாடுகளையும் விருப்பங்களையும் இயல்பாக ஏற்று அதற்கு அடிபணிந்து தமிழ் மக்கள் வாழும் நிலையை ஏற்படுத்த முடியும் என்று  எண்ணியது. இவ்வாறான நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களை நிரந்திரமாகத் தோற்கடித்து விடலாம் என்று சிந்தித்தது.

தமிழீழழ் என்ற தனியரசு என்ற எண்ணக்கருவை அழித்துச் சிதைத்து விடலாம் என்று எண்ணியது.

ஆனால் பத்தாண்டுகள் கழிந்தும் தான் விரும்பியவற்ழற சிறிலங்கா அரசால் அடைந்து கொள்ள முடியவில்ல. தமிழ் மக்களைத் தோற்கடிக்கப்பட மக்களாக மாற்ற முடியவில்லை.

தமிழ் மக்களின் சுதந்தர உணர்வை சிறிலங்கா அரசால் நசுக்கி விட முடியவில்லை. தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தாயகத்திலும் அனைத்துலகிலும் குரல் கொடுப்பதைத் தடுத்து விட முடியவில்லை.

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு விடுதலைப்புலிகளை அழித்தல் என்ற தமது நலன் சார்ந்த நோக்கத்துடன் பலமிக்க அனைத்துலக அரசுகள் பல அங்கீகாரம்; வழங்கின. புலிகள் அமைப்பு உருவாக்கிய புதிய வலுச்சமநிலை தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு இடையூறானது என்று இந்த அரசுகள் சிந்தித்தமையே இதற்குக் காரணம். தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு பெரும் இனவழிப்பை சிறிலங்கா அரசு நடத்த சம்மதம் வழங்கிய அரசுகள் யாவும் வரலாற்றின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவையே.

காலம் எல்லாவிதக் காயங்களையும் ஆற்றவதுபோல தமிழ் மக்களின் துயரையும் கோபத்தையும் ஆற்றி அவர்களை நீதிகோரும் முயற்சியில் இருந்து பின்வாங்க வைத்து விடும் என தமிழின அழிப்பைப் புரிந்தவர்களும் அவர்களுக்குத் துணைபோனவர்களும் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் முள்ளவாயக்கால் தமிழினவழிப்பு நிகழ்நது 10 ஆண்டுகளாகியும் தமிழ் மக்கள் தமது நீதி கோரும் இலக்கினைக் கைவிட்டு விடவில்லை.

தமிழின அழிப்புக்காக சிறிலங்கா அரசினைக் குற்றிவாளிக்கூண்டில் ஏற்றும் தமிழ் மக்களின் முயற்சி அனைத்துலகக் கவனத்தை ஈரத்திருந்தாலும் அனைத்துலக அரசுகளின் அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இனவழிப்பு நிகழ்ந்தது என்பததனை அரசுகளை ஏற்றுக் கொள்ள வைப்பது இலகுவானதொரு விடயமல்ல. இவ் அங்கீகாரம் தரக்கூடிய அரசியல் விளைவுகளே  இதற்குப் பிரதான காரணம். தமிழ் மக்கள் இவ் விடயத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புமின்றிப் போராடுதல் மிக அடிப்படையானது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தை தமிழ் மக்கள் ஏற்கனவே இருக்கும் அனைத்துலக அரங்குகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வரங்குகள் பலவற்றில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் நாடுகளின் வசமே இருப்பதால்இ அரசற்ற தமிழ்மக்கள் அங்கு நீதியினைப் பெறுவது இலகுவானதொரு விடயமாக இருக்கப்போவதில்லை என்பது புரிகின்றது. எனவே நீதிக்கான எமது போராட்டத்திற்காக புதிய போர்க்களங்களை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும்.

முள்ளிவாய்க்கால் தமிழனவழிப்பின் நெருப்பு அணையாது தலைமுறை தலைமுiறாயாகப் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும். இனவழிப்பு நினைவுகளைச் சுமந்திருக்கும் மக்களே தமது விடுதலையையும் அவாவி நிற்பாhர்கள். இதனால் முள்ளிவாய்கால் நினைவுகளுடன் அறிவுத்தளத்தில் செயற்படக்கூடிய முள்ளிவாயக்கால் தமிழினவழிப்பு நினைவு  நிலையங்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்கும் திட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறது. தமிழீழதேசம் என்றும் இந்நினைவுகளைத் தன்னுள் இருத்தித் சிங்கள அரசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்பது காலத்தின் நியதி என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19)  பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி  மேலும் விடயங்களை  அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி –  “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த  உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?

பதில் –  நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.

இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.Logo Klein தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?

பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில்,  மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள  அட்டை இதற்கொரு உதாரணமாகும்.

கேள்வி: இந்த நூலை இன்றைய  சூழ்நிலையில்  வெளியிடுவதில்  உள்ள முக்கியத்துவம் என்ன? 

பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின்  அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.

இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.

சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ  இலங்கை அரசினூடாகவோ  செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.

கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?

பதில் –  நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை  நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன்  தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.a 1 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில்  முக்கியமானது?

பதில் –   2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள்  உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.

உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று  நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை  அரசு,  தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும்  முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.

கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு  கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?

பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை  விளங்கிக் கொள்ளும் போது  தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.a 2 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட  நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?

பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.

கேள்விஇந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள்  எவ்வாறு உள்ளன?

பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை  நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை  எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல்  பற்றிய தமது  நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.WhatsApp Image 2019 05 16 at 20.11.20 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? 

பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத்  தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.

நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? – கலாநிதி ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக இருப்பது நிரந்த மக்கள் தீர்பாயம் (நிமதீ). நிமதீயை பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிரித்தானியாவை சேர்ந்த பெட்ரான்ட் ரசல், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஜீன் போல் சாட்டே போன்ற பல மேதைகள், வியட்நாம் போரில் இழைக்கப்பட்ட கொடுமைகளை 1966-67களிலும், லத்தீன் அமெரிக்காவில் இழைக்கப்பட்ட கொடுமைகளை 1973-76களிலும், தீர்ப்பாயம் அமைத்து விசாரணை செய்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, சர்வதேசத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக, இதுவே பின்னர் ஒரு நிரந்தரமான அமைப்பாக 1979ம் ஆண்டு இத்தாலியிலுள்ள ரோம் நகரில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயமாக (நிமதீ) நிறுவப்பட்டது. இன்றுவரை 45 அமர்வுகளில் சர்வதேசத்தால் புறக்கணிக்கப்பட்ட பல கொடுமைகளை விசாரணை செய்துள்ளது.

நிமதீயின் இலங்கை அமர்வு ஆரம்பம்

2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் நல்ல விளைவை கொண்டு வரவேண்டுமென்று, தமிழர் போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட ஐரோப்பாவிலிருந்த சில நாடுடத்தப்பட்ட சிங்களவர்களும், ஐரோப்பியர்களும் கடினமாக உழைத்தார்கள். 2006இல், போர் உக்கிரமடைந்த போது, முன்னர் பேச்சு வார்த்தைகளுக்கு ஆதரவு வழங்கிய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்தும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு வழங்கும்படி இவர்கள் வேண்டினார்கள். ஆனால் பிரித்தானிய-ஐ‑அமெரிக்க அழுத்தங்களால் ஐரோப்பிய நாடுகளும் போரை ஆதரிக்க ஆரம்பித்தன. தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக்கொணடிருந்த 2009ம் ஆண்டு காலத்தில், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஏனைய அரசசார்பற்ற அமைப்புக்களும் கூட, போருக்கு பின்னரான காலத்தைப் பற்றியே பேசின.

வலிமையுள்ள சர்வதேச அமைப்புக்கள் தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரிக்க போவதில்லை என்று உணர்ந்தே மேற்குறிப்பிட்ட சிங்கள், ஐரோப்பிய ஆர்வலர்கள் நிமதீயை நாடினார்கள். ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் சிங்களவர்களும், ஐரோப்பியர்களும் சிலரேயானாலும், இருக்கிறார்கள் என்று ஈழத்தமிழருக்கு நிரூபிக்கவும் இவர்கள் விரும்பினார்கள்.

நிமதீயின் முதலாவது இலங்கை அமர்வு

முள்ளிவாய்க்கால் அழிவு நடந்து ஒரு ஆண்டு முடிவதற்குள்ளேயே, 2010 சனவரி மாதத்தில் முதலாவது அமர்வு அயர்லாந்திலுள்ள டப்ளின் நகரத்தில் நடந்தது. அயர்லாந்து நாட்டு ஆர்வலர்களே இதற்கான ஒழுங்குகளை செய்தார்கள். ஜெர்மனியிலுள்ள ”சர்வதேச மனித உரிமை அமைப்பு” விசாரணை செய்ய வேண்டிய குற்றப்பத்திரிகையை தாயார் செய்தது. விசாரிக்க வேண்டிய குற்றங்களில் ”போர் குற்றங்களும்”, ”சமாதானத்திற்கு எதிரான குற்றமும்” உள்ளடங்கியிருந்தன.

இதற்கான சாட்சியங்களாக முள்ளிவாய்கால் அழிவுகளை நேரில் கண்ட பல ஈழத்தமிழர்கள் இரகசியமாக வரவழைக்கப்பட்டார்கள். மேலும் பல நிபுணர்கள், சிங்களவர்களும், தமிழர்களும், ஐரோப்பியர்களும், இந்தியர்களும் சாட்சிகள் வழங்கினார்கள். ஈழத்தமிழரின் பல சாட்சியங்கள், அவர்களின் பாதுகாப்பு கருதி இரகசியமாகவே விசாரிக்கப்பட்டன.

இந்த அமர்வில் குற்றங்களை விசாரித்த குழுவில் பத்து சர்வதேச நிபுணர்கள் இருந்தார்கள். இவர்களைப் பற்றி. டானியல் ஃபியர்ஸ்டீன் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் ஆய்ரஸ் பல்கலைக்கழகத்தில் இனவழிப்பு பிரிவில் பேராசிரியர். டெனிஸ் ஹலிடே ஐநாவின் உதவி செயலாளராக இருந்து பின்னர் அது இராக்கின் மேல் போட்ட பொருளாதார தடைகளை எதிர்த்து ஐநா பதவியிலிருந்து விலகினார். ஃபிரான்சுவா ஹுற்றாட் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தார். 2017இல் இகுவடோரில் பல்கலைகழகத்தில் பணிசெய்து கொண்டிருந்த போது காலமானார்.

மேரி லோலர் டப்ளினை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர். ஃபிராசெஸ்கோ மார்டோனே இத்தாலி நாட்டை சேர்ந்த ஆர்வலர். நவால் சடாவி எகிப்து நாட்டை சேர்ந்த பெண்களுக்காக போராடும் ஆர்வலர். ராஜேந்தர் சச்சார் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி. இந்தியாவின் பொட சட்டத்திற்கு எதிராக போராடினார். ஏப்பிரல் 2018இல் காலமானர். சுலக் சிவரக்சா தாய்லாந்த சேர்ந்தவர். புத்த சமயத்தையும் சமூக மாற்றங்களையும் பற்றி நிறைய நூல்கள் எழுதியவர். தாய்லாந்து புத்த சமயத்தை அரச சமயமாக்குவதை எதிர்தார். ஜீயானி ரொன்யோனி நிமதீயின் செயலாளர் நாயகம். நோர்வேயை சேர்ந்த ஓய்ஸ்ரைன் ரிவேற்றர் சர்வதேச சட்டங்கள் அறிந்த நிபுணர்.

மேலே குறிப்பிட்ட நிபுணர்கள், டப்ளின் நகரில் இடம்பெற்ற இவ்வமர்வின் தீர்ப்பில், சிறிலங்கா அரசின் மேல் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில், போர்குற்றங்கள் இடம்பெற்றிருக்கிறது என்று தீர்ப்பு வழங்கினார்கள். அத்துடன் இனவழிப்பு குற்றம் பற்றி மேலும் ஆராயப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள். சமாதானத்திற்கு எதிரான குற்றம் பற்றி இவ்வாறு விளக்கினார்கள்.

சமாதானத்திற்கு எதிராக குற்றம்நிபுணர்கள் சொன்னது

இவ்வாறான ஒரு குற்றத்திற்கு தெளிவாக வரையறைகள் செய்ய முடியாது. இக்குற்றச்சாட்டை விசாரிப்பதாக இருந்தால், இதற்கு முன்னர் சமாதானம் இருந்துள்ளதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். யார் முதலில் சமாதானத்தை உடைத்தார்கள் என்று தீர்மானிப்பதில் பிரச்சனைகள் உள்ளன. இருந்தாலும் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு, சர்வதேச சமூகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்ல என்பதை நிமதீ ஏற்றுக்கொள்கிறது. சில ஐநா அங்கத்துவ நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக, ஐநாவும் இப்போரில் இடம்பெற்ற குற்றங்களை ஆராய்வதற்கு தகுந்த ஒரு கமிசனை இதுவரை உருவாக்கவில்லை

ஐரோப்பிய ஒன்றியம் போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் விடுதலைபுலிகளை தடைசெய்ததும் கண்டிக்கப்பட வேண்டியது. இதுவே, இலங்கை அரசு போரை மீண்டும் ஆரம்பிக்கவும், மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தவும் வழி செய்தது. அமெரிக்காவின்பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்சிறிலங்கா அரசு மோசமாக நடந்து கொள்வதற்கு உந்துதலாக இருந்துள்ளது.

பிரேமன் அமர்வு 2013 டிசம்பர்

டப்ளின் அமர்வுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், டப்ளின் அமர்வில் இருந்த நீதிபதிகளில் நால்வருடன் (டானியல் ஃபியர்ஸ்டீன், டெனிஸ் ஹலிடே, ஜீயானி ரொன்யோனி, ஓய்ஸ்ரைன் ரிவேற்றர்), மேலும் எட்டு நிபுணர்கள் கொண்ட, 12 நிபுணர்கள் குழு, ஜெர்மனியிலுள்ள பிரேமன் என்னும் நகரில் அமர்ந்து சாட்சிகளை கேட்டது. இம்முறை இனவழிப்பு குற்றச்சாட்டையும் அத்துடன் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இனவழிப்புக்கு துணைபோனது என்ற குற்றச்சாட்டிற்கான சாட்சியங்களையும் நிபுணர்கள் கேட்டார்கள்.

இவ்வமர்வில் இருந்த நிபுணர்கள், இனவழிப்பு நடந்தது என்றும், தொடர்ந்தும் நடக்கிறது என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்.

பிரித்தானியா இனவழிப்புக்கு துணைபோனது என்ற குற்றச்சாட்டிற்கான சாட்சியங்கள் கொடுக்கப்பட்டன. காலனிய காலத்திலிருந்தே திருகோணமலை துறைமுகத்தில் அதற்குள்ள தேவையினால் தமிழர் உரிமைகளை தொடர்ச்சியாக புறந்தள்ளியது என்றும், ஆயுத போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை செய்தது என்றும், சிறிலங்கா இராணுவத்தின் கட்டுபாடற்ற பல மீறல்களை தெரிந்து கொண்டும் பிரித்தானியா தொடர்ந்து உதவிகள் கொடுத்தது என்றும் சாட்சிகள் கொடுக்கப்பட்டன.

அமெரிக்காவிற்கு எதிரான சாட்சியங்களாக, உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தை அமெரிக்காவில் விடுதலைபுலிகளை அழைக்காமல் வைத்ததும், போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் விடுதலைப்புகளை தடைசெய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்ததும் சாட்சியங்களாக வைக்கப்பட்டனஇவற்றைவிட மேலும் பல நடப்புக்கள் இதற்கான சாட்சியாக வைக்கப்பட்டன. பிரித்தானியாவும், அமெரிக்காவும், பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே குழப்பி, இனவழிப்புக்கு துணைபோயின என்ற தீர்ப்பையும் அமர்விலிருந்த நிபுணர்கள் வழங்கினார்கள்.

இந்தியா மேலுள்ள குற்றச்சாட்டிற்கு, போதிய ஆதராங்கள் சமர்ப்பிக்க படவில்லை என்றும், மேலதிக ஆதராங்கள் சமர்ப்பிக்க கோரியும் தீர்ப்பளித்தார்கள்.

இத்தீர்வின் தமிழாக்கத்தை இங்கே பெற்றுக்கொள்ளலாம்

http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/ppt_final_report_web_ta.pdf

 

பிரேமன் அமர்விலிருந்த நிபுணர்களின் விபரங்கள்

கப்ரியலே டெல மோர்த்தே,me நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிமிலான் கத்தோலிக்க பல்கலைகழகத்தில், சர்வதேச சட்டங்களின் பேராசியராக உள்ளார். ஜெனீவாவின், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபின சட்டங்களுக்கான அகடமியிலும் (2007-2008) பேராசிரியராக இருந்தார். ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக (2003-2004) பணியாற்றினார். பழைய யூகோசுலாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலுவலகத்தில் (2000) பணியாற்றினார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (1998)                                            அமைப்பதற்கு அமர்த்தப்பட்ட அரச குழுவிலும் இருந்தார்.

ஹுசே எலியேஸ் எஸ்றவே மொல்ற்றோ,eli நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி

இஸ்பெயினிலுள்ள வலன்சியா பல்கலைகழகத்தில் சர்வதே சட்ட பேராசிரியராக பணியாற்றுகிறார். திபெத் பற்றிய சட்ட நிபுணர்.  திபெத்திலும், பர்மாவிலும் இழைக்கப்பட்ட குற்றங்களை ஆய்வு செய்து  இவற்றிற்கான  குற்றப்பத்திரிகையை தாயாரித்தார்

 டானியல் ஃபியர்ஸ்டீன்,dani நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி ஆர்ஜன்டீனாவின், ற்ரேஸ் டி ஃபெப்ரேரோ பல்கலைகழகத்தின், இனவழிப்பு கற்கை மையத்தின் பணிப்பாளராகவும், புவனஸ் ஆய்ரஸ் பலகலைகழகத்தின் இனப்படுகொலை பீடத்தின் பேராசிரியராகவும், ஆர்ஜன்டீனாவின் தேசிய ஆய்வாளர் மையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சர்வதேச இனவழிப்பு கற்கை நிபுணர்களின் மையத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

 

செவனே கர்பியன்,karpion நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி சர்வதேச இனவழிப்பு சட்ட நிபுணர். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும், சுவீடனின் நியுசெடெல் பல்கலைக்கழகத்தில் சட்ட தத்துவத்திலும், சர்வதேச குற்ற சட்டங்களிலும் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். சட்டங்கள் அரசுகள் இழைக்கும் குற்றங்களை கையாளுவது பற்றி கவனம் செலுத்துகிறார்.

ஹேகர் கலுக்,kaluk நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி மத்திய கிழக்கு பற்றி ஆய்வு செய்யும் கல்விமான். இவரது அரசியல் வேலைகளுக்காக துருக்கியால் சிறையிலடப்பட்டவர். குர்திஸ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பவர்.

 

 ஜாவியர் கிரல்டோ மொரீனோ, javi நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிகொலம்பியாவின் பொகொட்டாவில் வாழும் ஒரு இறையியல்வாதி, மனித உரிமைகள் ஆர்வலர். இனவழிப்பால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆய்வு செய்தவர். நிமதீயின் உதவி தலைவராகவும் உள்ளார்.

  

ஜீயானி ரொன்யோனி jiyani நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிநிமதீயின் செயலாளர் நாயகம்

 

 

 

 

டெனிஸ் ஹலிடே,denis நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி ஐநாவின் உதவி செயலாளராக இருந்து பின்னர் அது இராக்கின் மேல் போட்ட பொருளாதார தடைகளை எதிர்த்து ஐநாவில் 34 வருடஙங்கள் வகித்த பதவியிலிருந்து விலகினார். சர்வதேச காந்தி சமாதான பரிசு பெற்றவர்.

 

  

 மன்ஃபிரட் உறின்ஸ்,manpi நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி ஜெர்மனியின், பிரேமன் பல்கலைக்கழகத்தில், பொது சட்டம், அரசியல் சமூகவியல், சட்டத்தின் சமூகவியல் ஆகிய துறைகளில் பேராசியராக உள்ளார். ஆபிரிக்காவில், முக்கியமான நம்பிபியாவிலும், மேற்கு சகாராவிலும் இடம்பெற்ற விடுதலைப்போராட்டங்களுடன் நெருங்கிய உறவுகளை பேணினார். நம்பிபியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக பணியாற்றிய போது, அதன் மனித உரிமை மற்றும் சனநாயகத்திற்கான யுனேஸ்கோ பேரரசிரியர் பதவியையும் வகித்தார்.

ஹெலன் ஜாவிஸ்,javis நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி கம்போடியா தீர்பாயத்தின், பொதுமக்கள் பிரிவின் தலைவராக பணியாற்றியவர்.

 

 

  

ஓய்ஸ்ரைன் ரிவேற்றர் ,

oisti நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதி சர்வதேச சட்ட நிபுணர். நிமதீயின் பிலிப்பைன்ஸ் பற்றிய அமர்வின் உறுப்பினராகவும் இருந்தார்

 

 

 மோங் ஸார்ணி, sarni நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - கலாநிதி ந.மாலதிபர்மாவில் சனநாயகம் சார்ந்த செயற்பாட்டாளர். 1995இல் சுதந்திர பர்மா கூட்டணியை நிறுவினார். ரோகிங்யா முசுலீம்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படையாக எதிர்க்கும் ஒருசில பர்மா அறிவுசீவிகளில் ஒருவர். இதுவிடயமாக ஆன் சங் ஸுசியை பகிரங்கமாக கண்டித்தவர்.

 

 

 

 

 

வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் – சுருதி

telesur  என்ற ஊடகத்தின் தொலைக்காட்சியில் எம்பயர் ஃபைல்கள் என்ற தொடரை நடத்தும் அபி மார்ட்டின் என்ற அமெரிக்கர் அண்மையில் வெனிசுவேலாவிற்கு சென்றுவந்து கொடுத்த அறிக்கை வெனிசுவேலா பற்றி வேறொரு பார்வையை தருகிறது.

மையநீரோட்ட ஊடகங்கள் இன்று வெனிசுவேலா பற்றி என்ன சொல்லிக்கொண்டு வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். உணவு உட்பட அடிப்படை தேவையான பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் தொகையாக அந்த நாட்டிலிருந்து வெளியேறுகிறார்கள். எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த நாட்டிற்கு ஏன் இந்த நிலைமை. அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் கோபம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக கொதிநிலையில் இருந்தது. இப்போது இது மேலும் அதிகரித்து வருகிறது.

வெனிசுவேலாவின் எதிர்கட்சி சனாதிபதி மதூரோவை பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கிறது. மதூரோவும் அவரின் முன்னோடியான ஹகோ சாவேசும் தான் இன்றைய வெனிசுவேலாவின் நிலைமைக்கு காரணம் என்கிறார்கள் எதிர்கட்சியினர். நாளாந்த தேவைகள் கிடைக்காததால் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நம்பிக்கை இழந்த வெனிசுவேலர்கள் ஐ-அமெரிக்காவை நோக்கி வருகிறார்கள். ஐ-அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின்படி 2015இல் இங்கு வந்த வெனிசுவேலர்களில் பன்னிரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமது நாட்டுக்கு திரும்பாமல் இருக்கிறார்கள்.

இதுதான் இன்று மையநீரோட்ட ஊடகங்கள் சொல்லிவரும் செய்தி. அபி மார்டின் என்ன சொல்கிறார்.மக்கள் தப்பியோடுகிறார்கள். அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. உண்மைதான். ஆனால் இவற்றின் பின்னாலுள்ள பெரிய விடயங்களை இவை நடப்பதற்கான காரணங்களை அவதானிக்க வேண்டும் என்கிறார் இவர். இதோ இவர் சொல்வது.

இந்த பிரச்சனையை பல அடுக்குகளாக அலச வேண்டும். சாவேஸ் முன்னெடுத்த மதுரோவால் தொடரப்படும் மக்களிடம் பிரபலமான வெனிசுவேலாவின் கொள்கைகளின் தோல்வியாகவே ஐ-அமெரிக்க கார்பரேட் ஊடகம் எப்போதும் இதை காட்டுகிறது. களத்தில் உண்மையான தரவுகளை பார்க்க வேண்டும். வெனிசுவேலாவின் ஏழை மக்கள் வெனிசுவேலா அரசை ஆதரிக்கிறார்கள். கார்பரேட் ஊடகம் தொடர்ச்சியாக போதிப்பது போல சர்வாதிகாரம் அங்கில்லை. தேர்தல்கள் நேர்மையாகவே நடக்கின்றன. எதற்காக ட்ரம்ப் அரசு, ஒபாமா அரசு மற்றும் நவதாராளவாத கார்பரேட் ஊடகம் எல்லாமே வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றம் தேவை என்கிறது.

உண்மை என்னவென்றால் 1999இல் சாவேஸ் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஐ-அமெரிக்கா வெனிசுவேலா ஆட்சி மாற்றத்திற்கு முயற்சிக்கிறது. புஸ் அரசு வெனிசுவேலா எதிர் கட்சியுடன் சேர்ந்து 2003இல் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சித்தது. அப்போது அது சாவேஸை துப்பாக்கி முனையில் கடத்தியது.wn20130414p1a வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் - சுருதி

அப்போது அதில் எதிர்கட்சியின் பங்கையும் பார்க்க முடிந்தது. எதிர் கட்சி உடனடியாக ஒரு புதிய அரசியல் சாசனத்தை அமுலாக்கியது. அதில் வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் தனியார் மயமாக்கப்பட்டது. இதை 2003 இல் நாம் பார்த்தோம். அப்போதிலிருந்து ஐ-அமெரிக்கா 50 மில்லியன் டொலர்களை எதிர்கட்சிக்கு கொடுத்திருக்கிறது. புஸ் அரசும் ஒபாமா அரசும் எதிர் கட்சி பிரதிநிதிகளை மீண்டும் மீண்டும் சந்தித்து வந்தார்கள்.

அத்துடன் வெனிசுவேலாவின் பிரச்சனைகள் தென்னமெரிக்க நாடுகள் எல்லாவற்றிற்கும் பொதுவான பிரச்சனைகளும் தான். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த காலனியாதிக்கம். சொந்த காலில் நிற்க முடியாமல் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்தில் அளவுக்கதிகமாக தங்கியிருந்தது. இவை லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும். வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை அதன் எண்ணெய் வருமானம் அளவுக்கதிகமாக தாங்கி பிடித்தது. எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த பின்னர் எவ்வாறு தங்கள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது என்று அவர்கள் இப்போது முயற்சிக்கிறார்கள்.

வெனிசுவேலாவின் பிரச்சனையை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று சோசலிச கொள்கைகளின் தோல்வியாக. மற்றைய பார்வை ஏழ்மையான இடங்களில் இருக்கும் மக்கள் சொல்வது. உண்மையில் இது ஒரு வர்க்க போராட்டம் தான். ஊடகங்கள் எல்லாவற்றையும் திரித்து சொல்வதாக இந்த மக்கள் சொல்கிறார்கள். அங்குள்ள முதலாளிகள் பொருட்களை பதுக்குகிறார்கள். அங்குள்ள மிகப்பெரிய கம்பனிகள் ஒரு பொருளாதார போரை நடத்துகிறார்கள். அங்குள்ள ஒரு கம்பனிதான் பொலார்ட். அதன் அதிகாரி ட்ரம்ப் ஆதரவாளர். மதுரோவுக்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்காக வெளிப்படையாக இயங்குகிறார். அங்கு நான் எட்டு சூப்பர் மார்க்கட்டுகளுக்கு போனேன்.

ஏழ்மையான இடத்திலும், நடுத்தர இடத்திலும் பணவசதியுள்ள இடத்திலும் போனேன். அங்கு உணவு தட்டுப்பாடு இல்லை. குறிப்பிட்ட சில உணவு வகைகளுக்கு மட்டும் தட்டுப்பாடு. எண்ணெய், மா, பற்பசை, கழிவறை பேப்பர் போன்றவைகள். ஏன் இப்படி குறிப்பிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு. பழங்கள், இறைச்சி போன்றவை எல்லாம் கிடைக்கின்றன. சூப்பர் மார்கெட்டில் பேப்பர் டவல் பேப்பர் நப்கின் இருக்கின்றன. ஆனால் கழிவறை பேப்பர் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருவது என்னவெனில் இவைகளை முதலாளிகள் பதுக்கிறார்கள். அல்லது கொலம்பியாவுக்கு அனுப்புகிறார்கள்.

கிளப் எனப்படும் அரசாங்கம் கொடுக்கும் உணவு மானிய பெட்டியில் உள்ள பல பொருட்களுக்கு பொலார்ட் கம்பனி தான் பொறுப்பு. இதை மிகவும் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மானிய அடிப்படையில் அரசாங்கம் கொடுக்கிறது. அந்த உணவு பெட்டியில் உள்ள பொருட்கள் பலவற்றை பொலார்ட் உற்பத்தி செய்கிறது. அவற்றை இந்த கம்பனி பதுக்கிறது.

முதலாளிகள் இப்படி செய்ய மாட்டார்கள் என்று பலர் என்னோடு வாதிட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் இந்த கதைகளுக்கு இரு பக்கம் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே கேட்கிறோம். இந்த பிரச்சனையை ஊதிவிட அமெரிக்கா செய்வதைப் பற்றி எங்கள் காதில் எதுவும் விழுவதில்லை. முதலாளிகளின் பொருளாதார போர் மட்டுமல்ல. வெனிசுவேலாவின் மேல் போட்டுள்ள தடைகளும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். ஐ-அமெரிக்கா வெனிசுவேலாவின் எதிர்கட்சியுடன் சேர்ந்து வெனிசுவேலா கடன் எடுப்பதையும் தடுக்கிறது.

எண்ணெய் வளத்தின் மேல் வெனிசுவேலா இருக்கிறது என்பதற்கும் அப்பால், சாவேஸ் தனது சோசலிச கொள்கைகளால், அடிமட்ட மக்களை தூக்கிவிட்டு அவர்களின் குரல்களையும் கேட்க செய்தார். நூற்றாண்டுகளாக பொருளாதாரத்தை தங்கள் கையில் வைத்திருந்தவர்களால் இந்த ஏழை மக்கள் அடக்கப்பட்டார்கள். சாவேஸ் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட போது வெனிசுவேலா பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டு கொண்டிருந்தார்கள். மில்லியன் கணக்கான ஏழைகள் சாவேசின் பின்னால் அணிசேர்ந்தார்கள். பூர்வகுடிகள், ஆபிரிக்க வெனிசுவேலர்கள், ஏழைகள் எல்லோருடைய குரல்களையும் சாவேஸ் கேட்கும்படி செய்தார். இதற்கு முன்னர் இவர்களின் குரல்கள் கேட்கப்படவில்லை. இன்று நாங்கள் பார்ப்பது ஒரு வர்க்க போராட்டம் தான். பல ஆயிரம் மக்கள் மதூரோ அரசுக்கு எதிராக வீதிகளில் போராடுகிறார்கள். இவர்கள் பெரும்பான்மையாக வெள்ளையர்கள். நடுத்தர வர்க்கத்தினர். கொஞ்சம் பணவசதியுள்ளவர்கள். மறுபக்கம் பல ஆயிரம் மக்கள் அரசை ஆதரிக்கிறார்கள்.bd7b670ec19b444bb72e90fbf9fa7af6 18 வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் - சுருதி

இவர்கள் ஏழைகள். ஆபிரிக்க வெனிசுவேலர்கள். ஏழைகளின் நிலையை உயர்த்தும் கொள்கைகள் டொமினோ மாதிரி ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் பரவும் என்பதால் ஐ-அமெரிக்காவுக்கு இதுவும் பிடிக்காது.

நான் இன்னுமொரு விடயமும் சொல்வேன். மதுரோ தேர்தலில் 5 மில்லயன் வாக்குகளால் வெற்றி பெற்றார். டிரம்ப் அரசாங்கம் வெனிசுவேலாவின் எதிர்கட்சியை போட்டியிட வேண்டாம் என்று கெஞ்சி நிறுத்தியது. இதனால் எதிர்கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

மதுரோவின் தெரிவு நேர்மையற்றது என்று காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்கள். மதுரோ எதிர்ப்பு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால், அவர் சர்வாதிகாரி என்று கதை பேசுவதற்கு இதுவும் பலம் கொடுக்கும். கடைசி நேரத்தில் இருவர் மதுரோவுக்கு எதிராக தேர்தலில் நின்றார்கள். மதுரோ சர்வாதிகாரி என்று சொல்வதை இது பொய் என்று நிரூபித்தது. இதுதான் எதிர்கட்சியின் தந்திரோபாயம். சனநாயகத்திற்கு எதிரான வழிகளில் அதிகாரத்தை கையில் எடுப்பதுதான் அது. வீதிகளில் வன்முறைகள் நிறைந்த போராட்டங்கள் வெடிக்கிறது. பலர் அமைதி வழியில் போராடுகிறார்கள். உண்மைதான். ஆனால் கருப்பின சாவேஸ் ஆதரவாளர்களையும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் தாக்கி வருகிறார்கள். சோசலிஸ்டுகளை கொலை செய்கிறார்கள். வெனிசுவேலா அரசின் அடையாளங்களை, பிரசவ வைத்தியசாலைகள், உணவு விநியோகிக்கும் இடங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கிறார்கள்.

இங்குதான் ஐ-அமெரிக்காவின் கதையின் பொய்கள் வெளிவருகின்றன. ஐ-அமெரிக்கா பட்டினி கிடக்கும் மக்களுக்காக என்று பேசுகிறது. அவர்களுக்காக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறது. ஆனால் இந்த மக்கள்தான் வெனிசுவேலா அரசை ஆதரிக்கிறார்கள். இந்த மக்களை ஐ-அமெரிக்கா கையாழும் விதம் மிகவும் இழிவானது.

எனக்கு ஆழ்ந்த வருத்தம் தருவது என்னவெனில் ஒரு நாடு இருக்கிறது. அங்கு பெரும் பட்டினி நடக்கிறது. அந்த நாட்டுக்கு பெயர் யெமன். நாசி ஜெர்மன் படுகொலைகளைவிட மூன்று மடங்கு மக்கள் அங்கு சாகப்போகிறார்கள். அதை புறந்தள்ளி வெனிசுவேலாவில் மனித உரிமை பற்றி தாங்கள் கவலைப்படுவது போல காட்டுவது. இழிவிலும் இழிவு. அமெரிக்கர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனாலும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லும்போது அதை நம்புவதற்கு எங்கள் மூளை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை தாண்டி இங்கு வேறொரு பக்கமும் இருக்கிறது என்று அறிவதற்கு இதை மறுத்து பேசும் முற்போக்கு ஊடகங்களும் எம்மிடையே இல்லவே இல்லை.

மிகவும் அதிசயமான விடயம் என்னவெனில் தடைகள் எதற்காக போடப்பட்டனவோ அதை அது செய்கிறது. பிரச்சனையை தடைகள் இன்னும் மோசமாக்கி உணவும் மருந்தும் கிடைப்பதை இன்னும் கடினமாக்குகிறது. தடைகளை போட்டு அதன் விளைவுகளை காட்டி ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம். இந்த நஞ்சு வட்டத்தை எதிர்த்து இனி போதும் என்று நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

 

 

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நடைபெற உள்ள இத்தருணத்தில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு நேற்று சிரமதான பணியொன்று நடத்தப்பட்டது. இதில் நினைவேந்தல் குழுவில் அங்கம் வகிக்கும் அருட்தந்தையர், அருட்சகோதரிகள், திருகோணமலை தென்கையிலை ஆதீன குருக்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

மே 18 அன்று அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்ற உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

mulli 1 1 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

 

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இருந்தும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

செய்தியாளரின் கேள்விகளுக்கு பாரதிஜ ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா வே பதிலளித்தார். செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி தெரிவிக்கையில், கடந்த இரு மக்களவை தேர்தல்களின் போதும் (2009, 2014)  ஐ.பி.எல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை.

அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐ.பி.எல், ரம்ஸான், பாடசாலைத் தேர்வுகள் என அனைத்தும் அமைதியாக நடக்கும் என்று கூறினார்.

தேசத்திற்காக வாழ்ந்து மறையும் நாய்கள்

இராணுவத்தில் சேவை செய்கின்ற இந்த நாய்களின் இறுதி நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இராணுவத்தில் சேவையாற்றும் இந்த நாய்கள் வயது மூப்பு அடைந்த பின்னர் அவை கொல்லப்படுகின்றன. அதுவும் வலியில்லாமல் கொல்லப்படுகின்றன.

ஏன் இவை உயிர் வாழ்ந்தால் என்ன என்ற கேள்வி எழுகின்றதல்லவா? இராணுவத்தில் பணியாற்றும் நாய்கள் பலவிதமான கடுமையான பயிற்சியினை பெற்றுக் கொள்கின்றன. அத்துடன் இந்த நாய்களுக்கு மோப்ப சக்திகள் அதிகம். அப்படியிருக்கும் போது, இவை வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை கண்டு பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றது.

வயது மூப்பு காரணமாக இவை ஓய்வு பெற்ற பின்னர் இவை பயங்கரவாதிகளின் கைகளில் அகப்பட்டால், தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தும் அபாயம் இருக்கின்றன. இதனால் தான் இந்த நாய்கள் ஓய்வு பெற்ற பின்னர் கொல்லப்படுகின்றன.

இப்படி கொல்லப்படும் நாய்கள் இராணுவ மரியாதையுடனேயே அடக்கம் செய்யப்படுகின்றன. இந்த நாய்களை ஒரு நிதியை ஒதுக்கீடு செய்து இராணுவமே பராமரிக்கலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகும்.

அடுத்தடுத்த நாய்களுக்கு பயிற்சியளிக்கும் போது இவைகளின் நிலை அவைக்கு  விநோதமாக அமையும். இதனாலேயே இவை கொல்லப்படுகின்றன.

நம் தேசத்திற்காக சேவை செய்து, தேச நலனுக்காக வாழும்  இந்த நாய்கள் மரியாதைக்குரியவையே ஆகும்.

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்த இயக்குநர் மு.களஞ்சியம் கைது

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இயக்குநர் சோழன் மு. களஞ்சியம் அவர்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளது.

தமிழர் நலன் பேரியக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சோழன் மு.களஞ்சியம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாம் தமிழர் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில் சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியிருந்தார்.

இக்கூட்டத்தில் குறித்த ஒரு அரசியல் கட்சியை தாக்கிப் பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் களஞ்சியம் மீது 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறை முயற்சித்தது.

ஆனால் முன் பிணை கேட்டு மு. களஞ்சியம் அவர்கள் தரப்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

21 பைகள் அடங்கிய அமோனியா நைட்ரேட்டை காவல்துறையினர் கைப்பற்றினர்

அஸ்கிரிய காவல்துறை பிரிவில்  ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்ட அமோனியம் நைத்திரேட் அடங்கிய 21 பொதிகளை கண்டி காவல்துறையினர் கைப்பற்றினர்.

விசாரணையின் போது, இவை தென்னை மரங்களுக்கு உரமாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் ஒரு சிரேஸ்ட இராணுவ அதிகாரி தெரிவிக்கையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களில் அமோனியா நைத்ரேட் ஒன்றாகும்  என்று கூறினார். கண்டி காவல்துறை தலைமையகத்தின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பொதிகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் ஒரு காவல்துறை குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

தமிழ்த் திரைப்படங்களை தமிழினப்படுகொலை நாளில் வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! – கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

மே18 தமிழினப்படுகொலையின் நினைவுநாள். உலகெங்கும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை இந்நாளில்  வெளியிடாமல் தள்ளிவைப்பதே  உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் – தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மே 18 இன அழிப்பின் நினைநாள்! சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவ தமிழ் இனப்படுகொலை நாள்! 10 ஆண்டுகள் கடந்தும் மனக்காயம் ஆறாத நாளாக மே 18 நம் மனத்தில் வலியை நினைவுப்படுத்துகிறது.

கடந்த பத்தாண்டுகளாக மே மாதத்தை தாயகத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகெங்கும் வாழும் புலம்பெயர் உறவுகளும் மே 18 ஆம் நாளை துக்கநாளாக கடைபிடிக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த செய்தி!

இந்த மே மாதம் தமிழர்களுக்கான சோகமாதம்! இம்மாதத்தில் கேளிக்கை விழாக்களோ, தங்களது இல்லத்தில் மகிழ்வான நிகழ்வுகளோ யாவரும் நடாத்துவதில்லை. இந்நிலையை நாம் உணர்ந்து கொண்டு கடைபிடிப்பது இன்னுயிர் ஈந்த தமிழீழ தமிழர்களுக்கு நாம் செய்யும் நினைவேந்தல் ஆகும்.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வெளிப்படும். அதாவது மே 17.05.2019 – 18.5.2019 ஆகிய நாட்களில் வெளிவருகிற நிலை உள்ளது. மே 18 ஒட்டிய இவ்வாரங்களில் தமிழ்த்திரைப்படங்கள் வெளியிடக்கூடாது என்று உலகெங்கும் வாழும் தமிழர் உணர்வாளர்கள் பலர் கோரிக்கை வைக்கின்றனர். அது உணர்வுபூர்வமானது மட்டுமன்றி ஞாயமானதும் ஆகும்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் ரிலீசாகி வெற்றிப் பெறுகிற நிலையில் இம்மேமாத வாரங்களில் ரிலீசாகும் தமிழ்த்திரைப்படங்களை தள்ளிவைப்பதே தமிழீழத்திற்காக உயிர்நீத்த இலட்சக்கணக்கான தமிழர் உறவுகளுக்கு நாம் செலுத்து அஞ்சலியாகும்.

நான் சார்ந்திருக்கிற தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு மட்டுமின்றி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இக்கோரிக்கையை வேண்டுகோளாக வைக்கி றேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.