Home Blog Page 2

பறிபோகும் சுதந்திர வாழ்க்கை – துரைசாமி நடராஜா

b1 பறிபோகும் சுதந்திர வாழ்க்கை - துரைசாமி நடராஜாஇலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி சிறுவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மலையக சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து காணப்படும் நிலையில் இது தொடர்பில் சகல தரப்பினரும் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

சிறுவர்கள் நாட்டின் எதிர்காலத்தை சிருஷ்டிக்கும் சிற்பிகளாக விளங்குகின்றனர். இவர்களால் எதிர்கால தேசம் செழுமையுறுகின்றது. இந்நிலையில் இவர்களை ஒழுக்க சீலர்களாக, கல்வியில் மேம்பட்டவர்களாக, நாட்டிற்கு பொருத்தப்பாடு உடையவர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 19 ம் நூற்றாண்டில் இருந்தே சர்வதேச ரீதியாக சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. 1924 ம் ஆண்டில் ஜெனீவாவில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது சட்ட ரீதியான அங்கீகாரம் பெறாமையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

b2 பறிபோகும் சுதந்திர வாழ்க்கை - துரைசாமி நடராஜா1959 ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர் நலன் கருதி 10 அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது. எனினும் இப்பிரகடனமும் 1924 ம் ஆண்டு பிரகடனத்தைப்போன்றே சட்ட வலுவற்றதாகிவிட்டது. 1989 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர் உரிமை பிரகடனம் உருவாக்கப்பட்டது. இப்பிரகடனம் 1990 ம் ஆண்டு சட்ட ரீதியான அங்கீகாரம் பெறப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 1991 ம் ஆண்டு இலங்கை அரசு இதனை உறுதிப்படுத்தியது.

சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் பல காணப்பட்டபோதும் சமகாலத்தில் பல சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகி சிறுவர் பராயத்தையும், சுதந்திர வாழ்க்கையையும் தொலைத்து நிற்கும் பரிதாபம் மேலோங்கி வருவது கொடுமையிலும் கொடுமையாகும். இலங்கையில் கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளடங்கலாக 5000 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4000 இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புபட்டவையாகும். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் 167 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். இவர்களில் 127 பேர் தமது காதலரினால் இந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆய்வு வெளிப்பாடுகள்

2023 ம் ஆண்டில் சிறுவர்களை கொலை செய்தல், கொலை முயற்சி, காயமடையச் செய்தல், பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல் உள்ளிட்ட 3074 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இவை தவிர பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 1463 சிறு குற்றச்செயல்களும் பதிவாகியுள்ளன. பாலியல் குற்றச்செயல்களின் அதிகரித்த போக்கினையும் இங்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கெதிரான 1502 துஷ்பிரயோகங்களும், சிறுவர்களுக்கெதிரான 584 பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பில் 70 குற்றச்செயல்களும் பதிவாகியுள்ளன. இதேவேளை சிறுவர்களை வளர்ந்தோர்கள் சத்தமாக திட்டுதல் அல்லது வாய் வார்த்தைகள் மூலம் அச்சுறுத்துதல், அவமானப்படுத்துதல் முதலியன பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களைப் போன்றே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்று ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மேலும் இத்தகைய நடத்தைகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களை போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக, சிறைக்குச் செல்பவர்களாக மாற்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வு வலியுறுத்துகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பை தடுப்பதற்கான சர்வதேச சமூகத்தினால் பிரசுரிக்கப்படும் ‘சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு’ எனும் சஞ்சிகையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஆர்.சேதுராமன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகின்றார். சிறுவர்கள் தவறாக நடத்தப்படுவதானது நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு என்பன இந்நான்கு பிரிவுகளுமாகும். சிறுவர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் இலங்கையில் சமீபகாலமாக அதிகரித்து உயர்புள்ளிகளை பதிவுசெய்துள்ளது. நவீன காலத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல்சார் வன்கொடுமைகளுக்கு நிலையான தீர்வை நோக்கி ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்கள் செயற்படுகின்றபோதும் அவற்றால் இறுதி இலக்கினை அடைய முடியாதுள்ளது.

b3 பறிபோகும் சுதந்திர வாழ்க்கை - துரைசாமி நடராஜாஇலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாம் நோக்குகின்றபோது மலையகச் சிறுவர்களின் நிலைமை குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.மலையக பெருந்தோட்டங்களில் சிறுவர்கள் அதிகமான துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி வருகின்றமை புதிய விடயமல்ல. இதில் பல்வேறு காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. சில பிள்ளைகளின் பெற்றோர் அல்லது தாய் வருமான ஈட்டல் கருதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பின் நிமித்தமாக சென்றுள்ளனர். இத்தகைய பிள்ளைகள் பெரும்பாலும் உறவினர்களின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ‘வேலியே பயிரை மேய்ந்தாற்போல’ உறவினர்களே பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் மலையகத்தில் இல்லாமலில்லை. அத்தோடு வறுமை, அன்பிற்கான அரவணைப்பின்மை போன்ற பல நிலைமைகளும் பிள்ளைகள் நெறி தவறுவதற்கு உந்துசக்தியாகியுள்ளன.

பாலியல் சுரண்டல் 

கடந்த 2012/2013 ம் ஆண்டு தகவலொன்றின்படி இலங்கையில் பாடசாலைக்கு செல்லாதோரின் தொகை 3.7 வீதமாகக் காணப்பட்டது.இது நகர்ப்புறத்தில் 2.2 வீதமாகவும், கிராமப்புறத்தில் 3.5 வீதமாகவும் அமைந்திருந்த அதேவேளை பெருந்தோட்டத்தில் இது 12.2 வீதம் என்ற அதிகரித்த போக்கினை வெளிப்படுத்தி இருந்தது. அண்மைய தகவலுக்கமைய 06 தொடக்கம் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 4.5 வீதமான ஆண்களும், 3.1 வீதமான பெண்களுமாக மொத்தம் 3.8 வீதமான சிறுவர்கள் வெறுமனே தோட்டங்களில் சுற்றித் திரிவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன. இதேவேளை இடைவிலகும் மாணவர்களின் தொகையிலும் அதிகரிப்பைக் காண முடிந்தது. அண்மைய தகவலொன்றின்படி முதலாம் தரத்தில் சேரும் மாணவர்களில் 58 வீதமான பெருந்தோட்ட மாணவர்களே ஆரம்பக் கல்வியை கற்று முடித்தவர்கள் என்று தெரியவருகின்றது.

இதேவேளை 2007 ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களில் 7 வீதமானவர்களே க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கு சென்றனர். இந்நிலையில் இடைவிலகலைக் கட்டுப்படுத்த ஒருவழி முன்னதாகவே அவ்வாறு இடைவிலகக்கூடிய மாணவர்களை இனங்காணுதலாகும்.இதற்கு மாணவர் வருகை, கல்விச் சித்தி, கல்விச் செயற்பாடுகளில் பங்கேற்பு முதலியவற்றை இனங்காணுதலாகும். இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறாக பாடசாலைக்குச் செல்லாத அல்லது இடைவிலகுகின்ற மாணவர்கள் நெறிபிறழும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதோடு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் நிலைமைகளும் mதிகமாகும் .

இதேவேளை சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நிலைமையும் மலையகத்தில் காணப்படுகின்றது. 06 தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண்களும், 14.6 வீதமான பெண்களுமாக மொத்தமாக 12.4 வீதமான சிறுவர்கள் ஏதேனுமொரு தொழிற்றுறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ஆர்.சோபனாதேவி குறிப்பிடுகின்றார். பன்னாடுகளில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை, மனித குலத்துக்கு அப்பாலான செயற்பாடுகளால் சிறுவர் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகும் சிறுவர்கள் எதிர்நோக்கும் முதல் சவாலாக பாலியல் ரீதியான வன்கொடுமைகள் காணப்படுகின்றன.இலங்கையிலுள்ள சிறுவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி தொழிலுக்குச் செல்வதால் பல மில்லியன் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு தீர்வினைக் காண்பதற்கு விரைவாக செயற்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.

இலங்கையில் சிறுவர் உரிமைகளை பேணும் நடவடிக்கைகள் பலவுள்ளன. 1990 ம் ஆண்டில் சிறுவர்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்குடன் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கும், சிறுவர்களுக்குமான தனியான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டது. கட்டாயக் கல்வித் திட்டமும் சிறுவர் உரிமைகளைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. சிறுவர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளையும், ஆலோசனைகளையும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.

யுனிசெப்பின்  நிலைப்பாடு 

இதேவேளை இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழிமுறை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, உலகின் முன்னணி இணைய சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய இராச்சியத்தின் இணையத்தள கண்காணிப்பு அமைப்புடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதோடு ‘சேவ் த சில்ரன் அமைப்பு இதற்கான நிதியுதவியினை வழங்கியுள்ளது. இதேவேளை சிறுவர் பாதுகாப்பு குறித்து இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் கவனம் செலுத்தாமல் இருந்தமை மிகப்பெரிய பிரச்சினைக்கு அடித்தளமாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாக இருந்தாலும் சிறுவர் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் தாம் முன்னெடுக்கப்போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.இது இலங்கை சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கான முக்கியமானதொரு முன்னெடுப்பாகும் என யுனிசெப் அமைப்பு ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.சிறுவர்கள் சமூகச் சக்கரத்தில் முக்கியத்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். எனவே இவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து நேர்வழியில் செல்லவைப்பது சகலரினதும் மிக முக்கிய பணியாகும் என்பதோடு இவர்களை புறந்தள்ளுவதாலோ அல்லது உரிமைகளை மழுங்கடிக்கச் செய்வதாலோ பாதக விளைவுகள் பலவற்றுக்கும் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளா்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவேந்தல் நிகழ்வு

04 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளா்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவேந்தல் நிகழ்வுபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காகத் தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

ஊடகவியலாளரான ‘தராக்கி’ என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் ‘உதயன்’ பத்திரிகையின் அலுவலக செய்தியாளராகக் கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

திருமலையில் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்

01 திருமலையில் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட தலைவர் ச.குகதாசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

02 திருமலையில் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன்,எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை | ஆசிரியர் தலையங்கம் | lakku Weekly ePaper 284

சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை | ஆசிரியர் தலையங்கம் | lakku Weekly ePaper 284

ஈழத்தமிழர்களின் இறைமையையும் உள்ளடக்கிய நாடு என்று பிரித்தானிய அரசு சிறிலங்காவுக்கு அளித்த அங்கீகாரமே இன்றுவரை சிறிலங்காவை உலகநாடுகள் நாடு என்ற நிலைப்பாட்டில் தங்களோடு இணைத்து தங்களின் இறைமையைப் பாதுகாக்கத் சிறிலங்காவையும் சிறிலங்காவின் இறைiமையைப் பாதுகாக்கத் தங்களையும் முன்னிலைப்படுத்திச் செயற்பட்டு வருகின்றன. இதனாலேயே ஈழத்தமிழர் தேசியப்பிரச்சனை என்பது ஈழத்தமிழர்களின் இறைமையை மீள் உறுதிப்படுத்தி அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதனை இலக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழரின் காலனித் துவகாலப் பிரச்சினயைத் தீர்ப்பதில் காட்டும் காலதாமதத்தால், 18.05.2009 இல் உச்சம் பெற்ற 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனஅழிப்புச் செய்த சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரின் பின்னர் இதுவரை முல்லைத் தீவு மாவட்டத்தின் ஐந்து இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 74.24 வீதமான நிலப்பரப்பு சிறிலங்காவின் வனத்துறையால் படைபலத்துணையுடன் அபகரிக்கப்பட்டுள்ளது.
2009க்கு முன்னர் அடர்ந்த காடுகளாக இருந்த 36.72 வீதமான காணிகள் இரண்டு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து ஆறு ஏக்கர் காணிதான் வனத்துறையிடம் இருந்தது. பின்னர் அபகரிக்கப்பட்ட காணிகளில் 28500 ஏக்கர் காணியில் வெலிஓயா என்று மணலாறு என்ற தொன்மை மிகு தமிழ்ப்பெயரையே சிங்களப் பெயராக மாற்றிய சிங்களக் குடியேற்றத்தை நிறுவி இன்று அந்த வெலிஓயா என்று சிறிலங்காவின் படைபல ஆக்கிரமிப்புக் குடியேற்றத்திற்கு மேலும் மேலும் காணிகளை இணைக்கும் ஆக்கிரமிப்பைச் சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான சிங்கள பௌத்த அரசாங்கம் செய்து 2009க்குப் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் ஏக்கர் காணிகளை அபகரித்து அதனைச் சிங்களவர்களுக்கான தனியார் நிரந்தரக் குடியேற்றக் காணிகளாக இன்று காணி உறுதிப்பத்திரத்தை அங்கு குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. நீர்நிலைகளுடன் சேர்ந்த வளமான நந்திக்கடல் அருகில் உள்ள 69401 ஏக்கர் நிலத்தில் 29401 ஏக்கர் நிலம் இன்று வனத்துறையினால் தமதாகப் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன், பொக்கணை, மத்தளன், வலயர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் 600 ஏக்கர் மக்களின் விவசாயக் காணிகள் வனத்துறையால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டமே சிறிலங்காவால் சிங்கள மயப்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்படுகையில் அங்கு வாழும் ஈழத்தமிழ் மக்கள் எங்கு செல்வது என்ற நியாயமான கேள்வியை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மாதமான மே மாதத்தை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் செய்ய ஆயத்தமாகுகின்ற நேரத்தில் எழுப்பியுள்ளார்.
மேலும் கடந்தவாரம் 24ம் திகதி சிறிலங்காவுக்கு உமாஓயாப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் தொடக்கி வைக்க சிறிலங்காவுக்கு வருகைதந்த ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகையும் உறுதி செய்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது உரையில் “நமது இருநாடுகளுக்கும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், மற்றும் ஒற்றுமை என்பவற்றை உறுதி செய்வதே இங்கு முக்கியமான விடயம் என்று நான் நம்புகின்றேன். மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதை விட நமது இருநாடுகளுக்கும் இடையில் உள்ள மக்களின் விருப்பமும் உறுதியும் முக்கியமானது என்றே கூறவேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்களே ஈரான் இஸ்லாமியக் குடியரசிடம் உள்ள நவீன தொழில்நுட்ப அறிவை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளோம். மேலும் சிறிலங்காவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறிச் செல்ல ஈரான் தயாராக இருப்பதை நான் உறுதியளிக்கின்றேள்” என வெளிப்படையாகவே பேசி ஈரானின் இறைமைக்குச் சிறிலங்கா பங்காளியாகவும் சிறிலங்காவின் இறைமைக்கு ஈரான் பங்காளியாகவும் பயணிக்கும் என்பதை இஸ்ரேயலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவுக்கும் மேற்குலக அணிக்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சிறிலங்கா ஈரான் உடன் ஐந்து உடன்படிக்கைளைச் செய்துள்ளமையும் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நாம் அனைவரும் உலகளாவிய தெற்கு நாடுகள் என எங்கள் அடையாளத்தையும் சுதந்திரதிதையும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இத்தகைய பங்காளித் திட்டங்கள் முக்கியம் எனப் பகிரங்கமாகவே அறிவித்துச் சிறிலங்காவை இந்தியத்துணைக்கண்டத்தின் தொடர்நிலப்பரப்பு என்னும் புவியியல் தன்மையில் இருந்தும் இலங்கைத் தீவில் உள்ள அனைத்து மக்களுடனும் இந்தியா பண்பாட்டு-வர்த்தக-வரலாற்றுத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட தொகுதி என்ற இயல்புத் தன்மையில் இருந்தும் விலத்தி உலகின் தெற்கு நாடுகளுடன் அடையாளப்படுத்தியுள்ளமை சிறிலங்காவின் இந்திய விலகல் அரசியல் நிலைப்பாடடை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்தியாவோ தானும் நாலு பில்லியன் நிதி உதவியளித்தும் அனைத்துலக நாணயநிதியத்துக்கும் உலக வங்கிக்கும் வெளிப்படையாகவே சிறிலங்காவுக்குக் கடன் கொடுக்கப் பரிந்துரையளித்தும் சிறிலங்கா சீனாவிடம் கடன் பெறுவதை மட்டுப்படுத்தும் தந்திரோபாயத்தை முன்னெடுத்து வருகிறது. ஆயினும் சிறிலங்கா சீனாவுடனான தனது நட்பை மேலும் மேலும் ஆழப்படுத்தி வருவதுதான் நடைமுறை எதார்த்தமாக உள்ளது. சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பினைச் செய்யும் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்துலக விவகாரங்களின் திணைக்களத்தின் பிரதிநிதியும், அமைச்சருமான ஷன்கயன் அவர்கள் சிறிலங்காவுக்கு வருகை தந்து ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரை மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்காவையும் சந்தித்து சிறிலங்காவின் உள்நாட்டு வெளிநாட்டு செல்நெறிகள் சீனாவால் தொடர்ந்து மேலாண்மை செய்யப்படுமென்பதை இந்தியாவுக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகநாடுகளுக்கும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் இதுவரை யாருமே சிறிலங்காவில் முதலிடாத மிகப்பெரிய முதலீடான 4.5 பில்லியன் டொலரை சினோபெக்கின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் முதலிடவுள்ளது.
இந்த மாற்றங்களின் எதிரொலியாக உலகநாடுகளில் மனித உரிமைகள் குறித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில் 1983 முதல் 2009 வரையான காலங்களிலும் அதேபோல் ஜே வி பி கிளர்ச்சிக்காலமான 1988-1989 இலும் மனித உரிமைகள் வன்முறைப்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லையெனத் தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா ஈழத்தமிழர்களைச் சிறிலங்காவின் ஒரு சமுகமாகப் பார்த்து அவர்களின் வரலாற்று இருப்பான தேசமக்கள் என்பதை மாற்றியமைத்து வருவதையும் இந்தியா தொடர்ந்தும் இலங்கையில் தமிழர்களின் கண்ணியமான வாழ்வினை உறுதிப்படுத்தல் என்கிற தனது கொள்கையுடன் கூடிய சிறிலங்காவுக்கான முதலீடுகள் கடன்கள் நிதிஉதவிகள் வழி ஈழத்தமிழர்களின் இறைமையைத் தொடர்ந்தும் மறுத்து வருவதையும் ஈழத்தமிழர்கள் உணர வேண்டிய நேரம் என்பதை இலக்கு இவ்வாரத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகிறது. இந்த அடிப்படை அரசியல் சிந்தனைகளில் புலம்பெயர் தமிழர்கள் மாற்றத்தைக் கொண்டுவர ஒன்று சேர்ந்து உழைக்காவிட்டால் அமெரிக்கா இஸ்ரேயலுக்கும் உக்ரேனுக்கும் தைவானுக்கும் ஆயுதவழங்கலுக்கான நிதியினை வெளிப்படையாகவே வழங்கியும் பிரித்தானியா தனது பாதுகாப்புச் செலவினத்துக்கான தொகையை 2.5 ஆக உயர்த்தியும் மூன்றாவது யுத்த உலகில் அடியெடுத்து வைத்து வரும் சூழலில் ஈழத்தமிழர்கள் நிலமும் இறைமையும் இருப்பும் இழக்கப்படும் பேரபாயம் ஏற்படும் என்பதையும் இலக்கு ஈழத்தமிழர்களுக்கு எச்சரிப்பாக எடுத்துரைக்க விரும்புகிறது.

Tamil News

 

Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 284-ஏப்ரல் 27, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 284-ஏப்ரல் 27, 2024

Ilakku Weekly ePaper 284

Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 284-ஏப்ரல் 27, 2024

Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 283-ஏப்ரல் 27, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இளையோர் உலகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை – ஆசிரியர் தலையங்கம்
  • இலங்கை வந்த ஈரான் அதிபர்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் அகிலன்
    பொறுத்திருக்கக் கேட்பவர்கள் “டீல்” போட காத்திருப்பவர்கள் ஆய்வாளர் நிலாந்தன் செவ்வி
  • யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் அனைவரும் ஒன்றிணையவேண்டும் – மட்டு.நகரான்
  • நிலக் கூட்டுரிமை கோரிக்கையை இல்லாது செய்வதற்கான உத்தி – பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் (இறுதிப்பகுதி) – எழில்
  • பறிபோகும் சுதந்திர வாழ்க்கை – துரைசாமி நடராஜா
  • இளையோரே சிகரம் நீங்கள்- மழலை முத்துக்களின் மதிப்புணர்ந்து கடமையாற்றுங்கள் – கவிதா ஆல்பர்ட்
  • கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் – தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
  • உலகின் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பின் தோல்வி – வேல்ஸில் இருந்து அருஸ்
  • ஹிஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அடுத்து நடக்கப் போவது என்ன? (இறுதிப்பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

 

 

 

 

 

 

காணாமல் போன உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு

IMG 20240427 WA0009 காணாமல் போன உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு
காணாணல்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் காணாமல் போனோர்களின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரனை இன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அது தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம்,கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும்,மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் 22 என விசாரனைகளுக்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டன. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம் பெற்றன.

இதில் காணாமல் போன அலுவலக தவிசாளர்,மன்னார், மட்டக்களப்பு,யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள்,தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரனைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா

ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது வேதனையை வெளிப்படுத்தும் போது அவரை விமர்சிக்கின்றனர். அவ்வாறு நடக்கக் கூடாது. இதில் நீதி கிடைக்க வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

பயங்கரவாதிகளை அவ்வாறான ஆணைக்குழுக்களால் அடையாளம் காண முடியாது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கே அதனை செய்ய வேண்டும். இது தொடர்பான பொறிமுறைகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கே தெரியும். அதன்படி அவர்களை அதற்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் பிரதான நபரான சஹரானுக்கு யார் சம்பளம் கொடுத்து வளர்த்துள்ளனர்.

அவரை உருவாக்கியவர்கள் யார்? சலே என்பவரே அவரை வளர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே சஹரான் தொடர்பில் தகவல்கள் வெளியாகிய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது. தமது கடமைகளை தவறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

நாடு இந்த நிலைமைக்கு வர காரணமானவர்கள் யார்? பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அது தொடர்பில் தகவல்கள் தெரிந்தும் அதனை தடுக்காது தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். எவ்வாறாயினும் எனக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால் அந்த நபரை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து தண்டனையை கொடுத்தே தீருவேன்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா்.

வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் அகழ்வுப் பணியொன்று இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்கத்துடன் இந்த அகழ்வுப் பணி நடக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் மூத்த பேராசிரியர்கள், தொல்லியல் சார்ந்தவர்கள் இருக்கின்ற போது அவர்கள் எவரையும் இந்தக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தாமல் இரகசியமான முறையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன . யுனெஸ்கோவின் கண்காணிப்பிலேயே இந்தப் பணிகள் நடக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். இல்லையென்றால் குரூந்தூர் மலையை போன்று வரலாறு திரிபுபடுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது.

இதனால் யுனெஸ்கோவின் கண்காணிப்பில் அகழ்வுப்பணி நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார்.

ஈஸ்டா் தாக்குதலின் பின்னணியில் இந்திய பாதுகாப்பு ஆலோசகா் – விமல் வீரவன்ச பரபரப்புத் தகவல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மைத் தன்மை என்னவெனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தியத் தேர்தலில் அது மோடிக்கு கிறிஸ்தவர்களின் வாக்குகளை பாரியளவில் பெற்றுக் கொடுத்தது எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது. குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம்
வழங்கியுள்ளார்.

குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவால் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று, அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்கப் போவதில்லை என்று ஆவேசமாக உரையாற்றினார்.

அக் காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டன. இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றார்.தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இந்தியத் தேர்தலில் தான் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன. காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது. இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலாக உச்ச
மடைந்தது” என்றார்.

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம்; ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு

IMG 20240426 WA0033 கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம்; ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்புகிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும்,தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டடத்தை நிர்மாணித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

IMG 20240426 WA0035 கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம்; ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்புஅக்கோரிக்கையின் பிரகாரம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு, கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் எவ்வித இன்னல்களும் இன்றி தங்களது கடமைகளை திறம்பட செய்ய அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி ஆளுநரால் இன்று திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டதுடன், அரச உத்தியோகஸ்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

IMG 20240426 WA0038 கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம்; ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்புஅரச உத்தியோகத்தர்கள் வேகமாக மக்கள் பணியை முன்னெடுக்க இக்கட்டிடத்தை நிர்மாணித்து கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றிகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.