Home Blog Page 1882

கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், தமிழ் மக்கள் மீதான பேரினவாத அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை எதிர்ப்புகள் இன்றி இலகுவாக முன்னெடுத்துச் செல்ல இவர்கள் இன்று மீண்டும் கையில் எடுத்துள்ள ஆயுதம் ‘பிரித்து ஆள்தல்’ என்பதாகும். எமது கைகளாலே எம்மை குத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரச தரப்பு மிகக் கச்சிதமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இளைஞர்கள் இந்த நாட்டில் தமிழர்களுக்கு விடுதலை கோரி ஆயுதப் போராட்டத்தில் உணர்வு ரீதியாக குதித்த போது, அவர்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி போராட்டங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகள் முன்னெடுத்திருந்தன.

அந்த வகையில் தொடர்ச்சியான விடுதலைப் போராட்டம் ஊடாக தமிழர்களின் வீரத்தினையும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையினையும் உலகின் பக்கம் கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் விடயத்திலும் பல வகையான பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

இவ்வகையான பெரும்பாலான முயற்சிகள் பயனற்று போனபோதும், (மாத்தையாவை பயன்படுத்தி இந்தியா விடுதலைப் போராட்டத்தை அழிக்க மேற்கொண்ட முயற்சி இதில் குறிப்பிடத்தக்கது) கருணாவை கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினை பலவீனப்படுத்தும் முயற்சியில் சிங்கள பேரினவாதம் ஓரளவு வெற்றி பெற்றதென்றே கூறவேண்டும்.

ஆயினும் ‘கிழக்கை பிரித்தெடுத்தல்‘ என்ற அவர்களின் குறிக்கோளை அவர்களால் எட்ட முடியவில்லை. பல்வேறு பிளவுகள் பிரித்தாளும் தந்திரங்களை கிழக்கில் பேரினவாதிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போதிலும் இங்குள்ள தமிழ் மக்களின் ஒன்றுபட்ட தேசியம் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை.

விடுதலைப்புலிகளின் காலத்திற்கு பின்னர் கிழக்கில் பிள்ளையான், கருணா ஆகியோரை பயன்படுத்தி அரசியல் செய்து தமது எண்ணங்களை நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று பேரினவாதம் கிழக்கில் தமிழ் மக்களினால் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகளையும் தனிப்பட்ட சுயதேவையுடையவர்களையும் இணைத்து தமிழர்களின் கூட்டணியென்ற பெயரில் பல்வேறு குழுக்களை உருவாக்கி அவற்றை தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை உறுதி செய்வதில் மட்டக்களப்பு மாவட்டம் காத்திரமான பங்கை வகித்து வருகிறது. இங்கு அதிகளவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாணசபை உறுப்பினர்களை தமிழ் தேசியம் சார்ந்து தமிழ் மக்கள் தெரிவு செய்து வருகின்றனர். இந்த நிலைமையை சீர்குலைக்கும் நோக்குடனே இன்று மட்டக்களப்பில் பல்வேறு ‘அரசியல் குழுக்கள்’ தோற்றுவிக்கப்படுகின்றன.

அதற்காக கோடிக்கணக்கில் பணமும் இறைக்கப்படுவதகாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெற்ற பியசேன, வியாழேந்திரன் போன்றவர்கள் பேரம் பேசலில் சோரம் போன வரலாறு நாம் அறிந்ததே.

எதிர்வரும் சித்திரை மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் தேசியத்திற்கு எதிரான பல்வேறு குழுக்களை ‘தமிழர்’ என்ற அடையாளத்துடன் களமிறக்கும் முனைப்பு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பில் இருந்து ‘கிழக்கு தமிழர் ஒன்றியம்’ என்னும் பெயரில் ஒரு பகுதியினரும் ‘கிழக்கு தமிழர் கூட்டணி’ என்ற வகையில் ஒரு பகுதியினரும் தங்களுக்கு ஏற்றாற்போல் கூட்டணிகளை ஒன்று சேர்க்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.IMG 2e69b5790e1bd2b05d9c809766466d98 V கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஊடாக பிள்ளையான் கருணாவினை ஒருங்கிணைத்து ஒரு அணியாக களமிறங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், கிழக்கு தமிழர் கூட்டணி ஊடாக வியாழேந்திரன், அருண் தம்பிமுத்து போன்ற, தமிழர்களினால் புறக்கணிப்பட்டு விரட்டப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான கூட்டணிகளின் பின்னால் பேரிவான கட்சிகள் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்த உண்மையாகவுள்ளது.

இவற்றிற்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இக்கூட்டணிகளில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன. தமிழ் தேசிய கொள்கைக்கு அப்பால் செயற்படும் எந்த அமைப்புகளுடனும் கூட்டணிகளை ஏற்படுத்த முடியாது என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கிழக்கு தமிழர் ஒன்றியம், கிழக்கு தமிழர் கூட்டணி ஆகிய இரு அமைப்புகளும் தற்போதைய ஜனாதிபதிக்கு சார்பான கள பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த அமைப்புகளாகும். இந்த அமைப்புகள் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென அறிவித்திருந்த போதிலும், தேர்தல் நெருங்கி வரும் காலத்தில் அவற்றின் முகத்திரைகள் விலக ஆரம்பித்துள்ளன. அதில் உள்ளவர்கள் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர்களாக மாறியுள்ளனர்.

மறுமுனையில் பட்டிருப்பு தொகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தியினால் ‘இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி’ எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று இந்த கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய ஆட்சியாளர்களின் தொடர்புகளுடன் முன்னாள் பிரதியமைச்சரினால் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.625.0.560.320.160.600.053.800.700.160.90 கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்

நில அபகரிப்பு, காணாமல் போனோர் பிரச்சினை, இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகள் என பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பலத்தினை சிதைப்பதன் மூலம் கிழக்கில் உள்ள தமிழர்களின் குரல் வளையினை நசக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறாக கூட்டமைப்புகளை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள வாக்கு பலத்தினை சிதைத்து தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியும் என அரசு எண்ணுகின்றது.

மேலும் அண்மையில் மட்டு. ஊடக அமையத்தில் ஏழு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக செயற்படும் ஊடகவியலாளர்களின் குரல்வளையினை நசுக்குதல் உட்பட கிழக்கின் நிலைமைகள் தொடர்பில் வெளிப்படுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த செயற்பாடுள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் இருப்பு இங்கு உறுதி செய்யப்பட வேண்டுமானால், தமிழர் தேசிய அரசியலில் ஈடுபடும் கட்சிகள் தம்மை சுயபரிசோதனைக்குட்படுத்திக் கொண்டு மக்களின் தமிழ் தேசிய நலனுக்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட வேண்டும். அவை தமக்குள் ஒரு குறைந்தபட்ச பொது இணக்கப்பாட்டையாவது ஏற்படுத்தி பயணிக்க வேண்டும்.

வடக்கில் உள்ள அரசியல் புவிசார் நிலைமைகள் வேறு. இங்குள்ள நிலைமைகள் வேறு. இந்த வகையில் இங்குள்ள தமிழ் தேசிய அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது தவிர்க்க முடியாத காலத் தேவையாகும். அவ்வாறு இல்லையாயின் கிழக்கில் தமிழரின் இருப்பே இல்லை என்ற நிலை ஏற்பட நெடுநாளாகாது.

 

சவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இனஅழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக் கட்டப் போரில்காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமைஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின்அறிவிப்பு உறவினர் மற்றும் நீதிக்காகப் போராடுவோர் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. இறுதிக் கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா.பெருமன்றம்வரை சென்று தமிழ்ச்சமூகம் போராடி வருகிறநிலையில், இதுகுறித்து வாய் திறக்காது கள்ளமௌனம்சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள்இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறைஒப்புக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் நீதிக்காகப் போராடுபவர்கள்,ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்ட உறவினர்கள் எந்தவிதஎதிர்ப்பு தெரிவித்தாலும் நசுக்கப்படும் தற்போதைய நிலைமைஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பு மோசமானநிலைக்கு செல்லும். எம் மக்கள்கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு பெரும் பாதிப்புக்குஉள்ளாக்காப்படுவார்கள். போராடும் மக்களை அச்சுறுத்திசெயல் இழக்கச் செய்வதுடன் குற்றவியல் நீதி விசாரணைக்குதேவைப்படும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும்.எனவே இலங்கைக்கான சர்வதேச நீதி பொறிமுறைஉருவாக்கப்பட்டு குற்றவியல் நீதி விசாரணை செயல்படத்தொடங்கினாலும் கூட பூரணமான சாட்சியங்கள் மற்றும்ஆதாரங்கள் இன்றி நீதியை வெளிக் கொண்டு வருவதுஅசாத்தியமாக்கப்படும்.

மேற்கண்ட விடயங்கள் மூலம் தமிழர்களால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுகின்ற சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைக்கான வழித்தடங்களை ஆராய்ந்து பிரித்தானியதமிழர் பேரவை (BTF ) மற்றும் புலம்பெயர் சகோதர அமைப்புகள் தொடர்ந்தும் வலியுறுத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என்ற சிறிலங்காஜனாதிபதியின் கூற்றானது தமிழர்களுக்கு வழங்க வேண்டிய நீதி சிறிலங்காவிடமிருந்து வரப் போவது இல்லை என்பதனைஉலக நாடுகளுக்கு எடுத்து சென்று நீதிக்கானமுன்னெடுப்புகளை வலுப்படுத்த வேண்டியது தமிழ் மக்களின்கடமை.

அந்த வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால்முன்னெடுத்துச் செல்லப்படுள்ள வேலைத் திட்டங்கள்:

1) பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும்பிரித்தானியாவில் முடிவெடுக்கும் அதிகார மட்டங்கள்என்பனவற்றோடு தொடர் சந்திப்புகள் நடைபெறுகின்றன.

2) அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் USTPAC, BTF, CTCஅமைப்புகளின் பிரதிநிதிகளின் சந்திப்பு இடம்பெற்றதுடன்காத்திரமான நடவடிக்கைகளை பட்டியலிட்டு உடனடி மற்றும்எதிர்கால நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறுகோரிக்கை விடப்பட்டது.

3) தென் ஆப்பிரிக்காவின் வெளிவிவகார அமைச்சில் தமிழ்மக்களின் நீதிக் கோரிக்கை மற்றும் அரசியல் அபிலாசைகளைஅடையும் வழிவகைகைகள் குறித்து ஆராயப்பட்டது.

4) இந்திய வெளிவிவகார அதிகாரிகள் மட்ட சந்திப்புகள்இடம்பெற்றதுடன் தமிழ்மக்களுக்கான ஆதரவு நிலையில் உள்ளவர்கள் உடனான சந்திப்புகள் மற்றும் கருத்துக்பரிமாற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. தமிழ்மக்களுக்கான நீதி சம்பந்தமாக இந்தியாவின் ஆதரவு கோரப்பட்டதுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளது.

5) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் மார்ச் மாத அறிக்கை வெளியிடப்பட உள்ளநிலையில் தமிழ் மக்கள் கோரும் முக்கியமான அம்சங்களைஉள்ளடக்குமாறு ATC, BTF, CTC மற்றும் USTPAC இணைந்ததகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

6) ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகளுடன் தகவல்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

7) மனித உரிமை தொடர்பான கருத்துருவாக்கங்களைமேற்கொண்டு சர்வதேச தளங்களை தயார்படுத்தும் சர்வதேசஅரச சார்பற்ற நிறுவனங்களை (INGO) சந்தித்து அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும்சிறிலங்காவின் தற்போதைய அரசு எடுக்கக் கூடிய எதிர்வினைகள் என்பன ஆராயப்பட்டதுடன் சிறிலங்கா அரசிற்கெதிரான புதிய முன்னெடுப்புகளை பிரேரிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

வழமைபோன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள்மற்றும் இன அழிப்பை புரிந்து கொண்டுள்ள அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விபரங்கள் கொடுக்கப்பட்டு எதிர்வரும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

மதிநுட்பமும் செயல்திறமையும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள்மேலும் இப் பெரும் பணியில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

ரெலோவின் விழாவில் குழப்பம்! நிலைமையை கட்டுப்படுத்திய பொலிஸார்

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோவின் 50 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்றக் காலை ஆரம்பமான நிகழ்வுகள் பகல் முழுவதும் சுமூகமாக இடம்பெற்ற நிலையில் மாலையில் குழப்பம் இடம்பெற்றது.
.
ரெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மண்டப வாயிலுக்குவந்த சில இளைஞர்கள், ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டனர். இதனையடுத்து ரெலோ உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது அங்கு வந்த இளைஞர்கள், ரெலோவின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் குகனின் படத்தை ஏன் முன்னால் காட்சிப்படுத்தவில்லை எனவும், யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத் தில் இரு இளைஞர்களைப் புளொட் அமைப்பினர் சுட்டுக் கொன்றிருந்தனர், தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தனைக் கூப்பிட்டு விழா செய்கிறீர்களா எனவும் தர்க்கம் விளைவித்தனர்.

அங்கு ரெலோஉறுப்பினர்களும் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸாரின் துணையுடன் நிலைமையைக் கட்டுப்படுத்தினார். அங்கு நடந்த முரண்பாட்டில் தாக்குதலுக்கு இலக்கானார் எனத் தெரிவித்து ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் ரெலோவால் வவுனியா பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றபோது அங்கு நின்ற அரச அதிகாரி ஒருவர் மாவை சேனாதிராசாவைப் பார்த்து “இவர் ஏன் இங்கு வந்தவர்? யார் இவரைக் கூப்பிட்டது?” எனச் சத்தம் எழுப்பிய நிலையில் ஏற்பாட்டாளர்கள் அவரைச் சமரசப்படுத்தினார்கள்.

‘அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)

‘அபிவிருத்தி என்றபெயரில் அரசாங்கத்திடம் சென்று சரணடைந்து விட்டோமானால், அதற்குப் பின்னர் அதிலிருந்து மீளமுடியாது. 15, 20 வருடங்களின் பின்னர், இப்போது இலங்கையில் பறங்கியரை எப்படி தேடிக் கண்டு பிடிக்கின்றோமோ அவ்வாறே தமிழர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்’ என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தற்போது தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைவராகவும் இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்

தமது கட்சி தொடர்பாகவும், தமிழர் பாரம்பரியம் பற்றியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் தமது  நிலைப்பாட்டை விளக்கி   இலக்கு இணையத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

கேள்வி –மக்களின் பல்வேறு விமர்சனத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள உங்கள் மாற்று அரசியல் தலைமை பற்றியும் அதன் அவசியம் பற்றி கூறுங்கள்?

உச்ச நீதிமன்றத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர் சுமார் பத்து வருடங்கள் மிகவும் சந்தோசமாக, மகிழ்வாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த என்னை திடீரென வடமாகாண முதலமைச்சராக மாற்றி விட்டார்கள். அப்போது நான் அந்தப் பதவியையும் அதன் பொறுப்புக்களையும் எவ்வாறு ஏற்று நடத்தினேனோ அதேபோன்று தான் புதிதாக வந்திருக்கும் எனது பதவியை ஏற்று நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரையில் இது எனது கடமையின் ஒரு அங்கம். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே என்ற அடிப்படையில் எனது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருவதால், வருகின்ற கடமைகளை செய்து கொண்டே போவேன்.

கேள்வி –விடுதலைப் புலிகள் இயக்க காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும், உங்களால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் தலைமைகளின் கொள்கைகளுக்கும் எவ்வாறான வேறுபாடு இருக்கின்றது?

விடுதலைப் புலிகள் காலத்தில் கட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டது அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அல்ல. சனநாயக ரீதியாக அவர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கொண்டு நடத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் அது நடைபெற்றது.இவர்களை ஒன்று சேர்த்தது சனநாயக ரீதியாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும் என்பதற்காகவே.sambanthan ltte 07 'அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)

ஆனால் 2009இன் பிற்பாடு எங்களுக்குக் கிடைத்த தலைமைத்துவம் கொள்கை ரீதியான எவற்றை தேசியத் தலைவர் எதிர்பார்த்தாரோ அவற்றை செய்யாது, அசட்டை செய்து வருகிறது. சனநாயக ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எந்தெந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் முறையாக சுயநலமின்றி  எடுத்துச் செல்வதே எமது கடமை.

கேள்வி – புதிதாக உருவாக்கப்பட்ட உங்கள் கூட்டணியில் ஒரு உறுப்பினரையேனும் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியாது என்று சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். அவரின் கருத்து தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

எங்களைப் பற்றி அவர் கூறிய பல விடயங்கள் நடைபெறவில்லை. அவர் கூறியது சரியாக வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி –சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம் பலத்திற் கிடையில் முறுகல் நிலை தொடர்ச்சியாக காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முறுகல் நிலையை உங்களால் ஏன் தீர்க்க முடியவில்லை? பிரச்சினையைத் தீர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஏன் உங்கள் கட்சியில் இணைக்க முன்வரவில்லை?

இதை நீங்கள் கஜேந்திரகுமாரிடம் தான் கேட்க வேண்டும். இதற்கு நான் பதில் கூற முடியாது. ஏனெனில் ஒருகாலத்தில் தமிழ் மக்கள் பேரவையில் இவர்கள் இருவரும் எனக்கு பக்கத்தில் இருந்தார்கள். நாங்கள் கருத்தொருமித்து கொள்கை ரீதியாக ஒருமித்து செயற்பட்டோம். ஒருமித்து சில ஆவணங்களைத் தயாரித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்தோம். அப்போதெல்லாம் சுரேஷ் அண்ணா என்று கஜேந்திரகுமார் கூறுவார்.suresh 'அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)

ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை விடுங்கள் நாங்கள் வருகின்றோம் என்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவரை விலக்கி ஒருவரை சேர்த்துக் கொள்ள முடியாது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோம். அதேபோல் சேர்ந்து இயங்குவதானால், இப்போதும் அவரை ஏற்றுக் கொள்ள முடியும். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.

கேள்வி –  போருக்கு பிந்திய காலப் பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் மக்கள் அன்றாட வாழ்வாதார தேவைக்காவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மக்களின் போராட்டக் குணமும் உரிமைக்கான தாகமும் எவ்வாறு சாத்தியப்படும் என நினைக்கிறீர்கள்?

அதற்கு நாங்கள் எங்கள் புலம்பெயர் மக்களின் ஆதரவைப் பெற்று எல்லாவற்றையும் செய்து கொண்டு வந்திருக்கின்றோம். இப்பொழுதும் செய்கின்றோம். அந்த ரீதியில் எங்கள் மக்களின் பொருளாதாரம் மிகவும் வறுமைக் கோட்டிற்குள் இருப்பதன் காரணமாக அவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனித்தனியாக அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தக் கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கு எங்கள் புலம்பெயர் மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்த அடிப்படையில் நாங்கள் அரசாங்கத்திடம் சென்று சரணடைந்து விட்டோமானால், அதற்குப் பின்னர் அதிலிருந்து மீளமுடியாது. 15, 20 வருடங்களின் பின்னர், இப்போது இலங்கையில் பறங்கியரை எப்படி தேடிக் கண்டு பிடிக்கின்றோமோ அவ்வாறே தமிழர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

இங்கு எல்லாமே சிங்களமயமாகி பௌத்தமயமாகி விடும். ஏனெனில் நீங்கள் பொருளாதார ரீதியாக உதவி பெறுமிடத்து, அவர்கள் பொருளாதாரத்தையும் தந்து கொண்டு தங்கள் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். கிளிநொச்சியில் பார்த்தால் சிங்கள பௌத்த சின்னங்கள் இப்போது இருக்கின்றது. எமது பகுதியில் ஒரு இலட்சம் வரையான இராணுவத்தினர் இருக்கின்றனர்.

எனவே இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டே நடவடிக்கையில் இறங்க வேண்டும். பொருளாதார ரீதியாக இராணுவத்தினர்கூட எமக்கு நன்மையளிப்பதாக கூறுகின்றார்கள். இவற்றிற்குள் நீங்கள் அகப்பட்டுக் கொண்டால், அதிலிருந்து மீள முடியாத ஒரு நிலை ஏற்படும். எனவேதான் நாங்கள் பாராளுமன்றத்தில் ஒருமித்து எங்கள் நடவடிக்கைகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 5 வருடகாலத்தில் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.ஒரேயொரு விடயத்தை அவர்கள் கூறியிருக்கலாம்.

அது என்னவெனின் எங்கள் அரசியல் கைதிகளை விடுவியுங்கள். அல்லாது போனால் அடுத்த முறை பாதீட்டில்(பட்ஜெட்) நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று கூறியிருக்கலாம். அப்படி கூறியிருந்தால் அது நடைபெற்றிருக்கும். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.

கேள்வி – அண்மையில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் சைவத் தமிழர்கள் என்ற உங்களின் கருத்து தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கடந்த காலத்தில் உங்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த வடமாகாண ஆட்சிக் காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புராதன சின்னங்கள் மற்றும் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை பாதுகாக்க எவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டன?

எங்களுக்கு அவ்வாறான உரிமை தரப்படவில்லை. இவை தொடர்பான சகல உரிமைகளும் மத்திய அரசாங்கத்திற்குத்தான் இருக்கின்றது. 13ஆம் திருத்தச் சட்டத்திற்கமைவாக அது முழுமையாக மத்திய அரசிற்குரியது. எந்த வகையிலும் நாங்கள் அவற்றை மேற்கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். பௌத்தம் இலங்கைக்கு வரும் போது அவர்களை வரவேற்றது தமிழ் சைவ அரசர்கள். இது சரித்திர ரீதியான உண்மை. அப்போது சிங்கள மொழி எந்த இடத்திலும் பேசவில்லை. சிங்களவர்கள் இருக்கவில்லை.

1300 அல்லது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது. ஆகவே நான் சரித்திர உண்மைகளைக் கூறுகின்றேன். இதனால் பிரச்சினைகள் ஏற்படுகின்றதென்றால், மக்களுக்கு யார் இவற்றை எடுத்துக் கூறுவது?

இவ்வளவு நாளும் இவற்றை கூறாதபடியால்தான் சிங்கள மக்கள் எங்களை 10ஆம் நூற்றாண்டில் வந்த கள்ளத்தோணிகள் என்று கூறுகின்றார்கள். அது தவறானது. 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் தமிழர்கள் இங்கு வந்தது உண்மை. அதற்கு முன்னர் பாண்டியர்கள், பல்லவர்கள் என்று பலர் இங்கு வந்துள்ளனர்.
ஆதிக்குடிகள் தமிழ் மக்கள்.6.15.03 'அபிவிருத்தி என்ற பெயரில் சரணடைந்தால் விரைவில் தமிழரை தேடித் கண்டுபிடிக்கவேண்டிய நிலை ஏற்படும்'(நேர்காணல்)

அண்மையில் மட்டக்களப்பில் கி.மு 300 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்ட பல கண்டெடுப்புக்களிலிருந்து தமிழ் அந்தக் காலத்திலிருந்தது. சைவம் அந்தக் காலத்திலிருந்தது என்பதற்கு அடையாளம் இருக்கின்றது.

கேள்வி – ஒரு நீதியரசர் என்ற முறையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய ஒரு கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. குறித்த ஒரு தினத்தில், நேரத்தில், குறித்தவர்களின் முன்னிலையில் , குறித்த ஒருவர் முன்னிலையில் இவர்கள் பாரப்படுத்தப்பட்டனர். அதற்கு சாட்சிகள் இருக்கின்றன. அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று அந்த இடத்திலிருந்து விசாரணை நடத்தி எங்களுக்கு சொல்ல வேண்டும். அவர்கள் நிலத்தின் அடியில் இருக்கின்றார்கள் என்று கூறமுடியாது. அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறமுடியாது. குறித்த ஒரு இடத்தில் அவர்களை ஒப்படைத்தோம். அந்த இடத்திலிருந்து அவர்களை என்ன செய்தீர்கள்? இதற்குரிய பதிலை நீங்கள் தரவேண்டும்.

இது தொடர்பான குற்றவியல் விசாரணையை பாரபட்சம் இல்லாமல் ஒரு சர்வதேச ரீதியாக நடத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. காணாமல் போனோர் அமைப்புகளின் செயற்பாடுகளில் ஒரு பிரயோசனமும் இல்லை. அத்துடன் குற்றவாளி என கண்டால்கூட ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு இழுத்தடித்த வண்ணம் இருப்பார்கள். ஆகவே ஒன்றுமே நடக்காது. சர்வதேச ரீதியாக நடைபெறும் குற்றவியல் விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

அமெரிக்காவின் தடை உத்தரவை முறியடிப்பதில் சிறீலங்கா தீவிரம் – அவசர சந்திப்பு

நேற்று (16) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ்யை அழைத்துள்ள சிறீலங்கா அரசு தனது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவின் அறிவித்தல் தொடர்பில் குணவர்த்தனா தனது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமையாக உள்ளபோதும், இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி சிறீலங்கா அரசு அமெரிக்க தூதுவரை அழைத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் அனைத்துலக நடைவடிக்கை பிரிவின் 7031சி பிரிவின் அடிப்படையில் இந்த தடையை கொண்டுவந்துள்ளதாக பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்காவின் அறிக்கை வெளிவந்துள்ளதாகவும், அது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுப்படுத்தலாம் எனவும் சிறீலங்கா அரசு அச்சம் அடைந்துள்ளதாக கொழும்பு வாரஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் தடை சிறீலங்காவுக்கான ஆயுத உதவிகள் படைத்துறை உதவிகளை தடை செய்யவில்லை எனவும், வேறு அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

சவுதியின் நவீன போர் விமானம் யேமனில் வீழ்ந்தது

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினரின் அதிநவீன ரொனெடோ ரக போர் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) யேமனில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த சமயம் வீழந்து நொருங்கியுள்ளது.

இந்த விமானத்தை தாம் தரையில் இருந்து வானுக்கு செல்லுத்தும் அதிநவீன ஏவுகணை மூலம் சுட்டு வீழ்தியதாக யேமனில் போராடி வரும் கௌத்தி ஆயுதக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விமானம் வீழ்ந்ததை அறிவிப்பதில் தாமதம் செய்த சவுதி அதிகாரிகள் பின்னர் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். வடக்கு அல் ஜவா பகுதியில் போர் விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரொனெடோ ரக அதிநவீன விமானம் சுடப்பட்டிருந்தால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும், அது கள நிலமையை மாற்றிவிடும் எனவும் அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர் மார்வன் பிசாரா தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினரின் ஆதரவுடன் யேமன் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கௌத்தி சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை (14) தெரிவித்திருந்தனர். அதே இடத்தில் தான் விமானம் வீழ்ந்துள்ளது.

 

ஐ.நா உடன்பாட்டில் இருந்து வெளியேறுமாறு சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றிய 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேற வேண்டும் என சிறீலங்காவின் தேசிய இணைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை உப தலைவராக கொண்ட இந்த சபை மேலும்தெரிவித்துள்ளதாவது:

புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா இந்த ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த தீர்மானத்தை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீராவே ஏற்றுக் கொண்டிருந்தார். இது அமெரிக்கா மேற்கொண்ட சதி நடவடிக்கையாகும்.

வடக்கு கிழக்கு மக்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதி மக்கள் கோத்தபாயாவுக்கே வாக்களித்துள்ளனர். அவர் 13 இலட்சம் அதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிறீலங்கா அரசு தனது முழு வழங்களையும் ஒருங்கிணைத்து ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில் இருந்து வெளியேற முற்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் – பிரான்ஸில் ஒருவர் பலி

உலக மக்களையும், சீனாவையும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பிரான்ஸ் இல் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கு வெளியில் இடம் பெற்ற நான்காவது மரணம் இது என்ற போதும், ஆசியா கண்டத்திற்கு வெளியில் நிகழ்ந்த முதலாவது மரணம் இதுவாகும்.

பிரான்ஸிற்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த 80 வயதான பெண்மணியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் தனது மகளுடன் வந்திருந்தார். மகள் தற்போது குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம் இந்த வைரஸின் தொற்றுதலுக்கு உள்ளான மேலும் 11 பேர் பிரான்ஸ் இல் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் 143 பேர் மரணமடைந்துள்ளதாகவும், இதுவரை 1526 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 67000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் நேற்று (15) தெரிவித்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 66,492 பேர் சீனாவிலும் ஏனையோர் சீனாவுக்கு வெளியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வூகன் வைரஸ் எனப்படும் இந்த கொரொனா வைரஸ் ஆபிரிக்காவிலும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

புறுண்டியில் மனிதப் புதைகுழி – 6,000 சடலங்கள் மீட்பு

புறுண்டியின் கருசி மாகாணத்தில் கண்டறியப்பட்ட ஆறு மனிதப் புதைகுழிகளில் இருந்து 6,032 சடலங்களின் எலும்புக் கூடுகளும், உடைகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் உள்ள மனிதப் புதைகுழிகளை கண்டறியும் அரசின் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமாகியதில் இருந்து தற்போது வரையிலும் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவே மிகவும் பெரியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடைகள், எலும்புக்கூடுகள் மற்றும் சன்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் உண்மை மற்றும் இனநல்லிணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் அதிகாரி பிரெ கிளவெர் டைகரியே தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு 1885 ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சி நடைபெற்ற காலத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நிறைவடைந்த காலப்பகுதி வரையிலான காலப்பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றது.

இதுவரையில் 4000 புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், படுகொலை செய்யப்பட்ட 142,000 மக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புறுண்டி நாட்டின் சனத்தொகை குடு மற்றும் ருற்சி ஆகிய இரு இனங்களைக் கொண்டது. இரு இனங்களுக்குமிடையில் இடம்பெற்ற போரில் 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, எதிர்வரும் மே மாதம் அங்கு தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், வன்முறைகள் இடம்பெறலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

 

படைத்துறை ஒத்துழைப்புக்களை பலப்படுத்த இஸ்ரேல் ஆர்வம்

சிறீலங்காவுடன் படைத்துறை ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தி புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ள விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவுக்கான இஸ்ரேலின் தூதுவர் கலாநிதி ரொன் மல்கா சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை சந்தித்தபோதே இதனை தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் விவசாயம், கல்வி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் கணணி பாதுகாப்பு பொறிமுறை ஆகிய தறைகளில் சிறீலங்காவை பலப்படுத்த இஸ்ரேல் உதவிகளை புரியும்.

இந்தியாவின் விவசாயத்துறைக்கு இஸ்ரேல் வழங்கிய உதவிகளால் பெருமளவான விவசாயிகள் பலனடைந்துள்ளதாக இஸ்ரேல் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.