Home Blog Page 141

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் விசாரணை கோரி நீதியமைச்சருக்கு கடிதம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தும் கூட, குறித்த விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாக காணாமல் போனோர் குடும்ப ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் இயங்கி வரும் காணாமல் போனோர் குடும்ப ஒன்றியம் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக் கொடுப்பனவாக தலா 2 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தின் ஊடாக நீதியமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக் கொடுப்பனவை வழங்கல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் செயற்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்காக 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்குப் போதுமானது எனினும், கடந்த 6 மாதகாலத்தில் இடைக்கால நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த 6 மாதகாலத்தில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு விசாரணையைக் கூட மேற்கொள்ளவில்லை.  இவ்விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான செயன்முறை தொடர்பில் நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமைச்சரவை தாமதப்படுத்தியிருப்பதே இதற்குரிய பிரதான காரணமாகும் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – அரசாங்கம் தீர்மானம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்தன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். 2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை 1,100,000 ரூபாவாகும். மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு 650,000 ரூபா எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை 1,600,000 ரூபாவாகும். 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு 950,000 ரூபா எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை 1,500,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், 340 சதுர அடி வீட்டினை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை 900,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிருசாந்தி பாலியல்வன்முறை படுகொலை வழக்கு: கொலையாளிகள் மனு நிராகரிப்பு

கிருசாந்தி குமாராசுவாமி பாலியல்வன்முறை படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்வதற்கும்  அனுமதிமறுத்துள்ளது.

முதல் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச உட்பட தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவர் தாங்கள் பல வருடங்களாக மரணதண்டனை கைதிகளாக உள்ளதாக  தெரிவித்து அடிப்படை  உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

தங்களின் மரணதண்டனையை நிறைவேற்றால்,தங்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் அல்லது தங்களிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றவேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டிசில்வா அவர்களின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மரணதண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடுரமானது மனிதாபிமானற்றது என தங்கள் மனுவில் தெரிவித்திருந்த அவர்கள் இது தங்கள் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என குறிப்பிட்டிருந்தனர்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜராகிய சிரேஸ் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கடும் ஆட்சேபணைகளை முன்வைத்தார்.

பொதுமன்னிப்பு வழங்குவது என்பது முற்றுமுழுதாக ஜனாதிபதியின் விருப்பமே எந்தவொரு குற்றவாளியும் அதனை சட்டபூர்வ உரிமையாக கருதமுடியாது என அவர் தெரிவித்தார்.

இந்த மனுகாலக்கெடுவிற்கு உட்பட்டது மேலும் மனுதாரர்கள் நல்லெண்ணத்தை உருவாக்கும் விதத்தில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நீதிபதிகள் குழுவினர் இந்த ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டதுடன் மனுவை நிராகரிக்க தீர்மானித்தனர்

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க்!

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார்.

ந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார்.

இந்த கப்பல் கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்டு செல்கின்றோம் ஆனால் இது குறியீட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரீடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

நாங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்பதால் இதனை செய்கின்றோம்,ஏனென்றால் நாம் முயற்சிப்பதை இழக்கும் தருணம் நம் மனித நேயத்தை இழக்கும் தருணம் என புறப்படுவதற்கு முன்னர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த பணி எவ்வளவு ஆபத்தானதாகயிருந்தாலும் இனப்படுகொலை செய்யப்படும் மக்கள் குறித்து முழு உலகமும் மௌனமாகயிருப்பது போல இது ஆபத்தானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இடைநடுவில் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் ஏழு நாட்களிற்குள் நாங்கள் காசாவை சென்றடைவோம் என செயற்பாட்டாhளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்!

புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

அதேவேளை அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதி கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் தீர்க்கப்படும் எனவும், இச்சம்பவத்தை குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிரிக்குமாறும் அவர் சகல தரப்பினரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய  75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, ‘இலங்கைக்குத் திரும்பிய அகதி அந்தஸ்த்தைக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, குடிவரவுச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நான் அறிவேன்.

எமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளால் அக்காலப்பகுதியில் பாரிய புலம்பெயர்வு இடம்பெற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்வாறான நபர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், உரிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அருண் ஹேமசந்திர அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது பதிவாகியுள்ள சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் சகல தரப்பினரும் இவ்விவகாரத்தைப் பொறுப்புவாய்ந்த முறையில் அணுகவேண்டும் எனவும், இதனைக் குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வேண்டுகோள்விடுத்துள்ளார்.

நாட்டை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்

அவுஸ்திரேலியாவின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவருடன் 15 பேர் கொண்ட குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

வருகை தந்த தூதுக்குழுவினரை விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர்களுக்கான ஓய்வறையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழு வரவேற்றனர்.

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் அவரது தூதுக்குழுவும், நாட்டில் தங்கள் உத்தியோகபூர்வ பணிகளை முடித்துக்கொண்டு, இன்று செவ்வாய்க்கிழமை (3) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட உள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் – சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

உயிர் அச்சுறுத்தல் காரணமாக  இந்தியா சென்றிருந்த இலங்கை தமிழர்கள் மீளவும் நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்துவதற்கும், இதற்காக அவசர அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

போரின் போது, ​​வடக்கில் வாழ்ந்த ஒரு குழு மக்கள் பாதுகாப்பு தேடி இந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கு சென்று தற்போது அங்குள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் வேலைகளைப் பெறுவதிலும், இந்தியர்களாக வாழ்வதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவுக்குச் சென்ற மக்கள் போரினால் இடம்பெயர்ந்து வறுமையில் வாடும் சாதாரண மக்கள்.

போரின் போது தங்கள் உயிருக்காக இந்தியாவுக்கு சென்றவர்கள் ஐரோப்பாவிற்கோ அல்லது வேறு எங்கும் பயணிக்க முடியவில்லை.

தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டங்கள் இந்த மக்கள் நாடு திரும்புவதற்கு ஒரு தடையாக மாறிவிட்டதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அதன்படி, விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணையைக்கோரும் ஐ.நா

உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குட்டெரெஸின் அறிக்கையைத் தொடர்ந்து, இஸ்ரேலும் விமர்சனங்களை முன்வைத்தது.

ஹமாஸ் குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் ஏன் அமைதியாக இருந்தார் என்பது இஸ்ரேலின் கேள்வி. காசாவில் மோதல் தீவிரமடைந்தாலும், சர்வதேச ஊடகங்களை அந்தப் பகுதிக்குள் அனுமதிக்க இஸ்ரேல் இன்னும் தயாராக இல்லை.

காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலில் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள், தொடர்ந்து சித்திரவதை முகாம்களாக மாறி வருகின்றன.

மே 27 அன்று தொடங்கிய காசா மனிதாபிமான அறக்கட்டளை மையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையம், இஸ்ரேலிய குண்டுவீச்சில் நேற்று அழிக்கப்பட்டது.

காசாவை முழுமையாக சுற்றி வளைக்கும் இலக்கின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அனைத்து முனைகளிலும் இராணுவ முன்னேற்றத்திற்கு பதிலளித்துள்ளார்.

இதற்கிடையில், காசாவிற்கு உதவிக்காக புறப்பட்ட சர்வதேச குழுவில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கும் ஒருவர்.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர் லியாம் கன்னிங்ஹாம் அடங்கிய குழு, ஞாயிற்றுக்கிழமை இத்தாலிய துறைமுகமான கட்டானியாவிலிருந்து புறப்பட்டது.

செம்மணிப் புதைகுழியில் 7 மனித உடலங்களின் பாகங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணியில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.Unknown 3 செம்மணிப் புதைகுழியில் 7 மனித உடலங்களின் பாகங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்த, -இந்து மாயானத்தில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில், எழுமாற்றாகத் தோண்டப்பட்ட போது நான்கு வெவ்வேறு இடங்களில் நேற்று  07 மண்டையோடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேசசபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995,1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நீதிவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மே மாதம் 15ஆம் திகதியளவில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இரு நாள்கள் அகழ்வின் பின்னர் மழை காரணமாகப் பணிகள் கைவிடப்பட்டன. நேற்றையதினம் மீண்டும் அகழ்வுகள் இடம்பெற்றன. ஆனால், ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதியில் தண்ணீரும் சேறும் இருந்ததால் குறித்த புதைகுழியின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று எழுமாற்றாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே, நான்கு பகுதிகளில் மண்டையோடுகளும், இன்னும் சில மனிதச் சிதிலங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதிவான் ஆ.ஆனந்தராஜா அகழ்வுப் பணிகளைக் கண்காணித்துவருகின்றார். காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமையை புறக்கணிக்கும் மலையக கட்சிகள் -மருதன் ராம்

தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலை யில், உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளது. மலையக பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் தனித்து ஒரு கட்சியினால் ஆட்சியமைக்க முடி யாத நிலை காணப்படுகிறது. அவ்வாறாயின் மலையக கட்சிகள் ஒன்றிணைந்தால் உள்ளூ ராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க முடியும்.
பல சபைகளை இணைந்து கைப்பற்றும் சாத்தியங்கள் இருந்தாலும் கூட பல காரணங் களுக்காக மலையகக் கட்சிகள் தம்மிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தாமல் பிளவுபட்டு நிற்பது போன்று தெரிகின்றது. தேர்தல் முறைமை மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தவதற்காக மலையகத்தில் இயங்கும் பிரதான கட்சிகள் சில இடங்களில் பிரிந்தும் சில இடங்களில் இணைந்தும் இன்னும் சில இடங்களில் தேசிய கட்சிகளுடன் இணைந்தும் போட்டி யிட்டிருந்தன. இதன்படி, அந்த கட்சிகள் கணிச மான வாக்குகளை பெற்று பல ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
அதேநேரம் தேசிய மக்கள் சக்திக்கு பெருந்தோட்ட மக்களின் ஆதரவு இல்லை என்று காண்பிப்பதற்கும் மலையக கட்சிகள் முயற்சித்திருந்தன. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதனை அடுத்து இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்குப்பிறகு தேசிய மக்கள் சக்தியின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேர்தலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் விளங்குகின்றது.
பெருந்தோட்ட தமிழ் சமூகத்தினர் அதிக மாக வாழ்ந்து வரும் துவரெலியா மாவட்டத்தில் உள்ள முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சிய மைப்பதற்கு, மலையகக் கட்சிகள் மற்றும் அவை பெற்ற வாக்குகள் சவாலாக உள்ளன. எவ்வாறாயினும் மக்களிடம் இருந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் சாணக்கிய அரசியல் நகர்வை மலையகக் கட்சிக ளிடத்தே காண முடியவில்லை. தொடர்ந் தும் தனித்து நின்று செயற்படுவதற்கே மலைய கட்சிகள் விரும்புவதாகத் தெரிகின்றது. இந்த விடயம் தொடர்பில் சில கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
சில சபைகளில் தீர்மானிக்கும் சக்திக ளாக சுயேட்சைக் குழுக்கள் இருப்பதால் அவர்கள் யார் பக்கம் தாவுவதற்கு தயாராக இருக்கின்றனர் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
பிரதான மலையக கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலா ளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன சில சபைகளை கைப்பற்று வதில் இரகசியமான வியூகங்களை வகுத்து வருகின்றன. எனினும் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் நகர முதல்வர் போன்ற பதவிகளுக்காக அந்த கட்சிகளுக்கிடையே பிளவுகள் உருவாகியுள்ளமை அறியமுடிகின் றது. சில நேரங்களில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சபைகளில் செயற்படு வதற்கு சில கட்சிகள் முன்வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. மலையக அரசியலில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்ற வர லாறும் உண்டு.
இருப்பினும் இதற்கு முன்பு ஆட்சியமைத்த தேசிய கட்சிகளை விட, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கொள்கைகள் வேறுபட்டவை என்பதை மக்களும் அரசியல் கட்சிகளும் ஏற்கனவே உணர்ந்துள்ளனர். அதனை கருத்திற் கொண்டு மலையக கட்சிகள் அடுத்த கட்ட திட்டங்களை வகுப்பது நல்லது. அதேநேரம் மக்களால் நிராகரிக்கப்பட்ட எந்த கட்சியுடனுடன் கூட்டிணைய போவ தில்லை என்று தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நன்கு அறிந்துள்ள போதிலும் தேசிய மக்கள் சக்திக்கு மலையக கட்சிகள் ஆதரவளிக்க தீர்மானித்தால் அதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
அதன்படி, ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயற்பட்டு பிரதேச அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதன் ஊடாக முன்னைய ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மலையக கட்சிகள் நினைப்பதற்கும் இடமுண்டு. அதேநேரம் உள்ளூராட்சி சபைகளில் தமக்கு ஆதரவு கரம் நீட்டுமாறு தேசிய மக்கள் சக்தி திரைமறைவில் மலையகக் கட்சி களிடம் பேச்சு நடத்தி வருவது புதிய விடயமல்ல. ஆனால் கடந்தகால தவறுகளை மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி துணை போகுமாயின் அது தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.
பல தேர்தல் மேடைகளில் கடந்த கால அரசியல்வாதிகளை குறை கூறும் கலாசாரம் உண்டு. ஆனால் அவ்வாறான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் என்பது எந்த சந்தர்ப்பத்திலும் இடம்பெற்றதில்லை. அதற்காக எவரும் குரல் எழுப்புவதும் இல்லை. ஊழலுக்குகெதிராக செயற்படுதலே எமது ஆட்சியின் பிரதான குறிக்கோள் என்ற வாக்குறுதியுடன் மக்கள் வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கேற்ப முன்னாள் பிரபல அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் அரசாங்கம் கைது செய்து வருகின்றது. ஆனால் தேசிய மட்டத்தில் அவ்வாறு செயற்படும் தேசிய மக்கள் சக்தியானது உள்ளூரில் கறை படிந்த கரங்களையுடையவர்களுடன் கைகுலுக்கி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை கைப்பற்றப் போகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மலையக கட்சிகளின் இருப்பு?
இவை எல்லாவற்றையும் விட மலையகக் கட்சிகளின் எதிர்கால அரசியல் இருப்பு குறித்த கேள்வியும் இங்கு தவிர்க்க முடியாதது. நாட்டில் இடம்பெற்றுள்ள மூன்று தேர்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள மலையகக் கட்சிகள் கடந்த காலத்தில் தங்களின் வசம் வைத்திருந்த மக்களின் ஆதரவை கணிசமான அளவு இழந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் மாத்திரமின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் பெருந்தோட்ட மக்களின் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதனை அடிப்படையாகக் கொண்டே தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது என்பது இதனூடாக புலனாகியுள்ளது. குறித்த சபைகள் சிலவற்றில் தனித்தோ அல்லது ஒன்றிணைந்தோ ஆட்சிய மைக்கப் போகும் மலையகக் கட்சிகள் தம்மை எவ்வாறு அடுத்த தேர்தலுக்கு தயார்ப்படுத்தப் போகின்றன என்பது முக்கிய விடயம். சில சபைகளை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மலையக கட்சிகள் ஆதரவு வழங்குமாயின் அது அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அந்த கட்சிகளின் இருப்பை பாதிக்கும்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்கள் ஆர்வமாக வாக்களிக்கவில்லை. அடுத்த ஒரு வருட இடைவெளிக்குள் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றாலும், என்ன வாக்குறுதிகளை முன்வைத்து மலையகக் கட்சிகள் அல்லது கூட்டணிகள் மக்களிடம் சென்று வாக்குக் கேட்டு நிற்கப்போகின்றன? அவற்றை கேட்பதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கப்போகின்றனர்? என்று கேள்விகளும் உள்ளன.
மாறாக பிரதான மலையக கட்சிகள் ஒன்றிணைந்து இடைப்பட்ட காலப்பகுதியில் உள்ளூராட்சிமன்றங்களின் ஊடாக குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அது சிறந்த முடிவாக இருக் கும். மறுபுறம் பெருந்தோட்ட மக்களின் பிரதான தெரிவாக மலையக கட்சிகள் மீண்டும் திகழ வேண்டுமாயின் போலி காரணங்களை துறந்து மலையகக் கட்சிகள் மக்களுக்காக ஒன்று படல் அவசியமான விடயமாக மாறியுள்ளது. இதேவேளை கட்சிகளுக்கு இடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகளையும் பிளவுகளை யும் ஆளும் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. எனவே சில சபைகளில் எதிரணிகள் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்காவிடின் தனக்கிருக்கும் பெரும் பான்மை ஆசனங்களால் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்க முடியும் என்பது முக்கிய விடயமாகும்.