பிலிப்பைன்ஸ் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விபத்து நடந்துள்ளது.
ஜோலோ தீவில் உள்ள விமான ஓடு பாதையின் எல்லையைக் கடந்து இந்த விமானம் ஓடியபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது விமானத்தில் 92 பேர் இருந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் உடனடியாக 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.