Home உலகச் செய்திகள் பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானம் விபத்து – இதுவரையில் 50 பேர் பலி

பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானம் விபத்து – இதுவரையில் 50 பேர் பலி

536fe580 1bb5 48a3 b2e7 decabab7bf1e பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானம் விபத்து - இதுவரையில் 50 பேர் பலி

92 பாதுகாப்பு படையினருடன் பயணித்த  பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில்  ஞாயிற்றுக்கிழமை காலை   இந்த விபத்து நடந்துள்ளது.

ஜோலோ தீவில் உள்ள விமான ஓடு பாதையின் எல்லையைக் கடந்து இந்த விமானம் ஓடியபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது விமானத்தில் 92 பேர் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் உடனடியாக 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version