Home செய்திகள் இந்தியத் தோ்தல்; தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு ஆரம்பம்

இந்தியத் தோ்தல்; தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு ஆரம்பம்

3 இந்தியத் தோ்தல்; தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு ஆரம்பம்தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார்.

அதேபோல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வாக்கை செலுத்தினார். குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும் என்றார்.

Exit mobile version