ரம்புக்கனை சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த – HRW வேண்டுகோள்

ரம்புக்கனை சம்பவம் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதன் மூலம் அளவுக்கதிகமான பலத்தை காவல்துறையினர் பயன்படுத்தியமை குறித்து உடனடி பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tamil News