ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள் வெளியேற உதவுங்கள்: அவுஸ்திரேலிய அரசுக்கு செனட் குழு பரிந்துரை

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்: ஆப்கானிய அகதிகள் குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய செனட் குழு, அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே உள்ள ஆப்கானிய தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை எப்படி நிரந்தரமாக மீள்குடியமர்த்தலாம் என்பதை அறிய அரசாங்கம் தனது கொள்கைகளை மதிப்பாய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலியாவுக்காக பணியாற்றிய ஆப்கானியர்களையும் ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்களையும் வெளியேற்றுவதற்கான அவசர உதவியை அவுஸ்திரேலிய அரசு வழங்க வேண்டும் என செண்ட் குழுவின் அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது.