பிரதமர் மகிந்த ,நாமல் ராஜபக்ச உட்பட பலருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை

மகிந்த ராஜபக்ச நாமல் ராஜபக்ச உட்பட 17பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.

ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ள நபர்களின் பட்டியல்:

மகிந்த ராஜபக்ச

நாமல் ராஜபக்ச

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

பவித்ரா வன்னியாராச்சி

சஞ்சீவ எதிரிமான்ன

காஞ்சன ஜெயரத்ன

ரோஹித அபேகுணவர்தன

சி.பி.ரத்நாயக்க

சம்பத் அத்துகோரள

ரேணுகா பெரேரா

சனத் நிஷாந்த

நிஷாந்த ஜெயசிங்க

அமித் அபேவிக்ரம

புஷ்பலால்

மகிந்த கஹந்தகம

திலித் பெர்னாண்டோ

தேசபந்து தென்னகோன்

Tamil News