உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதி கோரி,  கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக் கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாரபட்சமற்ற நீதி விசாரணைக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகமும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.