தேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம்;திங்கள்வரை காலக்கெடு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என ஐமச தலைமையகத்தில் இரவுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திரு.மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார் .