இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்: கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த போது கைது செய்யப்பட்ட  12 தமிழக  மீனவர்ளுக்கும் எதிர்வரும் 25ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டிய நிலையில்  மீன் பிடித்துக்கொண்டிருந்த 12தமிழக  மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும்  கடந்த சனிக்கிழமை கடற்படையினர் கைப் பற்றியிருந்தனர்.

குறித்த 12 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்த நிலையில்,  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்  முற்படுத்தப்பட்டனர்.இதையடுத்து  இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் 12பேரும் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.