சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்தச் சுரங்கப் பாதையில் எப்படி வெள்ளம் புகுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரம் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வரும் பகுதி ஒரு நீர்த் தேக்கத்துக்கு அருகே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை விசித்திரமான குரல்கள் கேட்பதாக அங்கு பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.