ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, ராணுவத்தின் டார்க் ஈகிள் அதிவேக ஏவுகணையை மத்திய கிழக்குக்கு அனுப்புமாறு சென்ட்காம் (CENTCOM) கேட்டுக் கொண்டுள்ளது.
டார்க் ஈகிள் என்பது அமெரிக்க ராணுவம் முதன்முதலாகப் பயன்படுத்திய அதி வேக ஆயுதமாகும். அதிகாரப்பூர்வமாக நீண்ட தூர அதிவேக ஆயுதம் (Long-Range Hypersonic Weapon) எனப் பெயரிடப்பட்டுள்ள இது, மாக் 5-க்கு (Mach 5) மேற்பட்ட வேகத்தில் பயணிக்கும் ஒரு சறுக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது, இதன் வரம்பு 1,725 மைல்களுக்கு மேல் ஆகும். தற்போதைய ஆயுதங்களால் சரியான நேரத்தில் சென்றடைய முடியாத அல்லது ஊடுருவ முடியாத, அதிக மதிப்புள்ள, நேர உணர்திறன் கொண்ட இலக்குகளைத் தாக்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வலுப்படுத்தப்பட்ட நிலத்தடி வசதிகள், ஆழமாகப் புதைக்கப்பட்ட கட்டளைப் பதுங்கு குழிகள், வழக்கமான ஆயுதங்கள் தாக்குவதற்கு முன்பே நகரும் நடமாடும் ஏவுகணை ஏவுதளங்கள் போன்றவை இதன் இலக்குகளாகும். இந்த அமைப்பு 2025-ஆம் ஆண்டில் மட்டுமே அதிகாரப் பூர்வமாகச் செயற்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ளவற்றின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.



