மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐ.நா. வரவேற்பு

அமைதி காக்கும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஆழப்படுத்துவதற்கு இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் இணங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃபிரெஞ்ச் (Marc-André Franche), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

இலங்கை தொடர்பான பிரேரணையில் முக்கிய விடயங்கள் திருத்தப்பட்டுள்ளது…

பிரித்தானியா தலைமையிலான மையக்குழு நாடுகளால் அண்மையில் முன்மொழியப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, மோதல்கள் என்ற சொல்லின் ஊடாக இனப்பிரச்சினை என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் சர்வதேச மனிதாபிமானச்...

சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது. இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று...

புதினை தடுத்து நிறுத்தாவிட்டால், ஐ.நாவில் பேசிய ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் - ரஷ்யா போர் ஏற்கெனவே “ஏராளமானோரை சென்றடைந்துவிட்டதாக,” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார், இப்போது அதற்கான (போரை நிறுத்துவதற்கான) பொறுப்பு உலக தலைவர்களின் கையில் உள்ளது என அவர் தெரிவித்தார். ஐ.நா பொதுச்சபையில்...

காற்றாலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிடுக: அரசுக்கு செல்வம் எம்.பி. எச்சரிக்கை!

மன்னாரில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள காற்றாலை மின்னுற்பத்தித் திட்டங்களை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் போராட்டம் தீவிரமாகும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று...

கண்ணிவெடி அகற்றல் முகமாலையில் நிறைவு!

முகமாலையில் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் தற்போது முற்றாக நிறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போரின் பின்னர், முகமாலை, வேம்பொடுகேணி, இத்தாவில், கிளாலி ஆகிய பகுதிகளில் இருந்து கண்ணிவெடி அகற்றும் பணிகள்...

ராஜபக்சக்களின் ஆட்சியில் முழுச் சுதந்திரம் இருந்தது: அம்பிட்டிய சுமண ரத்னதேரர் புலம்பல்!

ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு - கிழக்கில் முழுச்சுதந்திரத்துடன் செயற்பட்டோம். தற்போதைய, அரசின் ஆட்சியில் அவ்வாறு செயற்பட முடியாதுள்ளது - இவ்வாறு தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண...

போர்த்துக்கல், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர சந்தித்து பேச்சு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா (Marcelo...

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ்  அதிகாரியை  தமிழகம் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ்   நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 5.9.2020-ம்...

அனைத்துப் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலக்கு – பிரதமர் ஹரிணி

அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் இலக்கு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான...