தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்கும் கர்தினால்ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இம்முறை நிகழ்வுகளில் கலந்து கொள்ளமாட்டார்.

கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தக வலை வெளியிட்டார்.

அத்துடன், சுதந்திர தினத்தன்று பேராயரின் பங்கேற்புடன் நடத்தப்படும் தேவ ஆராதனையும் இடம்பெறாது எனவும் அவர் கூறினார். பொரளையில் தேவா லயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற வில்லை என சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பை வெளியிடும் விதத்திலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.