நிதியமைச்சர் பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல் வேண்டும்! வலியுறுத்துகிறார் சுரேஷ்

பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல்
கள்ளச் சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல் வேண்டும். விசாரணை செய்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக விய லாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –

கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரி யாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்கப் பிரஜையுமான பஸில் ராஐபக்ச கூறியிருக்கின்றமை தற் போது சர்ச்சையாகியுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை, சுயாட்சி போன்றவற்றை மையமா கக் கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சு மூலம் பேசித் தீர்க்கப்பட்டிருக்க வேண் டிய விடயம். ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாகப் போராட்டத்தை முன் னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யுத் தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பல கோடிக ளைச் செலவிட்டு ஆயுதங்களைக் கொள்வனவு செய் தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வடகொரியாவில் இருந்துத் ஆயு தங்களை வேண்டியதாகக் கூறுகின்றார்கள்.

வட கொரியாவில் இருந்து பல மில்லியன் டொலர்களுக்குக் கடன்களாக இராணுவத் தளவாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த இராணுவத் தளவாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், பஸில் ராஜபக்rவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்தவரும் அமெரிக்கப் பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கும் தெரியும். அன்றைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்கப் பிர ஜையாக இருந்தவர்கள். அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர் களைக் கடத்தி அங்கிருந்து ஆயுதங்களைக் கொள் வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கின்றார்.

நிச்சய மாக அமெரிக்க அரசு பஸில் ராஜபக்சவை மாத்திர மன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழி நடத்திய தலைவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது. யுத்தத் துக்காகக் கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனிதப் படுகொலைக்கும், மனித உரிமை மீறலுக்கு மாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப் பட்டது என்பதுதான் முக்கியமான விடயம். ஆகவே, இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப் போகின்றமை கிடையாது.

ஆனால், இவற்றை மேற் கொண்டது அமெரிக்க பிரைஜைகள் என்ற அடிப்படை யிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந் தப்பட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பஸில் ராஜபக்rவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெ ரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம். ஆகவே, இவ்வாறான நடவடிக்கைகளைக் கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றி யதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலை யில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது, எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை இருக் கிறது நாளாந்தம் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற் பட்டுக் கொண்டிருக்கிறது,

அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கி றது. ஆகவே, இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள் ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது. ஆகவே, இது தொடர் பில் முழுமையான விசாரணை தேவை. ஒரு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்கப் பிரஜையை இவ்வாறான நடவடிக்கை களை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசா ரணை செய்து அமெரிக்க அரசு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொள் கிறோம். – எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News