இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது- ரணில்

இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜுலை 18ஆம் திகதி முதல், எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவசரகால சட்டம் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ‘தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது ரணில் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.