அனைத்து தரப்பினரும் சீர்திருத்த செயல்முறைக்கு பங்களிக்க வேண்டும் -அமெரிக்கத் தூதுவர்

இலங்கை தனது சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுகையில், சீர்திருத்த செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கும் நல்லாட்சியை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கும் அனைத்துத் தரப்பினரும் குரல்களும் நிபுணத்துவத்தை வழங்குவது முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் இருவரும் இன்று காலை சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தூதுவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.