ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் அறிவிப்பு

சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியமாக இருப்பதால்,  தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்பிற்கே எமது ஆதரவு வழங்கப்படும் என்றும், இந்த உறுதிமொழி இந்தியாவின் மத்தியஸ்தத்துடனேயே நடைபெற வேண்டும் என்றும் தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளரின் சந்திப்பின் போதே அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் வாக்குகளையும் இணைத்து  எமக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொள்ளலாம்.  என்றும் தெரிவித்தார்.