அமெரிக்காவிலிருந்து மைத்திரிக்கு வந்த கடிதம்

மிலேனியம் நிதிய உடன்பாட்டிற்கு அனுமதி வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார்.

இந்த உடன்பாட்டின் சில பிரிவுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மற்றும் வருத்தங்களைத் தொடர்ந்து, சிறிலங்கா அதிபர் இந்த உடன்பாட்டிற்கு அனுமதியளிக்க மறுத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் தெளிவான விளக்கம் அளித்திருந்தார். இந்த உடன்படிக்கை வெளிப்படையானது என்றும், இது சிறிலங்கா மக்களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதென்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவத்தைக் கொண்ட சிறிலங்கா அதிபர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்ககாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு பற்றி அறிந்திருப்பார் என்பதையும் அவர் அக் கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த உடன்படிக்கை மூலம் கிடைக்கும் 480 மில்லியன் டொலர், அமெரிக்க மக்களிடமிருந்து சிறிலங்காவிற்கு வழங்கப்படும் ஓர் அன்பளிப்பேயாகும். இது கடன் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கடிதத்தில் மிலேனியம் சவால் நிதியம் பற்றி தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.