கிழக்கில் 300 கிராமங்கள் பறிபோனதாக கூறுகிறார் விக்கி

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளதாக, வடமாகாண முன்னாள் ஆளுநர் சி.வி.விக்னேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட விக்னேஸ்வரன், இன்று மகிழுர் கண்ணகிபுரம் கிராம மக்களை சந்தித்தார்.

தமிழ் மக்களின் காணிகள் பறிபோவதுடன், தமிழ் பெண்கள் முஸ்லிம்களாக மாறும் அவலநிலை இங்கு தோன்றியிருப்பதாகவும், இதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்றும் தகவல் தெரிவித்தார்.