சிறிலங்காவில் இராணுவ சீருடைகளுக்கு தடை

சிறிலங்காவில் இராணுவச் சீருடைக்கு ஒத்த சீருடைகளை அணியவோ, விற்பனை செய்யவோ முடியாது என்ற சட்டத்திருத்தத்தை, சிறிலங்கா ஜனாதிபதியும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீருடை கட்டளைச் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவச் சீருடைக்கு ஒத்த சீருடைகளை வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ, அணிவதோ தடை செய்யப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.