கனடாவில் நடைபெறும் ”திருவாளர் தமிழ்க் கனடா 2019”

கனடா மார்க்கம் ஹில்டன் ஹோட்டல் மண்டபத்தில் இன்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ”திருவாளர் தமிழ்க் கனடா 2019” என்ற நிகழ்வு நடக்கவுள்ளது.

கனடாவில் பெண்களுக்காக பல நிகழ்வுகள் நடந்துள்ள போதும், ஆண்களுக்கான எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிகழ்வு முழுவதும் ஆண்களுக்கானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்களின் மனமகிழ்ச்சிக்கான நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா கலந்து கொள்ளவுள்ளார்.  மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் இளைஞர்களின் அறிவு, அழகு, திறமை உள்ள ஒரு இளைஞர் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு ”திருவாளர் தமிழ்க் கனடா 2019” என்ற பட்டம் வழங்கப்படும்.

இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் இந்நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியானது நற்காரியங்களை செய்து வரும் கனேடிய அமைப்புகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக இன்றைய நிகழ்ச்சியின் நிதியானது கனடிய தமிழ் மருத்துவச் சங்கத்திற்கு வழங்கப்படவுள்ளது.