சிறிலங்கா அரச பணியாளர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடைநிறுத்தம்

சிறிலங்கா அரச பணியாளர்களின் ஆடைகள் தொடர்பாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இடைநிறுத்தியுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ளது.

30 வருட பழைமை வாய்ந்த சுற்றறிக்கையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அலுவலக பெண் பணியாளர்கள் சேலை, அல்லது கண்டிய சேலையும், ஆண்கள் காற்சட்டை, மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.