ஆயிரக்கணக்கான புலம் பெயர் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ்ப் பரீட்சை

புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்ச்சோலை அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தமிழ்க் கல்வியும் சேவையும், வெற்றி பெற்று வருவதனை அறிய முடிகின்றது. அதற்கமைவாக  ஐரோப்பா வாழ் புலம்பெயர்ந்தவர்களிடையே நடத்தப்பட்ட தாய்மொழித் தேர்ச்சி பரீட்சை நேற்று நடைபெற்றது.

இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். ஐரோப்பா வாழ் எல்லா நாடுகளிலும் இத் தேர்வு நடத்தப்பட்டது. குறிப்பாக பிரான்ஸ் தலைநகரில் மட்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத் தேர்வில் கலந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.