இலங்கையில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 8 ஆயிரத்து 46 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 814 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,329,288 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் 2,130,422 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.