சம்பந்தன் மருத்துவமனையில் அனுமதி – அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல் நிலை சீரானதால் நேற்று இரவு சாதாரண வார்ட் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

எனினும் அடுத்த சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.