அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகின்றது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியில் போர்க்கப்பல், போர் விமானம் மற்றும் இராணுவ தளபாடங்களை குவித்து வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ”ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியினை நோக்கிப் பயணிக்கிறது.

அமெரிக்காவின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் அடிபணியாது எனக் குறிப்பிட்டார்.